மனிதன் என்பவன் ............. ஒரு மங்களகரமான வெள்ளிக்கிழமை ! குளித்துவிட்டு மடியாகக் கோவிலுக்குக் கிளம்பினேன் ! பக்கத்துவீட்டுக் குழந்தை வீறிட்டழுதது ! இருசக்கர வாகனமொன்று சேறிறைத்தது ! எதிரில் வந்தவன் காறி உமிழ்ந்தான் ! கழிவுநீர் ஊர்தி கடந்து போனது ! எவனோ எவனையோ திட்டிய கெட்டவார்த்தை காற்றுவாக்கில் காதில் வந்தது ! இனவிருத்தியில் இரு நாய்கள் ! தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி ! பக்கத்தில் பன்றியிறைச்சி ! குடித்துவிட்டு ஒருவன் வாந்தியெடுத்தான் ! கோவிலில் வாங்கிய பூ வாடியிருந்தது ! ஒரு கிழிந்த நோட்டு கைக்கு வந்தது ! சில்லறை இல்லையாம் ! நுழையும்போதே வலதுகால் தடுக்கியது ! போடாத காசிற்குப் பிச்சைக்காரி சபித்து அனுப்பினாள் ! உள்ளே கொடுங்கூட்டம் ! வாங்கிய விளக்கில் திரியைக் காணவில்லை ! வரிசையில் ஒருவன் காலை மிதித்தான் ! கொடுத்த தேங்காய் அழுகிவிட்டது ! தரிசனம் காணும்போது தலைகள் மறைத்தன ! ஒற்றும்போது கற்பூரம் அணைந்தது ! அந்தக்கிழிந்த நோட்டை அய்யர் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுத்தார் ! பாதி வரிசையில் பிரசாதம்