Skip to main content
இந்த கவிதை இளைஞர்களுக்காக அல்ல


முதன் முதலாக

என் காதலை

உன்னிடம் சொன்ன போது ,

நீ சிந்திய புன்னகை

இப்போதும் அதே ஈரத்தோடு

கிடக்கிறது

என் மனக்கிளையில் .


பனி தூவும்

பின்னிரவுப் பொழுதுகளில் ,

நாம் நிகழ்த்திய

முன்விளையாட்ட்டு சிலிர்ப்பில்

அடிக்கடி மூழ்கி விடுகிறேன் .


கலவி முடிந்தும்

காதல் இருந்த

வியர்வைத் தருணங்களில்

அவ்வப்போது

இளைப்பாறிக் கொள்கிறேன் .


பல சமயங்களில்

நாம் பேசிக்கொள்வதே இல்லை ,

அருகருகே அமர்ந்து

மௌனத்தின் மடியில்

இதமாய்த் தலை சாய்ப்பது

நமது வாடிக்கையாய் இருந்தது .


உன் முடிவு

முன்கூட்டியே தெரிந்து விட்ட போது

எனக்காக அழுதவள்

நீ மட்டும் தான் .


நடுக்கூடத்தில்

உன்னைக்கிடத்தி இருந்த போது

சுற்றங்கள் சுற்றி நின்று அழுதன .

மகன்கள் மாரில் அடித்து அழுதனர் .

அமெரிக்கப் பேத்தி

ஆங்கிலத்தில் அழுதாள்

எனக்கு மட்டும் ஏனோ

அழுகை வரவில்லை .


மூன்று வாரங்கள் கழித்து

குளியலறையில் அழுதேன்

குழந்தையைப்போல .


முப்பது வருடங்களுக்கு

முன்பிருந்த ,

பிரம்மச்சர்ய சூன்யம்

எனை மறுபடியும்

ஆட்கொண்டது .


ஒவ்வொரு முறை

சுவாசிக்கும் போதும் ,

உணவு கொள்ளும் போதும் ,

இதய நோய்க்கு

மருந்துண்ணும் போதும் ,

உயிரோடிருக்கும் குற்ற உணர்ச்சியில்

கொஞ்சம் கொஞ்சமாய்

செத்துக்கொண்டிருக்கிறேன் .










Comments

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர