Skip to main content
என் மனதைத் தந்து விடாதே



கல்லூரி

முடிந்தமாலை வேளை !



நாம் இருவருமே

பேருந்துக்காகக் காத்திருந்தோம் !


மலர்க்கொத்து மகளிர் குழுவில்

நீ மட்டும் எனக்கு

ஒற்றை மலராய்

தனித்துத் தெரிந்தாய் !


பேருந்தைப் பார்க்கும் சாக்கில்

நான் உன்னைப்பார்த்தேன் !


என் பார்வையை

நீ உணர்ந்து விட்டதை

உன் கன்னச்சிவப்பு காட்டிக்கொடுத்தது !


என் காதுமடல் வெப்பத்தை விட

உன் இதயத்துடிப்பின் சத்தத்தை

அதிகமாய் உணர்ந்தேன் !


இளமையின்

இன்ப அழுத்தத்தை

இருவருமே அனுபவித்தோம் !


பார்த்துக்கொண்டே இருந்த என்னை

பளிச்சென பதிலுக்குப் பார்த்தாய்

என் பாதங்கள் பூமியைப் புறக்கணித்தன !


நம் பார்வைகள்

புணர்ந்து கொண்டதில் ,

குறுநகைக் குழந்தையை

இதழில் ஈன்றெடுததாய் !


நல்லவேளை நம்மைத்தவிர

நம்மை யாரும் கவனிக்கவில்லை !


நம்

பார்வைகள் தழுவிக்கொண்ட

பத்து வினாடிகளில்

பத்தாயிரம் முறை

புதிதாய்ப் பிறந்திருந்தேன் !


பாவை உந்தன்

பார்வையால் தடவப்பட்டு

பரிசுத்தனாய் மாறிப்போனேன் !


உன் தலையை வருடிக் கோதியபடி

என் உயிரை உருவி எடுத்தாய் !


"தொடர்ந்து பார் " என

கண்களால் கட்டளையிட்டேன் !


"பார்த்தது போதும் " என

பார்வையால் பதில் சொன்னாய் !


சட்டென்று

தலை நிமிர்ந்த நாணத்தால்

தலை குனிந்து தரையைப்பார்த்தாய் !


பேருந்து வந்தது

முன்படியில் நீ

பின்படியில் நான் !


உள்ளே நாம் பார்த்துக்கொள்ள

சந்தர்ப்பம் வாய்க்கவில்லை !


"அன்பே பறித்துக்கொண்ட

என் மனதை தயவு செய்து

திருப்பித்தந்துவிடாதே ! " என்று

மாலையில் இல்லம் திரும்பியதும்

காதல் புறாவின் காதில் சொல்லி ,

உன்னிடம் தூது அனுப்பினேன் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...