Skip to main content
என் மனதைத் தந்து விடாதே



கல்லூரி

முடிந்தமாலை வேளை !



நாம் இருவருமே

பேருந்துக்காகக் காத்திருந்தோம் !


மலர்க்கொத்து மகளிர் குழுவில்

நீ மட்டும் எனக்கு

ஒற்றை மலராய்

தனித்துத் தெரிந்தாய் !


பேருந்தைப் பார்க்கும் சாக்கில்

நான் உன்னைப்பார்த்தேன் !


என் பார்வையை

நீ உணர்ந்து விட்டதை

உன் கன்னச்சிவப்பு காட்டிக்கொடுத்தது !


என் காதுமடல் வெப்பத்தை விட

உன் இதயத்துடிப்பின் சத்தத்தை

அதிகமாய் உணர்ந்தேன் !


இளமையின்

இன்ப அழுத்தத்தை

இருவருமே அனுபவித்தோம் !


பார்த்துக்கொண்டே இருந்த என்னை

பளிச்சென பதிலுக்குப் பார்த்தாய்

என் பாதங்கள் பூமியைப் புறக்கணித்தன !


நம் பார்வைகள்

புணர்ந்து கொண்டதில் ,

குறுநகைக் குழந்தையை

இதழில் ஈன்றெடுததாய் !


நல்லவேளை நம்மைத்தவிர

நம்மை யாரும் கவனிக்கவில்லை !


நம்

பார்வைகள் தழுவிக்கொண்ட

பத்து வினாடிகளில்

பத்தாயிரம் முறை

புதிதாய்ப் பிறந்திருந்தேன் !


பாவை உந்தன்

பார்வையால் தடவப்பட்டு

பரிசுத்தனாய் மாறிப்போனேன் !


உன் தலையை வருடிக் கோதியபடி

என் உயிரை உருவி எடுத்தாய் !


"தொடர்ந்து பார் " என

கண்களால் கட்டளையிட்டேன் !


"பார்த்தது போதும் " என

பார்வையால் பதில் சொன்னாய் !


சட்டென்று

தலை நிமிர்ந்த நாணத்தால்

தலை குனிந்து தரையைப்பார்த்தாய் !


பேருந்து வந்தது

முன்படியில் நீ

பின்படியில் நான் !


உள்ளே நாம் பார்த்துக்கொள்ள

சந்தர்ப்பம் வாய்க்கவில்லை !


"அன்பே பறித்துக்கொண்ட

என் மனதை தயவு செய்து

திருப்பித்தந்துவிடாதே ! " என்று

மாலையில் இல்லம் திரும்பியதும்

காதல் புறாவின் காதில் சொல்லி ,

உன்னிடம் தூது அனுப்பினேன் !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர