Skip to main content
பயணங்கள் அலுப்பதில்லை








பேருந்து

ஆடி ஆடிச் சென்றது


தாலாட்டுத் தொட்டில் போல !




விடலைப் பெண்ணின்


தாவணித் துணியாய்


சாலைகள்


சீக்கிரம் நழுவின !




எங்களைப்


புறக்கணித்த புறவுலகம்


பின்னோக்கிப் பயணித்தது !




வெளியே


அந்தி மாலையின்


தங்க தரிசனம் !




மாலை நேர


சூரியக் குழந்தை


தவழ்ந்து தவழ்ந்து


தூங்கப் போனது !




வானப் போர்வையில்


முடங்கிப் போனாள்


நிலவுப் பாட்டி !


போர்வை போதவில்லை போலும்


பாதி நரை


பிறையாய்த் தெரிந்தது !




பருவம் வந்த


பாவை ஒருத்தி


பார்வையாலேயே


எனை விழுங்கப் பார்த்தாள்.


நல்ல வேளை


எங்கிருந்தோ பாய்ந்து வந்த


அவளின் சிவப்புக் காவலர்கள்


வேலிஒன்றை


வேகமாய்ப் போட்டனர் .


தலை குனிந்த


அவளின் காலடியில்


அழகாய்ப் பூத்திருந்தது


வெட்கக் கோலம் !!!




கிட்டே அமர்ந்த


கிழவி ஒருத்தி


காவிப் பல்லைக்


காட்டிச் சிரித்தாள் .


அந்தச் சிரிப்பின் மிச்சம்


அழகின் உச்சம் !!!






வீறிட்டழுத குழந்தை ஒன்று


எனைப் பார்த்து


அமைதியானது


அள்ளி எடுத்தேன்


அணைத்துக்கொண்டது !




இது போன்ற


சின்ன சின்ன


பேரின்பங்கள் உள்ளவரை


பயணங்கள் அலுப்பதில்லை !!!






















Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர