குழந்தையின் தவிப்பு
இரண்டு வாரங்களாக
நாம் பேசிக்கொள்வது இல்லை .
இந்த மூன்று வருடங்களாக
நாம் பேசி பேசித்தானே
காதல் வளர்த்தோம் .
உன்னைககாதலித்த பிறகு
நான் மதுவைத்தொடுவதில்லை .
உன் சிணுங்கல் பார்வையும் ,
கொஞ்சும் சிரிப்பும் ,
வருடும் பேச்சும்
தரும் இதத்தில் - எனக்கு
வேறு போதைகள் பெரிதாகப்படவில்லை
இப்போதெல்லாம் நான் கோவிலுக்கும் போவதில்லை
உன் அருகாமை எனக்கு
சொர்க்கத்தின் கத கதப்பைத் தருவதால்
வேறெந்த வைகுண்டமும் தேவை இல்லை .
நான் உன் மீது அதீத உரிமை
எடுத்துக்கொள்வதாக கோவிக்கிறாய்
உன் சுதந்திரம் தடை படுவதாய்
புகார் சொல்கிறாய் .
காதலியான உனது குறைகளை
உன்னிடமே சொல்லும்போது
உன்னை என் உற்ற தோழியாகத்தான்
கருதிக்கொள்கிறேன் .
தனக்கானது எதுவாயினும்
தனக்கே என இருக்க வேண்டும்
என்ற குழந்தையின் தவிப்புதான்
உன் மீது நான் காட்டும் கோபம் .
எனக்காக இல்லாவிட்டாலும்
நம் காதலுக்காகவாவது
நான் பக்குவப்படும் வரை
நீ
பிற ஆண்களிடம் பேசுவதை
குறைத்துக்கொள் .
Comments
Post a Comment