Skip to main content

Posts

Showing posts from September, 2013
 குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013  ல் மழை    மழை இனி பெய்யுமா ? உலகம் இனி உய்யுமா ? இனி , மேகம் என்பது வெறும் பஞ்சுதானா ? நிலத்தடி நீர் என்றாலே - அது நஞ்சுதானா ? கயிறு போல இளைத்து விட்டது காவிரி ! வாய்க்காலானது வைகை ! தரிசானது தாமிரபரணி ! ஏட்டளவுதான் எந்தச் சட்டமும் ! உயராது அதனால் எந்த அணையின் நீர்  மட்டமும் ! இனி, அளந்தே குடிப்போம் தண்ணீரை ! எதற்கும் கொஞ்சம் சேமித்து வைப்போம் கண்ணீரை ! இனி, வடநாட்டில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டு வரவேண்டும் ! அயல்நாடு போனாலும் அங்கிருந்தும் கொஞ்சம் மொண்டு வரவேண்டும் ! இனி, குழாயடியில் சண்டை வராது ! கைதுடைக்கும் காகித வியாபாரிகள் கோடீஸ்வரர்கள் ! கதிரியக்கக் குளியல் அமலுக்கு வரப் போகிறது ! அழுக்கு ஒட்டாத ஆடைகள் நடைமுறைக்கு வரலாம் ! கடல் நீரைக் குடிநீராக்கும் குட்டி இயந்திரம் வீடுதோறும் விநியோகிக்கப் படலாம் ! கோவில்களில் அபிஷேகத்திற்கு தடை வரும் ! வானிலை அதிகாரிகள் வேலை இழப்பார்கள் ! குடிநீர் வங்கி உருவாகும் ! மழை எந்த நாட்டில் பெய்தாலும் அதை அதிசய நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் ! ' வீட்டுக்கு ஒரு லிட்ட
சமூக முதிர்ச்சி சேர்ந்தாற்போல நான்கு இளைஞர்கள் நடந்து போனால் காட்டாயம் அவர்களிடம் மதுவாசம் ! தகாத வார்த்தைகளால் தந்தையைத் திட்டுகிறான் ஒரு சிரிப்பு நடிகன் ! தியேட்டரில் கைதட்டுகிறார்கள் ! பள்ளிச்சிறுமி , கையில் அலைபேசி , நமட்டுச் சிரிப்பு அடிவயிற்றில் பகீர் ! ஆசிரியர்களை  வேவு பார்க்க மாணவர்களை நியமிக்கும் பள்ளி நிர்வாகம் ! ஜோதிடர்களின் தயவால் தான் இன்னும் கூட்டமிருக்கிறது கோவில்களில் ! காதல் பேசுவது பெண்களுக்குப் பொழுது போக்கு ! இளைஞர்களுக்கு பிறவிப் பயன் ! முகநூலை தடை செய்தால் லட்சக்கணக்கில் தீக்குளிப்பு கட்டாயம் ! அருந்தமிழ் நாட்டில் அடுக்கு மொழியில் ஆங்கிலம் பேசும் ஐந்து வயதுக் குழந்தைக்கு அம்மா என்ற வார்த்தை தெரியவில்லை ! பலே ! பந்தி போடும் வரை தான், கல்யாண வீடுகளில் கூட்டமெல்லாம் ! வரிக்கு விலக்கிருப்பதை உறுதி செய்த பின்புதான் வக்கற்றோரை நோக்கி உதவிக் கரங்கள் நீள்கின்றன ! கற்பு என்பது கெட்ட வார்த்தை ! பாசம் என்பது மூட நம்பிக்கை ! புனிதம் என்பது பைத்தியகாரத்தனம் ! பற்றியெரியும் குடிசையின் முன் குளிர்காய்கிறார்கள் ! ஒளி கொடுக்கும் தீபத்தை ஊதி அணைக்கிறார்கள் ! மாற்று சிந்தனைய
அரண்டவன் கண்ணுக்கு ............. அது ஒரு எதிர்பாராத தோல்வி ! முயற்சியில் வெற்றி கிட்டவில்லை ! நொண்டிச் சமாதானங்கள் மனதில் ஒட்டவில்லை ! வெற்றி மட்டும் வாய்த்திருந்தால்............. விதி மாறியிருக்கும் ! வாழ்வானது வசந்தத்தில் ஏறியிருக்கும் ! ஆகிவிட்டதே நிலை பரிதாபமாக ! ஏதாவது செய்வானா இறைவன் பரிகாரமாக ? தொடங்க வேண்டும் அனைத்தையும் சுழியிலிருந்து ! உயர வேண்டும் மீண்டும் அதள பாதாளக் குழியிலிருந்து ! என்ன செய்து மனதை மாற்றலாம் ? என்னை நானே எப்படித் தேற்றலாம் ? மது ........... அது புளித்துப் போன பழைய போதை ! சூது ........ வேண்டாம் ! வேண்டாம் ! நான் துரியோதனனுமில்லை ! எந்தச் சகுனியும் கூடயில்லை ! மாது .......... அட ! இதைக் கொஞ்சம் யோசித்துத்தான் பார்ப்போமே ! மன்மதனைச் சற்று வாசித்துத்தான் பார்ப்போமே ! எதிர்த்த வீட்டு ஆண்ட்டி எடுப்பாகத்தான் இருக்கிறாள் ! பச்சை சிக்னல் காட்டுகிறது பக்கத்து வீட்டு பருவச் சிட்டொன்று ! எங்கேயோ கிண்டியில் ஒரு அழகு நிலையமாம் ! கொட்டுகிறதாம் அங்கே இன்பத்தின் அருவி ! கொண்டாடுகிறார்களாம் உடம்பை எண்ணைகொண்டு உருவி ! ஆம் ! கட்டாயமாக ..... ஆடவற்குப் பெண்டிர் !
அறை கற்றுக்கொள்ளாதபோது சமைத்த அந்த முதல்சமையலின் ருசி, கற்றுக் கொண்டபிறகு சமைத்த உணவுகளில் இதுவரை கிடைக்கவில்லை ! வெறும் வெங்காயத்தை மட்டுமே நறுக்கித்தரும் சமைக்கத்தெரியாத ஒருவன் எல்லா அறைகளிலும் இருக்கிறான் ! அவன் உண்பான் என இவனும் இவன் உண்பான் என அவனும் இருந்ததில் மீந்து போய் வெளியில் கொட்டும் கலாச்சாரம் அறையினுடையது ! எப்போதெல்லாம் அறையில் அசைவம் சமைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அறையின் அசைவம் சாப்பிடாதவன் ஊருக்குப் போயிருப்பான் ! எல்லா அறைகளிலும் ஏதோ ஒருவன் சதா காதலியிடம் பேசிக் கொண்டேயிருக்கிறான் ! தொலைந்த பொருளுக்கு அறையில் இருப்பவர்களை சந்தேகிப்பது கூடாது ! தண்ணீர் வராதநாட்கள் அறையின் துக்கநாட்கள் ! அறையில் மதுவருந்தும் போது நண்பர்களின் சத்தம் அக்கம் பக்கம் கேட்டு விடக்கூடாதென்று அவ்வப்போது அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருப்பவனின் அவஸ்த்தை அழகானது ! அறையில் ஒருவன் தொலைக்காட்சி பார்க்கிறபோது வருகின்றஉறக்கம் யாருமில்லாத 'அறைத்தனிமையில்' வருவதில்லை ! எப்போது ஒரு அறையின் வரவு செலவுக் கணக்கு அதைப
பார்வையற்றவன் அவன் ஒரு குருடன் ! அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு எங்கிருந்தோ அவன் வந்து சேர்ந்தான் ! என்னைத் தவிர இன்னும் சிலர் அங்கே நின்றிருந்தார்கள் ! நான் பாக்கெட்டைத் தொட்டு சில்லறை இருப்பதை உறுதி செய்துகொண்டேன் ! யாரிடமும் அவன் காசு கேட்காதது கொஞ்சம் உறுத்தலாக  இருந்தது ! கையிலிருந்த குச்சியால் தட்டித் தட்டி தனக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டான் அவன் ! என்னைப் போலவே இன்னும் சிலர் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர் ! அவன் எங்கு போகவேண்டும் ? அவனுக்கான பேருந்து எது ? யாரும் அவனிடம் கேட்கவில்லை ! அவனும் யாரிடமும் கேட்கவில்லை ! நிச்சயம் இந்தஇடத்திற்கு அவன் புதியவன் தான் ! எந்தநம்பிக்கையில் இங்கே வந்து நிற்கிறான் ? யாராவது அவனுக்கு உதவுங்களேன் ! இவனும் வாயைத் திறந்து கேட்கிறானா பார் ! எனக்கும் அவனை அணுக கொஞ்சம் தயக்கமாகஇருந்தது ! எதற்கு வீண் வம்பு ? பவித்ராவுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது ! மறக்காமல் தெருமுக்குக் கடையில் குழந்தைக்கு பேபி பவுடர் வாங்கவேண்டும் ! எனக்கான பேருந்த
பயணம் குறிப்பு : இந்தக் கவிதை பேருந்தைப் பற்றியதல்ல ஊருக்குப் போவதில் உறுதியாக இருந்தால் ஒரு பேருந்தை விட்டாலும் இன்னொரு பேருந்தைப் பிடித்தாவது நாம் ஊருக்குப் போய்விடுவோம் ! பேருந்து உரிய நேரத்திற்கு வரவில்லை ! நம்மைப் போலவே இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள் எனும் போது தாமதித்தாலும் வரவேண்டிய பேருந்து வந்தே தீரும் ! பேருந்து கல்லறை நோக்கிப் போகிறது எனில் பயணம் சுகமாயிருந்து யாதொரு பயனும் இல்லை ! பேருந்து, பூந்தோட்டத்தை நோக்கிப் போகிறது எனில் பயணம் கடினமாயிருப்பதில் பிழையொன்றும் இல்லை ! ஐம்பது பேர் உடன் பயணித்தும் பக்கத்து இருக்கைக்காரனுடன் பேசாதவன் தனியாகத் தான் பயணிக்கிறான் ! எங்கும் நிற்காத பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்தில் ஏறினாலும் அதுவும் ஏதாவது ஒரு இடத்தில் நிற்கவே செய்யும்  ! ஒரே இடத்தில் ஏறி ஒரே இடத்தில் இறங்கினாலும் பயண நோக்கம் ஒருவருக்கொருவர் வேறுபடத்தான் செய்கிறது ! தொலைவு அதிகமாக இருந்தால் பயணச்சீட்டின் விலையும் அதிகமாகத் தான் இருக்கும் ! நிறுத்தம் வருவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை விழித்துக் கொண்