Skip to main content

Posts

Showing posts from May, 2014
வழிப்போக்கனான நான் அந்தச் சாலைக்கூட்டம் பிளந்து எட்டிப்பார்க்கிறேன் ! ஒருவன் அடிபட்டிருந்தான் ! அவன் அநேகமாக இறந்து விட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது ! பார்த்துப் பழகிய ஒரு திரைப்படத்தை உயிரில்லாமல் பார்ப்பது போல காவலர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! கீழே சரிந்திருந்தது அவன் இருசக்கர வாகனம் ! தலைக்கவசம் இல்லை ! குடித்து வேறு இருக்கிறானாம் ! சர்தான் ! அவசரகால ஊர்தி வந்த பிறகும் யாவரும் எதற்கோ காத்திருந்தனர் ! பார்வையிட அமைச்சர் கிமைச்சர் வருகிறாரோ ? அடிபட்டவன் தொண்டைக்குழியில் உயிரின் அறிவிப்பாக ஒரு மெல்லியஅசைவு தென்படுமுன் அடியேன் அவ்விடம் விட்டகன்றேன் !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
துப்பாக்கி 'துப்பார்க்குத் துப்பாய' படிக்குமுன்பே துப்பாக்கி எனக்கு அறிமுகம் ! நானறிந்த துப்பாக்கியில் அப்போது ஆறு குண்டுகள் ! இப்போது எண்ணிக்கை சற்றுக் கூடியிருக்கலாம் ! ஒரு துப்பாக்கியை முறைப்படி வாங்கும் விவரங்களை இணையத்தில் தேட வேண்டும் ! கைவசம் ஒரு லகரம் இருக்கிறது ! தொகை சற்றுக்கூடுதலானால் வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளலாம் ! துப்பாக்கியோடு சேர்த்து சுடுவதற்கான பயிற்சி இலவசமா அல்லது அது தனியா ? சுட்டுப்பழக கூடுதல் குண்டுகள் தருவார்களா ? பீரோவின் ரகசிய மூலையில் அதைப் பதுக்கவேண்டும் ! அந்த ஒற்றைச்சாவி எப்போதுமிருக்கும் என் உள்பாக்கெட்டில் இதயம் தொட்டுக்கொண்டு ! எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் தான் ! அவர்களைக் கொல்லவேண்டிய தேவை எனக்கில்லை ! மேலும், அவர்களைக் கொல்ல வாய்த்துப்பாக்கி போதும் ! கைத்துப்பாக்கி தேவையில்லை ! வேட்டையாட விருப்பம்தான் ! காடுகளைத்தான் காணவில்லை ! ஆகவே அந்தக்காரணமும் இல்லை ! பாதுகாப்புக்கு நான் துப்பாக்கியை விட பணத்தை நம்புகிறேன் ! தற்கொலை புரிவதென்றால் தூக்கமாத்திரை தின்று சுகமாகச் சாகலாம் ! துப்பாக்கி தேவையில்லை ! பறவை சுடுவதென்றால் எஞ்சியிருக்கும் காக
நாயும் நானும் அதுவொரு மதிய வேளை ! உருவாகிக்கொண்டிருந்த புதிய வேளை ! யாருமில்லை தெருவில் ! நான் நடந்து கொண்டிருந்தேன் வியர்வையில் குளித்த உருவில் ! சூழலில் நெருப்பு ! தவித்தது செருப்பு ! நீரூற்றி வெளியில் வைத்தால் வெந்துவிடும் பருப்பு ! இப்போதைக்கு யாருமில்லை அறையில் ! கொஞ்சநேரம் விடுதலை எனக்கந்த சிறையில் ! நாடலாம் தனிமையை ! பாடலாம் இனிமையை ! என்ன இனிமை என்கிறீர்களா ? ஆபாசப்படம் மற்றும் சுயமைதுனம் ! பின்னே பாழும் பிரம்மச்சாரியான நான் தனிமை கிடைத்தால் பகவத் கீதையா படிக்க முடியும் ! இதைச்சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை ! போலிப்புனிதங்களில் எனக்கு மயக்கமில்லை ! மேலும் இம்மாதிரி எழுதி வைத்தால்தான் இக்கவிதையை நவீனத்தில் சேர்ப்பார்கள் ! இல்லையெனில், மரபு என்று கூறி பரணில் போடுவார்கள் ! எதில் விட்டேன் ? ஆங் ,,,,,,,,,, தனிமையைக் கொண்டாடலாம் ! இன்பத்தில் திண்டாடலாம் ! இன்ன பிற ,,,, இன்ன பிற ,,,,,,,,,, அப்போதுதான் அதைப்பார்த்தேன் ! அதுவொரு நாய் ! பயமுறுத்தியது அதன் வாய் ! அது, பல்லைக்காட்டிக் குரைத்தது ! அதன் பாஷையில் கோபமாய் எதையோ உரைத்தது ! ஐயகோ ! இதென்ன வம்பு ? தேவையில்லாத துன்பத்தின் அம்ப
                                                                     மறதி அந்த சாலையோர கடைக்காரக்கிழவி, பாக்கி சில்லறையை நாளை வாங்கிக்கொள்ளும்படி கூறியிருந்தாள் ! மறுநாள் மழை பெய்ததால் அவள் வரவில்லை ! அதற்கும் மறுநாள், அவள் எனக்குத் தரவேண்டியதை உண்மையாக மறந்துவிட்டாள் ! நான் பொய்யாக மறந்துவிட்டேன் !  
   ஏதோவொன்று நடப்பதற்கு முன்பு சந்தர்ப்பம் ! நடக்கும் போது சம்பவம் ! நடந்த பின் செய்தி !  
   ஒருவனை எனக்குப் பிடிக்கவில்லை ! அந்த ஒருவனை இன்னொருவனுக்கும் பிடிக்கவில்லை ! அந்த இன்னொருவனை எனக்குப் பிடிக்கும் ! ஒருவனை எனக்குப் பிடிக்கிறது ! அந்த ஒருவனை இன்னொருவனுக்கும் பிடிக்கிறது ! அந்த இன்னொருவனை எனக்குப் பிடிக்கலாம் ! அல்லது பிடிக்காமல் போகலாம் !