Skip to main content

Posts

Showing posts from 2013
மனிதன் என்பவன் ............. ஒரு மங்களகரமான வெள்ளிக்கிழமை ! குளித்துவிட்டு மடியாகக் கோவிலுக்குக் கிளம்பினேன் ! பக்கத்துவீட்டுக் குழந்தை வீறிட்டழுதது ! இருசக்கர வாகனமொன்று சேறிறைத்தது ! எதிரில் வந்தவன் காறி உமிழ்ந்தான் ! கழிவுநீர் ஊர்தி கடந்து போனது ! எவனோ எவனையோ திட்டிய கெட்டவார்த்தை காற்றுவாக்கில் காதில் வந்தது ! இனவிருத்தியில் இரு நாய்கள் ! தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி ! பக்கத்தில் பன்றியிறைச்சி ! குடித்துவிட்டு ஒருவன் வாந்தியெடுத்தான் ! கோவிலில் வாங்கிய பூ வாடியிருந்தது ! ஒரு கிழிந்த நோட்டு கைக்கு வந்தது ! சில்லறை இல்லையாம் ! நுழையும்போதே வலதுகால் தடுக்கியது ! போடாத காசிற்குப் பிச்சைக்காரி சபித்து அனுப்பினாள் ! உள்ளே கொடுங்கூட்டம் ! வாங்கிய விளக்கில் திரியைக் காணவில்லை ! வரிசையில் ஒருவன் காலை மிதித்தான் ! கொடுத்த தேங்காய் அழுகிவிட்டது ! தரிசனம் காணும்போது தலைகள் மறைத்தன ! ஒற்றும்போது கற்பூரம் அணைந்தது ! அந்தக்கிழிந்த நோட்டை அய்யர் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுத்தார் ! பாதி வரிசையில் பிரசாதம்
திருமணம் 2013    ' சொல்லியனுப்புகிறோம் ' என்ற சொல்லை காலம் என்ற விலை கொடுத்து பெண் வீட்டார் வாங்கி விட்டனர் ! ------------------------------ -------------- இன்ஜினியர் பெண்ணும் இன்ஜினியர் ஆணும் தம்பதியாவது காலத்தின் கட்டாயம் ! டாக்டருக்கும் இது டிட்டோ ! ------------------------------ -------------- திருமணம் கல்லூரியில் நிச்சயிக்கப்படுகிறது ! ------------------------------ -------------- மாப்பிள்ளையின் சம்பளமும் மறைமுக வரதட்சணைதான் ! கொண்டுவாருங்கள் இதற்கொரு இ. பி. கோ ! ------------------------------ -------------- குவித்துத்தான் வைக்கிறார்கள் ஆண் ஜாதகத்தை ! பொறுக்கித்தான் எடுக்கிறார்கள் பெண் ஜாதகத்தை ! ------------------------------ -------------- ஒவொரு வினைக்கும் எதிர்வினை உண்டு ! ஆணினமே அனுபவி ! ------------------------------ -------------- காலஸ்த்ரி, திருநாகேஸ்வரம், திருவிடந்தை, திருமணஞ்சேரி ....................... அடுத்து என்ன ஜோசியரே ? ------------------------------ -------------- தந்தை மகற்காற்றும் உதவி திருமணத
ஒரு விடைபெறுதல்  தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது ! மேஜையில் எதிரெதிராக நீ ! நான் ! தேநீருடன் கூடிய நம் கடைசிச்சந்திப்பு ! தலைகுனிந்தபடி நீ ! உன்னையே பார்த்தபடி நான் ! ஒருவகையில் நம் முதல் சந்திப்பிலும் இப்படித்தானிருந்தோம் ! வேடிக்கைதான் ! இருவீட்டார் சம்மதத்துடன் நாம் பிரியப்போகிறோம் ! சுற்றிலும் ஆங்காங்கே தேநீர் அருந்தும் காதலர்களின் ஆசிர்வாதத்தோடு நாம் பிரியப்போகிறோம் ! என் இரண்டுவார தாடி உனக்குப்பிடிக்காதுதான் ! நினைவிருக்கிறதா இந்த  நீல நிறச்சட்டை நீ வாங்கித்தந்தது ! என் கை நகங்களில் அழுக்குப் படிந்துள்ளது ! சற்று முன்னர்தான் சிகெரெட் பிடித்தேன் ! என்னில் எல்லாமே இயற்கையாக இருக்கின்றன என் புன்னகையைத்தவிர ! எனக்குப்பிடித்த மஞ்சள் சுடிதாரில் நீ வரவில்லை ! பவுடர் சற்று அதிகம் ! கூந்தலில் ரோஜா இல்லை ! நான் வாங்கித்தந்த பிளாஸ்டிக் வளையல்களை உன்கைகள் அணிந்திருக்கவில்லை ! உதட்டுச்சாயத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் ! உன்னில் எல்லாமே செயற்கையாக இருக்கின்றன ! உன் கண்களைத்தவிர ! அந்தக்கண்களில் கண்ணீ
  ஈழம் உங்கள் புத்தியில் இருந்தது ! ஈழம் எங்கள் இதயத்தில் இருந்தது ! ------------------------------------------------- காத்திருந்தீர்கள் நீங்கள் ! தவமிருந்தோம் நாங்கள் ! ------------------------------------------------- நீங்கள், எங்கள் தூதுவர்களையும் கொன்றீர்கள் ! நாங்கள், தொலைகிறது என்று உங்கள் ஒற்றர்களையும் மன்னித்தோம் ! ------------------------------------------------- உங்கள் கண்ணீர்ச்சுரப்பியும் வியர்வையைச் சுரந்தது ! எங்கள் வியர்வைச்சுரப்பியும் கண்ணீரைச் சுரந்தது ! ------------------------------------------------- உங்களுடையவர்கள் படைவீரர்கள் ! எங்களுடையவர்கள் உடன்பிறப்புக்கள் ! ------------------------------------------------- உங்கள் தலைவன் இருக்கிறான் ! எங்கள் தலைவன் வாழ்கிறான் ! ------------------------------------------------- ஓலமிட்டீர்கள் நீங்கள் ! முழக்கமிட்டோம் நாங்கள் ! ------------------------------------------------- தந்திரநரிகள் நீங்கள் ! விடுதலைப்புலிகள் நாங்கள் ! -------------------------------------
குறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது புரிந்து கொண்டால் எனக்கு எழுதியனுப்புங்கள். கடைக்காரன்  அவன், கடைக்காரன் ! செம்மாந்த நடைக்காரன் ! வெண்மைநிற உடைக்காரன் ! அவன், ஐம்பது கடந்த முதியவன் ! நான் அந்த வீதிக்குப் புதியவன் ! நான் ??? அதொன்றுமில்லை ! வந்தது ஓலை ! அழைத்தது ஆலை ! கிடைத்தது வேலை ! வணங்கினேன் அன்னையை ! வந்தடைந்தேன் சென்னையை ! உடனடித்தேவையெல்லாம் ........................... காலடிக்குத் தடம் ! தங்குவதற்கோர் இடம் ! நீர் பிடிக்கக் குடம் ! பழனி முருகன் படம் ! யாவருக்கும் என் முகம் தெரியாது ! நான் அப்பாவியென்ற என் அகம் தெரியாது ! அவ்விடத்தே எனக்கு நண்பர்கள் இல்லை ! ஊரோடு முடிந்தது என் நட்பின் எல்லை ! இங்கே நான் கேட்க முடியாது ' மச்சி ' என்ற சொல்லை ! அவ்விடத்திற்கே ஆலையின் வண்டி வரும் ! பத்துக்கல் கடந்து போனால் பக்கத்திலே கிண்டி வரும் ! என்ன செய்வது ? யாரைக் கேட்பது ? தலையைச் சொறிந்தேன் ! பார்வையை எறிந்தேன் ! கடையொன்றைப் பார்த்துவிட்டேன் ! உடனடியாக மூக்கினில் வேர்த்துவிட்ட
திருடன் அவன் தொழில் திருட்டு ! அவன் பிடிப்பது சுருட்டு ! அவன் மனமெங்கும் ஒரே இருட்டு ! மாதக்கடைசியில் அவனுக்கும் வரும் பஞ்சம் ! முதல் தேதியென்றால் மல்லிகைப்பூவிலிருக்கும் மஞ்சம் ! காசில்லாத போது காவல் நிலையம்தான் அவனுக்குத் தஞ்சம் ! அடர்த்தியானது அவன் புருவம் ! அழுக்கானது அவன் உருவம் ! அவன், மாலையானதும் மதுவை உள்ளே ஊற்றி விடுவான் ! வெளியில் வந்தால் ஒரு நூறையாவது தேற்றிவிடுவான் ! தன் இருப்பிடத்தை அடிக்கடி அவன் மாற்றிவிடுவான் ! அனாதைதான் அவன் ஆதியிலிருந்து ! ஒட்டிக்கொண்டது இத்தொழில் பாதியிலிருந்து ! அவனது பரிதாபத்தோற்றம் பிறர் உள்ளத்தை வருடிவிடும் ! சுவடு தெரியாமல் அவன் கை திருடிவிடும் ! ஒருநாள் அவனுக்கு ........... மதுவருந்தாமல் நாக்கு கரித்தது ! காசில்லாமல் கை அரித்தது ! ஒரு பொதுவிடத்தில் மக்கள் சிலர் கூடியிருந்தனர் ! திறக்காத உதட்டால் தம் உள்ளத்தை மூடியிருந்தனர் ! அவ்விடத்தை இவன் அடைந்தான் ! பலரையும் பார்வையால் கடைந்தான் ! ஒரு வயதானவன் பையொன்றை வைத்திருந்தான் கக்கத்தில் ! போய் நின்றுகொண்டான் இவன் அவன் பக்கத்தில் ! கெட்டியாகப் பிடித்திருந்தான் கிழவன் பணத்தை ! உணர்ந்து கொண்டான
நீர் தெளிக்கப்போகிறதாம் ' வானிலை ' ! அறிவித்தது வானிலை ! ========================== . அந்தச் சாலையைக் கடக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது ஒருவனின் முதலடிக்காக ! ========================== யாரோ வரும்போது மின்சாரம் வந்தால் வெளிச்சமாக அவர்கள் வந்திருக்கிறார்கள் ! யாரோ வரும்போது மின்சாரம் போனால் வெளிச்சத்திற்கு பதிலாக அவர்கள் வந்திருக்கிறார்கள் ! ========================== பண்டிகை விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு வந்த அந்த தேநீர் ஆற்றுபவனை ஆற்றிக்கொண்டிருக்கிறது தேநீர் ! ========================== ஏதோ ஒருவிதத்தில் அழகானவர்கள் மட்டுமே காதலிக்கிறார்கள் ! அப்படியானால் காதல் என்பது என்ன ? ========================== இங்கே காமம் என்ற வார்த்தையை விட கற்பு என்ற வார்த்தை இன்னும் கவர்ச்சியானது ! ========================== வீடுகளில் ......... அது அடுப்பைப் பற்ற வைக்கிறது ! இது அடிவயிற்றைப் பற்றவைக்கிறது ! அது தீப்பெட்டி ! இது காதல் ! அவ்வளவுதான் ! ========================== பறித்தவனுக்கு பறித்தது மட்டும் சொந்தம் ! பார்த்து ரசிப்பவனுக்கு பூந்தோட்டமே சொந்தம் ! ========================== பேசத் த
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர
விலை அவளொரு தாசி ! பாவ ஆற்றில் இச்சை மீன்கள் தின்னும் பாசி ! ஆண்கள் மட்டுந்தான் அவளுக்கு ராசி ! அவள் நடையில் எப்போதுமிருக்கும் - ஒரு பீடு ! இன்பம் தருவதில் வானுலக ரம்பை அவளுக்கு, ஈடு ! ஒதுக்குப்புறமானது அவள், வீடு ! அவள் மேனி, ஒரு சிலையை நிகர்க்கும் ! எப்படிப்பட்ட பிரம்மச்சர்யத்தையும் அவள் பார்வை தகர்க்கும் ! எப்படிப்பார்த்தாலும் அவள், அழகி ! போனால் திரும்பிவரலாம் இன்பத்தை அவளிடம் பழகி ! அவளிடம், துன்பம் நடுங்கும் பருந்தைக்கண்ட அரவு போல ! கவலை மறையும் பகலவன் உதித்த இரவு போல ! அவளிடம் சென்றால், அந்நாள் ஆகும் நம் இன்பக்கணக்கில் - ஒரு வரவு போல ! அன்று..................... அவள், குளித்து விட்டு செயற்கையாக வேர்த்திருந்தாள் ! மயக்கும் வித்தைகளை மனதோடு சேர்த்திருந்தாள் ! திறந்த வாசலில் யாரையோ - எதிர் பார்த்திருந்தாள் ! அவன் வந்தான் ! அவன், தோற்றத்தில் முப்பதை முடித்திருந்தான் ! சொல்ல முடியாத சோகத்தை முகம் முழுக்க வடித்திருந்தான் ! அவனைக்கண்டு அவள், சிரித்தாள் ! பார்வையால் அவனை உரித்தாள் ! பெருமூச்சால், அந்த அறையையே எரித்தாள் ! அவன், சட்டென எழுந்தான் கட்டிலிலிருந்து ! எடுத்து விட்டான்
சூழல் ! நான், நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் ! எதையோ வாயில் மென்று கொண்டிருந்தேன் ! போகும் பெண்களையெல்லாம் பார்வையால் தின்று கொண்டிருந்தேன் ! திகைக்காதீர்கள் ! கேலியாய் என்னைப் பற்றி நகைக்காதீர்கள் ! அழகை ரசிப்பதில் அப்படியொன்றும் இல்லை பிழை ! பிறன்மனை நோக்கினும், புயலடித்தாவது பெய்யும் மழை ! நான், வெந்ததைத் தின்று விதிக்குக் காத்திருக்கும் சாமானியன்தான் ! ரோமில் வாழ்ந்தால் ரோமானியன்தான் ! ஆகவே, அப்படித்தான் ! சங்கதி அதுவல்ல ! அந்த நாய்க்குட்டிகள் ! எங்கிருந்தோ அவை ஓடிவந்தன ! நம்பிக்கையோடு நிறுத்தத்தை, நாடிவந்தன ! துள்ளல் இசையை பிஞ்சுக் கால்களால் பாடிவந்தன ! நாய் கண்டு சிலர், புன்னகை பூத்தார்கள் ! வேறு சிலர், பொறுமை நீத்தார்கள் ! இன்னும் சிலர், அமைதி காத்தார்கள் ! ஒரு நாயின் நிறம் காவி ! ஓடியோடிக் குதித்தது - அது தாவி ! இன்னொரு நாய்க்கு, கண்கள் மட்டும் பச்சை ! கீழே உருண்டு புரள்வதில் அதற்கு அப்படியொரு இச்சை ! மற்றொரு நாய்க்கு, ஆடிக்கொண்டேயிருந்தது வால் ! நிற்கவில்லை அதற்குத் தரையினில் கால் ! இன்னுமொரு நாய் நிற்போரின் காலில் போய் ஈசியது ! அவர்களோடு, அது ஏதோ பேசியது ! நான், அக்காட்
பிச்சைக்காரன் அவன், கந்தலான கச்சைக்காரன் ! சோற்றின் மீது இச்சைக்காரன் ! சுருங்கச் சொன்னால் பிச்சைக்காரன் ! அவன், ஒவ்வொரு வேளையும் உணவுக்காக வெம்புகிறான் ! எப்படியும் மகேசன் படியளப்பானென்று நம்புகிறான் ! அவனுக்கு, வாழ்வென்பது காற்றிலாடும் ஊசல்தான் ! வயிற்றுக்கும் அவனுக்கும் அனுதினமும் பூசல்தான் ! அவன், வசிப்பிடம் ஒரு தேநீர்க்கடை வாசல்தான் ! அவன், ஒரு நாளும் குளித்ததில்லை ! சோறுண்ண யாரும் அவனை விளித்ததில்லை ! வயிறார அவனும் உண்டு களித்ததில்லை !. உடம்பில் இல்லை முடம் ! இன்னும் இருக்கிறது திடம் ! ஆனாலும், உழைப்பு கூடாதென்று அவனுக்கு ஒரு அடம் ! தொடக்கத்தில் அவனும், காண்போரிடமெல்லாம் ஒரு வேலையை இரந்து பார்த்தான் ! பரிதாபத்தை பக்குவமாய்க் கரந்து பார்த்தான் ! கண்ணீரை கணக்கில்லாமல் சுரந்து பார்த்தான் ! ஒன்றும் நடக்கவில்லை ! அதிர்ஷ்ட தேவதை, அவனைக் கடக்கவில்லை ! பொங்கியெழுந்த பிச்சை வேட்கையை அவனும் பெரிதாய் அடக்கவில்லை ! உடனே ஏந்தினான் கையை ! ஏதோ நிரப்பினான் பையை ! ஓரளவு வளர்த்தான் மெய்யை !. எதற்குக் கிளற வேண்டும் அதையெல்லாம் ! தேவையில்லை நடந்து முடிந்த கதையெல்லாம் ! அது ஒரு பகல் !
இன்னும் விடியவில்லை ! உறக்கம் கலையவில்லை ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! விடிந்துவிட்டது ! உறக்கம் கலையவில்லை ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! உறக்கம், கலைந்து விட்டது  ! யாராவது எழுப்பட்டும் ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! எழுப்பியும் விட்டார்கள் ! பக்கத்தில் இருப்பவன் எழட்டுமே ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! ================================================= நாய் குரைத்தது ! நாய்கள் குரைத்தன ! மனிதன் குரைத்தான் ! மனிதர்கள், வேடிக்கை பார்த்தனர் ! ================================================ நீ சுதந்திரமானவன்  ! தேர்தெடுக்க முழு உரிமை உள்ளவன் ! ஜனநாயகத்தின் பிரதிநிதி ! சொல் ! தூக்கா ? விஷமா ? கழுமரமா ? மலையுச்சியா  ? ================================================= எல்லா நிர்பந்தமும் பழக்கமாகி விடுவதில்லை ! எல்லா பழக்கமும் நிர்பந்தத்தில் இருந்து வருவதில்லை ! ================================================== பெஞ்சில் தலைசாய்க்கிறான் ஒரு மாணவன் ! வடியத்தொடங்குகிறது உறக்கம் ! ================================================== மறுபடியும்  ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் அத்தவறைச் செய்து மற
அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம் அன்பே, சாகசங்களால் உன்னை வியக்க வைக்க என்னால் முடியாது ! அபூர்வப் பரிசுதந்து ஆச்சர்யப்படுத்த என்னால் முடியாது ! சுண்டுவிரல் படாமல் கண்ணியமாய்க் காதலிக்க என்னால் முடியாது ! பிற ஆண்களுடன்  நீ பழகுவதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது ! உன் விரல் நகங்களுக்கும் கவிதை பாட என்னால் முடியாது ! சொடக்குப் போட்டு சொர்க்கத்தை வரவழைக்க என்னால் முடியாது ! எப்போதும் உன்னைச் சிரிக்க வைக்க என்னால் முடியாது ! ஒரே பாடலில் பணக்காரனாக என்னால் முடியாது ! நுனி நாக்கில் ஆங்கிலம் பேச என்னால் முடியாது ! நீ வாசிக்கும் புத்தகங்களின் ரசிகனாக என்னால் முடியாது ! ஆனால் ...... உன் தந்தைக்கு ஒரு ஹாய் சொல்ல என்னால் முடியும் ! என் அம்மாவை உன் தோழியாக்க என்னால் முடியும் ! நம் காதலின் முக்கிய தினங்களில் உனக்கொரு வாழ்த்துக்கூற என்னால் முடியும் ! கொஞ்சம் கொஞ்சமாய்  ராமனாய் மாற என்னால் முடியும் ! சிறிது சிறிதாய் மதுவை மறக்க என்னால் முடியும் ! ஒரு நாளைக்கு ஒரு சிகெரெட் கண்டிப்பாய் முடியும் ! உன் தாமத வருகைக்கு புன்னகை புரிய என்னால் முடியும் ! நம் எல்லா சண்டைக்கும்
குப்பா .............. குடித்து விட்டு தெருவில் கிடக்கும் குப்பா ! நினைவிருக்கிறதா நீ மூன்று பிள்ளைகளுக்கு அப்பா ! அவிழ்ந்து கிடக்கிறது உன் வேட்டி ! இன்னுமா எடுக்கிறாய் உறக்கத்தைப் பேட்டி ? புலர்ந்து விட்டது காலை ! நிரம்பி விட்டது சாலை ! இன்னும் உனக்கு புழுதியில்  என்ன வேலை ? குப்பா .......... உன் தினப்படி சங்கதியென்ன ? உழைத்தே உன் முதுகை நீ ஓடிக்கிறாய் ! காசு கேட்கும் மனைவியை அடிக்கிறாய் ! மாலை வந்ததும் குடிக்கிறாய் ! இப்படியே ஒவ்வொரு நாளையும் முடிக்கிறாய் ! குடி எனும் கூர்வாளால் உன் குடும்பத்தோரணம் கிழிகிறது ! குடித்துக் குடித்தே உன் உடம்பு கெட்டு அழிகிறது ! உன் பொழுதெல்லாம் இப்படியே நாளும் கழிகிறது ! இன்னும் காயவில்லை உன் வியர்வையின் திவலை ! உனக்கென்ன அப்படியொரு கவலை ? இடிக்கத்தான் வேண்டுமா உரலில் இட்டு அவலை ? குப்பா ........... நீ கட்டியிருக்கிறாய் ஒருத்திக்குத் தாலி ! உன் வாழ்வுப்பயிருக்கு அதுதானே வேலி ! இப்படியே குடித்தால் வெகு விரைவில் உன் ஆரோக்கியம் காலி ! போதை தருவதில் மனைவியைத் தவிர மற்றதெல்லாம் போலி ! குப்பா ......... உழைப்பைக் காரணங்காட்டி இங்கே நீ குடித்தால் ..... ஓர
ஒரு பழைய புகைப்படம் ! அது ஒரு பழைய புகைப்படம் ! ஒரு விடுமுறை நாளில் பீரோவைக் குடைந்த போது தற்செயலாகக் கிடைத்தது ! புன்னகையுடன் சிலர் ! மௌனமாக  சிலர் ! ப்ளாஷ் விழும்போது இமை மூடிவிட்ட  சிலர் ! அழுகையோ சிரிப்போ  அடக்கிக் கொண்ட சிலர் ! தலைக்கு மேல் ஆங்கில v அவசரமாய் முளைக்கப் பெற்ற சிலர்......................... ......... ! சிலர் கண்ணாடி அணிந்திருக்கவில்லை ! சிலர் ஒல்லியாக இருந்தனர் ! சிலர் தொப்பை போட்டிருக்கவில்லை ! சிலருக்கு தலை நிறைய முடியிருந்தது ! எல்லா முகமும் நினைவிருக்கிறது ! எந்தப் பெயரும் மறக்கவில்லை ! ஒரு சிலர் ஒரு சிலரோடு சண்டை போட்டிருந்தனர் ! ஒரு சிலரை ஒரு சிலர் காதலித்திருந்தனர் ! இணை பிரியாத நண்பர்களாக சிலர் இருந்தனர் ! சிலரால் வகுப்பே கலகலப்பாகும் ! சிலர் யாருடனும் பேசாத உம்மணாமூஞ்சி ! சிலர் இப்போது தொடர்பில் இல்லை ! சிலரது தொடர்புகள் கிடைக்கவேயில்லை ! சிலர் முக நூலில் முகம் காட்டுகிறார்கள் ! சிலர் அவ்வப்போது அலைபேசியில் ! பெரும்பாலோருக்கு திருமணம் முடிந்து விட்டது ! முடிந்திருக்கும் ! ஒரு அலுமினி விழாவில் சிலர் குடும்பத்தோடு  சந்தித்துக் கொண்டார்களாம் ! சிலர் இ
கள்ளம் கயமை  என்ற எரிபொருளால் உடல் நனைந்து விட்டது ! காமத் தீ, அங்கே எரிகிறது ! குளிர்காய்வதற்கு முன், கொஞ்சம் யோசிக்கலாமே ! நெறி கொண்டு பயணித்தால்தான் அது நதி ! நெறி பிறழ்ந்து பயணித்தால், அது வெள்ளம் ! உறக்கம் கண்ணில் இருக்கும் வரை இருட்டு சுகமானதுதான் ! ஏதோ ஒரு மனதை வெட்டிக் கூறு போட்டுத்தான், மாமிசம் உண்ண வேண்டுமா ? பள்ளத்தில் விழும் அனைவருக்கும், கிளைகள் கிடைத்துவிடுவதில்லை ! காமம் என்பது புண் ! மருந்திடலாமா ? சொறியலாமா ? முடிவு நம்மிடம் ! எந்த ஒரு தப்புக்கும் ஒருநொடி அவகாசம், குறைந்தபட்சம் இருக்கிறது ! உள்ளத்தில் பள்ளத்தைத் தோண்டி - அதில் கள்ளத்தைப் புதைத்து வைத்தாலும், எவனும், எவளும் தப்ப முடியாது ! சூனியத்தின் வேர்கள் என்றாவது கழுத்தை நெரிக்கத்தான் நெரிக்கும் ! மனதில் கள்ளத்தனம் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், சின்னச் சின்ன தண்டனைகள் உடனே கிடைக்கப் பெறுபவர்கள் பாக்கியசாலிகள் ! ' ஒரே இணை ' என்ற அமைப்பு தரும் சலிப்பில் தான் கள்ளத்தனம் பிறக்கிறது என்பவர்களுக்காக................. வெறும் பசியைத் தணித்துக் கொள்வது மட்டுமல்ல தாம்பத்யம் ! அது, ஒருவருக்காக மற்றொருவர் சுவாசி
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று விட்ட அம்மா ! அ
 குறிப்பு : இந்தக் கவிதை எழுதப்பட்டது 07.05.2013  ல் மழை    மழை இனி பெய்யுமா ? உலகம் இனி உய்யுமா ? இனி , மேகம் என்பது வெறும் பஞ்சுதானா ? நிலத்தடி நீர் என்றாலே - அது நஞ்சுதானா ? கயிறு போல இளைத்து விட்டது காவிரி ! வாய்க்காலானது வைகை ! தரிசானது தாமிரபரணி ! ஏட்டளவுதான் எந்தச் சட்டமும் ! உயராது அதனால் எந்த அணையின் நீர்  மட்டமும் ! இனி, அளந்தே குடிப்போம் தண்ணீரை ! எதற்கும் கொஞ்சம் சேமித்து வைப்போம் கண்ணீரை ! இனி, வடநாட்டில் இருந்துதான் தண்ணீரைக் கொண்டு வரவேண்டும் ! அயல்நாடு போனாலும் அங்கிருந்தும் கொஞ்சம் மொண்டு வரவேண்டும் ! இனி, குழாயடியில் சண்டை வராது ! கைதுடைக்கும் காகித வியாபாரிகள் கோடீஸ்வரர்கள் ! கதிரியக்கக் குளியல் அமலுக்கு வரப் போகிறது ! அழுக்கு ஒட்டாத ஆடைகள் நடைமுறைக்கு வரலாம் ! கடல் நீரைக் குடிநீராக்கும் குட்டி இயந்திரம் வீடுதோறும் விநியோகிக்கப் படலாம் ! கோவில்களில் அபிஷேகத்திற்கு தடை வரும் ! வானிலை அதிகாரிகள் வேலை இழப்பார்கள் ! குடிநீர் வங்கி உருவாகும் ! மழை எந்த நாட்டில் பெய்தாலும் அதை அதிசய நிகழ்ச்சியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் ! ' வீட்டுக்கு ஒரு லிட்ட
சமூக முதிர்ச்சி சேர்ந்தாற்போல நான்கு இளைஞர்கள் நடந்து போனால் காட்டாயம் அவர்களிடம் மதுவாசம் ! தகாத வார்த்தைகளால் தந்தையைத் திட்டுகிறான் ஒரு சிரிப்பு நடிகன் ! தியேட்டரில் கைதட்டுகிறார்கள் ! பள்ளிச்சிறுமி , கையில் அலைபேசி , நமட்டுச் சிரிப்பு அடிவயிற்றில் பகீர் ! ஆசிரியர்களை  வேவு பார்க்க மாணவர்களை நியமிக்கும் பள்ளி நிர்வாகம் ! ஜோதிடர்களின் தயவால் தான் இன்னும் கூட்டமிருக்கிறது கோவில்களில் ! காதல் பேசுவது பெண்களுக்குப் பொழுது போக்கு ! இளைஞர்களுக்கு பிறவிப் பயன் ! முகநூலை தடை செய்தால் லட்சக்கணக்கில் தீக்குளிப்பு கட்டாயம் ! அருந்தமிழ் நாட்டில் அடுக்கு மொழியில் ஆங்கிலம் பேசும் ஐந்து வயதுக் குழந்தைக்கு அம்மா என்ற வார்த்தை தெரியவில்லை ! பலே ! பந்தி போடும் வரை தான், கல்யாண வீடுகளில் கூட்டமெல்லாம் ! வரிக்கு விலக்கிருப்பதை உறுதி செய்த பின்புதான் வக்கற்றோரை நோக்கி உதவிக் கரங்கள் நீள்கின்றன ! கற்பு என்பது கெட்ட வார்த்தை ! பாசம் என்பது மூட நம்பிக்கை ! புனிதம் என்பது பைத்தியகாரத்தனம் ! பற்றியெரியும் குடிசையின் முன் குளிர்காய்கிறார்கள் ! ஒளி கொடுக்கும் தீபத்தை ஊதி அணைக்கிறார்கள் ! மாற்று சிந்தனைய
அரண்டவன் கண்ணுக்கு ............. அது ஒரு எதிர்பாராத தோல்வி ! முயற்சியில் வெற்றி கிட்டவில்லை ! நொண்டிச் சமாதானங்கள் மனதில் ஒட்டவில்லை ! வெற்றி மட்டும் வாய்த்திருந்தால்............. விதி மாறியிருக்கும் ! வாழ்வானது வசந்தத்தில் ஏறியிருக்கும் ! ஆகிவிட்டதே நிலை பரிதாபமாக ! ஏதாவது செய்வானா இறைவன் பரிகாரமாக ? தொடங்க வேண்டும் அனைத்தையும் சுழியிலிருந்து ! உயர வேண்டும் மீண்டும் அதள பாதாளக் குழியிலிருந்து ! என்ன செய்து மனதை மாற்றலாம் ? என்னை நானே எப்படித் தேற்றலாம் ? மது ........... அது புளித்துப் போன பழைய போதை ! சூது ........ வேண்டாம் ! வேண்டாம் ! நான் துரியோதனனுமில்லை ! எந்தச் சகுனியும் கூடயில்லை ! மாது .......... அட ! இதைக் கொஞ்சம் யோசித்துத்தான் பார்ப்போமே ! மன்மதனைச் சற்று வாசித்துத்தான் பார்ப்போமே ! எதிர்த்த வீட்டு ஆண்ட்டி எடுப்பாகத்தான் இருக்கிறாள் ! பச்சை சிக்னல் காட்டுகிறது பக்கத்து வீட்டு பருவச் சிட்டொன்று ! எங்கேயோ கிண்டியில் ஒரு அழகு நிலையமாம் ! கொட்டுகிறதாம் அங்கே இன்பத்தின் அருவி ! கொண்டாடுகிறார்களாம் உடம்பை எண்ணைகொண்டு உருவி ! ஆம் ! கட்டாயமாக ..... ஆடவற்குப் பெண்டிர் !
அறை கற்றுக்கொள்ளாதபோது சமைத்த அந்த முதல்சமையலின் ருசி, கற்றுக் கொண்டபிறகு சமைத்த உணவுகளில் இதுவரை கிடைக்கவில்லை ! வெறும் வெங்காயத்தை மட்டுமே நறுக்கித்தரும் சமைக்கத்தெரியாத ஒருவன் எல்லா அறைகளிலும் இருக்கிறான் ! அவன் உண்பான் என இவனும் இவன் உண்பான் என அவனும் இருந்ததில் மீந்து போய் வெளியில் கொட்டும் கலாச்சாரம் அறையினுடையது ! எப்போதெல்லாம் அறையில் அசைவம் சமைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அறையின் அசைவம் சாப்பிடாதவன் ஊருக்குப் போயிருப்பான் ! எல்லா அறைகளிலும் ஏதோ ஒருவன் சதா காதலியிடம் பேசிக் கொண்டேயிருக்கிறான் ! தொலைந்த பொருளுக்கு அறையில் இருப்பவர்களை சந்தேகிப்பது கூடாது ! தண்ணீர் வராதநாட்கள் அறையின் துக்கநாட்கள் ! அறையில் மதுவருந்தும் போது நண்பர்களின் சத்தம் அக்கம் பக்கம் கேட்டு விடக்கூடாதென்று அவ்வப்போது அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருப்பவனின் அவஸ்த்தை அழகானது ! அறையில் ஒருவன் தொலைக்காட்சி பார்க்கிறபோது வருகின்றஉறக்கம் யாருமில்லாத 'அறைத்தனிமையில்' வருவதில்லை ! எப்போது ஒரு அறையின் வரவு செலவுக் கணக்கு அதைப
பார்வையற்றவன் அவன் ஒரு குருடன் ! அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு எங்கிருந்தோ அவன் வந்து சேர்ந்தான் ! என்னைத் தவிர இன்னும் சிலர் அங்கே நின்றிருந்தார்கள் ! நான் பாக்கெட்டைத் தொட்டு சில்லறை இருப்பதை உறுதி செய்துகொண்டேன் ! யாரிடமும் அவன் காசு கேட்காதது கொஞ்சம் உறுத்தலாக  இருந்தது ! கையிலிருந்த குச்சியால் தட்டித் தட்டி தனக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டான் அவன் ! என்னைப் போலவே இன்னும் சிலர் அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர் ! அவன் எங்கு போகவேண்டும் ? அவனுக்கான பேருந்து எது ? யாரும் அவனிடம் கேட்கவில்லை ! அவனும் யாரிடமும் கேட்கவில்லை ! நிச்சயம் இந்தஇடத்திற்கு அவன் புதியவன் தான் ! எந்தநம்பிக்கையில் இங்கே வந்து நிற்கிறான் ? யாராவது அவனுக்கு உதவுங்களேன் ! இவனும் வாயைத் திறந்து கேட்கிறானா பார் ! எனக்கும் அவனை அணுக கொஞ்சம் தயக்கமாகஇருந்தது ! எதற்கு வீண் வம்பு ? பவித்ராவுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது ! மறக்காமல் தெருமுக்குக் கடையில் குழந்தைக்கு பேபி பவுடர் வாங்கவேண்டும் ! எனக்கான பேருந்த
பயணம் குறிப்பு : இந்தக் கவிதை பேருந்தைப் பற்றியதல்ல ஊருக்குப் போவதில் உறுதியாக இருந்தால் ஒரு பேருந்தை விட்டாலும் இன்னொரு பேருந்தைப் பிடித்தாவது நாம் ஊருக்குப் போய்விடுவோம் ! பேருந்து உரிய நேரத்திற்கு வரவில்லை ! நம்மைப் போலவே இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள் எனும் போது தாமதித்தாலும் வரவேண்டிய பேருந்து வந்தே தீரும் ! பேருந்து கல்லறை நோக்கிப் போகிறது எனில் பயணம் சுகமாயிருந்து யாதொரு பயனும் இல்லை ! பேருந்து, பூந்தோட்டத்தை நோக்கிப் போகிறது எனில் பயணம் கடினமாயிருப்பதில் பிழையொன்றும் இல்லை ! ஐம்பது பேர் உடன் பயணித்தும் பக்கத்து இருக்கைக்காரனுடன் பேசாதவன் தனியாகத் தான் பயணிக்கிறான் ! எங்கும் நிற்காத பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்தில் ஏறினாலும் அதுவும் ஏதாவது ஒரு இடத்தில் நிற்கவே செய்யும்  ! ஒரே இடத்தில் ஏறி ஒரே இடத்தில் இறங்கினாலும் பயண நோக்கம் ஒருவருக்கொருவர் வேறுபடத்தான் செய்கிறது ! தொலைவு அதிகமாக இருந்தால் பயணச்சீட்டின் விலையும் அதிகமாகத் தான் இருக்கும் ! நிறுத்தம் வருவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை விழித்துக் கொண்