Skip to main content
கடைசியில் நானும் ....



பொதுவாக எனக்கு

கவிதையைப்பிடிப்பதில்லை !


என்னைப்பொறுத்தவரை

கவிதை என்பது

அழகான பொய்

பொய்யான அழகு !


முன்பெல்லாம் அது

எதுகைக்கும் , மோனைக்கும்

முடிச்சுப்போடும்

விததையாய் இருந்தது .


இப்போதோ

உரைநடைகளை

உடைத்து அடுக்கும்

விந்தையாகி விட்டது.


என்னைப்பொறுத்தவரை

கவிதைகள் யதார்த்தத்தின் எதிரிகள் .


அடுத்த வேளை சோற்றுக்கு

வக்கில்லாத எவனும்

வக்கனையாய் கவி பாட முடியாது .

பாரதியை விடுங்கள்

அவன் நியதிகளுக்கு அப்பாற்பட்டவன் .


இங்கு பெரும்பாலான கவிதைகள்

காதலைத்தான் மொழி பேசுகின்றன .


ஒரு மழை தூறும் மதிய வேளையில்

நீ என்னிடம் காதலைச்சொன்னாய்

மறுக்க எனக்கு தைரியமில்லை !


நாம் கடற்கரைகளில் காதலித்தோம் ,

மின்னஞ்சல்களில் நேசித்தோம் ,

செல் பேச்சுக்களுக்கு இடையே தான்

சிறிதளவு சுவாசித்தோம் !


ஒரு அந்தி மாலைப்பொழுதில்

நாம் இணைந்து இருந்த ஏகாந்த வேளையில்

நான் உன்னிடம் சொன்னேன் ,


" அன்பே ,

இனி இருட்டும் முன்பு

இல்லம் திரும்புவோம் " என்று .


நீ வழக்கம் போல

கண்களால் " ஏன் " என்றாய் .


நான் உன்னிடம் ,

" உனது அழகைப்பார்த்து

அவள் வெட்க்கித்தலை குனிந்து கொள்கிறாள் "

என்றேன் பிறை நிலாவைக்காட்டி !





Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர