Skip to main content

Posts

Showing posts from July, 2012
மன்னிப்பு நானும் அவளும் ஓடி வந்துவிட்டோம் ! தனியொரு வாழ்க்கை தேடி வந்துவிட்டோம் ! அவளுக்கு நிச்சயம் ஆகியிருந்தது ! அட்டகாசமாக ஆகிவிட்டுப் போகட்டும் ! அதனால் என்ன ? பதிவு அலுவலக வாயிலில் ஓரமாய் வீற்றிருந்த ' கோயிலில் ' நண்பர்கள் சூழ்ந்து அன்பால் எங்களுக்கு வேலி கட்ட, நான் அவளுக்குத் தாலி கட்டினேன் ! எதிர்காலம் நினைத்து அவள் வருந்த, ஆறுதல் வார்த்தைகளால் நான் அவளுக்கு மருந்த, அப்புறம், நல்லதொரு உணவகத்தில் நண்பர்கட்கு நாங்கள் விருந்த, அவர்களும் மகிழ்வோடு அருந்த........... இருமனம் இணைந்து விட்டது ! திருமணம் முடிந்து விட்டது ! மாலை வந்தது ! மாலைக்கு வேலை வந்தது ! நானும் அவளும் தனித்து விடப்பட்டோம் ! இன்ப மொழிகளால் இனித்து விடப்பட்டோம் ! பூ, பழம் , கட்டில் நான்,அவள் ! பலநாள் பசித்தவன் அன்னம் தொடுவது போல நான் அவள் கன்னம் தொட்டேன் ! அந்தோ .......... கலங்கியிருந்தாள் பெண் ! கசிந்து கிடந்தது கண் ! ஏன் இந்த கண்ணீர் தோரணம் ? என்னவாயிருக்கும் அதற்குக் காரணம் ? கேட்டேன் ! அம்மா என்று விம்மினாள் ! அப்பா என்
பழைய காதலி அவள், நிறம் மாறியிருந்தாள் உரு மாறியிருந்தாள், ஆனாலும் அந்தக் கண்கள் காட்டிக்கொடுத்து விட்டன, அவள், அவள் தானென்று ! ஆறுவயது குழந்தையொன்று அவளை அம்மாவென்று அழைத்தது ! ஒரு சபிக்கப்பட்ட நொடியில், எங்கள் பார்வைகள் மீண்டுமொருமுறை சந்தித்துக் கொண்டன ! அவள் கண்களில் அந்தக் கடைசி ஈரம் இன்னும் காயவில்லை ! அதிர்ச்சியை வெளிக்காட்டாத முதிர்ச்சியோடு புன்னகைக்க முயன்றாள் ! குழந்தை அவளைப் போலவேயிருந்தது ! அது " அங்கிள் "  என்றழைத்ததை அநேகமாய் அவள் ரசிக்கவில்லை ! நின்றபடி நாகரிக இடைவெளியில் நானும் அவளும் நலம் விசாரித்தோம் ! முகம் பார்த்துப் பேசாமல் - அவள் நகம் பார்த்துப் பேசினாள்  ! நான், நிலம் பார்த்துப் பேசினேன் ! சில வருடங்கள் சில வார்த்தைகளில் முடிந்து விட, மௌனம் வந்து இருவர் உதட்டிலும் படிந்து விட ............. அதன் பிறகு எங்கள் உணர்வுகள் மட்டும் ஊமையாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தன ! இறுதியாக, விடை பெற்றுவிட்டு நடை பயிலும்போது ஒருமுறை திரும்பிப்பார்த்தாள் ! வெறுமனே திரும்பிப் பார்த்தாளோ ? வேண்டுமென்
ஒரு காதலன் பேசுகிறான் என் பதில்கள் என்னவென்று தெரிந்தும் நீ கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறாய் ! @@@@@@ ஒவ்வொரு முறையும் நீ கண்ணீர் சிந்தும் போது எங்கேயோ ஒரு பூ நிச்சயம் உதிர்கிறது ! @@@@@@ எப்படியெல்லாமோ சமாதானம் செய்தும் வராத உன் புன்னகை, பிறகு நான் மௌனமாகிவிடும் போது மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறது ! @@@@@@ நீ அருகிலிருக்கும் போதெல்லாம் சத்தியமாய் எனக்கு பிற பெண்கள் தெரிவதேயில்லை ! @@@@@@ இப்போதெல்லாம் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கவென்றே சில்லறைகள் சேகரிக்கிறேன் நான் ! @@@@@@ அதென்னமோ தெரியவில்லை உன் கண்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பேச்சு நின்றுவிடுகிறது ! @@@@@@ மழை பெய்கிறதே என்று நாம் இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம் ! பெய்வதை மறந்து விட்டு நாம் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தது சொட்டியபடி அந்த மழை !
 ஒரு விபத்து வெகு சீக்கிரமாய் வீடு போகவேண்டும் ! ஊரிலிருந்து வந்திருக்கிறாள் மனைவியின் தங்கை ! வற்றாத பேச்சில் அவள் ஒரு கங்கை ! இன்றைக்கென்று அந்த சொட்டைத்தலையன் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்கிறான் ! ( குறிப்பு :  மேலதிகாரிக்கு முன்மண்டையில் முடி இல்லை ) அதொன்றுமில்லை அவசரமென்று அழுதுகொண்டே செய்த பணியல்லவா ! பழுது இருக்கத்தான் செய்யும் ! புள்ளிவிவரத்தில் புள்ளி ஒன்று பிசகிவிட்டது ! பத்து நூறாகிவிட்டது ! கண்டறிவதற்குள் மூளை உருகி ஆறாகிவிட்டது ! அப்பாடா ! அப்புறம், ஒருவழியாய் மணி அடித்தது ! பணி முடிந்தது ! போதுமடா இந்த ஆலைக்காட்சி ! இனி போகவேண்டும் குடும்பத்தோடு மாலைக்காட்சி ! வாகனத்தில் விரைந்தேன் ! வழிநெடுக ஒலிப்பானால் இரைந்தேன் ! திடீரென்று, சாலையில் ஓர் கூட்டம் ! ஒவ்வொருத்தன் முகத்திலும் இனம் புரியாத வாட்டம் ! குறுக்கே வந்தவனைத் திட்டினேன் ! தலையைக் கொஞ்சம் எட்டினேன் ! பார்த்தேன் ! அவன் இவ்வுலகை மறந்திருந்தான் ! ஏறத்தாழ இறந்திருந்தான் ! ச்சே ! என்ன ஒரு இரக்கமில்லாத விபத்து ! இங்கிருந்து கிளம்புவதுதான்
ஒரு நாளில் ஒரு பகலில் ................ ( சிறுகதை ) வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. சட சட வென்று சோ எனப் பெய்யும் மழை ! இம்மாதிரி மழை ,  பெய்யும் வரை பெய்து விட்டு அரை மணியில் விட்டுவிடும். அரை நாள் விடுப்பு எடுக்கலாமா என யோசித்தேன். தலை போகும் அளவு இப்போதைக்கு இங்கொன்றும் அவசரமில்லை , பெரிய தலையே விடுப்பில் இருக்கிறது. சின்னத்தலையை எளிதாக சமாளித்துவிடலாம். பிட்டைப் போட்டுப் பார்ப்போம் என்று முடிவெடுத்து தொலைபேசியில் எண்களை ஒத்தினேன். அப்புறம் , பெரியதலை என்பவர் சீனியர் மேனேஜர் , சிறிய தலை என்பவர் மேனேஜர் ................. எங்கள் மேனேஜர் கொஞ்சம் ஷோக்குப் பேர்வழி ! அவரிடம் பர்மிஷன் கேட்பது மிக எளிது. ரிங் போய்க்கொண்டிருந்தது.சட்டென்று " சொல்லுங்க ரங்கராஜ் " என்ற குரல் ! மனுஷன் இப்படி ' ங்க ' போட்டுப் பேசினால் நல்ல மூடில் இருக்கிறாரென்று அர்த்தம்.   " சார் ..... ஒரு ஆப் டே பர்மிஷன் வேணும் ! வீட்ல முக்கியமான கெஸ்ட் வராங்க ............" என்று இழுத்தேன்.   " ஷிப்ட்ல யார் இருக்காங்க மேன் ? " என்றார்.   "  க