கடைசியில் நானும் ....
பொதுவாக எனக்கு
கவிதையைப்பிடிப்பதில்லை !
என்னைப்பொறுத்தவரை
கவிதை என்பது
அழகான பொய்
பொய்யான அழகு !
முன்பெல்லாம் அது
எதுகைக்கும் , மோனைக்கும்
முடிச்சுப்போடும்
விததையாய் இருந்தது .
இப்போதோ
உரைநடைகளை
உடைத்து அடுக்கும்
விந்தையாகி விட்டது.
என்னைப்பொறுத்தவரை
கவிதைகள் யதார்த்தத்தின் எதிரிகள் .
அடுத்த வேளை சோற்றுக்கு
வக்கில்லாத எவனும்
வக்கனையாய் கவி பாட முடியாது .
பாரதியை விடுங்கள்
அவன் நியதிகளுக்கு அப்பாற்பட்டவன் .
இங்கு பெரும்பாலான கவிதைகள்
காதலைத்தான் மொழி பேசுகின்றன .
ஒரு மழை தூறும் மதிய வேளையில்
நீ என்னிடம் காதலைச்சொன்னாய்
மறுக்க எனக்கு தைரியமில்லை !
நாம் கடற்கரைகளில் காதலித்தோம் ,
மின்னஞ்சல்களில் நேசித்தோம் ,
செல் பேச்சுக்களுக்கு இடையே தான்
சிறிதளவு சுவாசித்தோம் !
ஒரு அந்தி மாலைப்பொழுதில்
நாம் இணைந்து இருந்த ஏகாந்த வேளையில்
நான் உன்னிடம் சொன்னேன் ,
" அன்பே ,
இனி இருட்டும் முன்பு
இல்லம் திரும்புவோம் " என்று .
நீ வழக்கம் போல
கண்களால் " ஏன் " என்றாய் .
நான் உன்னிடம் ,
" உனது அழகைப்பார்த்து
அவள் வெட்க்கித்தலை குனிந்து கொள்கிறாள் "
என்றேன் பிறை நிலாவைக்காட்டி !
Comments
Post a Comment