குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013 ல் மழை மழை இனி பெய்யுமா ? உலகம் இனி உய்யுமா ? இனி , மேகம் என்பது வெறும் பஞ்சுதானா ? நிலத்தடி நீர் என்றாலே - அது நஞ்சுதானா ? கயிறு போல இளைத்து விட்டது காவிரி ! வாய்க்காலானது வைகை ! தரிசானது தாமிரபரணி ! ஏட்டளவுதான் எந்தச் சட்டமும் ! உயராது அதனால் எந்த அணையின் நீர் மட்டமும் ! இனி, அளந்தே குடிப்போம் தண்ணீரை ! எதற்கும் கொஞ்சம் சேமித்து வைப்போம் கண்ணீரை ! இனி, வடநாட்டில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டு வரவேண்டும் ! அயல்நாடு போனாலும் அங்கிருந்தும் கொஞ்சம் மொண்டு வரவேண்டும் ! இனி, குழாயடியில் சண்டை வராது ! கைதுடைக்கும் காகித வியாபாரிகள் கோடீஸ்வரர்கள் ! கதிரியக்கக் குளியல் அமலுக்கு வரப் போகிறது ! அழுக்கு ஒட்டாத ஆடைகள் நடைமுறைக்கு வரலாம் ! கடல் நீரைக் குடிநீராக்கும் குட்டி இயந்திரம் வீடுதோறும் விநியோகிக்கப் படலாம் ! கோவில்களில் அபிஷேகத்திற்கு தடை வரும் ! வானிலை அதிகாரிகள் வேலை இழப்பார்கள் ! குடிநீர் வங்கி உருவாகும் ! மழை எந்த நாட்டில் பெய்தாலும் அதை அதிசய நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் ! ' வீட்டுக்கு ஒரு லிட்ட