வாழ வைக்கும் காதல் பண்டிகை நாளொன்றில் பார்த்துச் சிரித்தவளோடு பேசுவதெப்படி என அனுபவப்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்டபடிதான் ஆரம்பித்தேன் நானும் ! ஒரு வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் அலைந்து திரிந்து அவள் இல்லம் கண்டுபிடித்த போது , கோலமிட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்து சிலிர்த்து சிவந்து சிரித்துவிட்டுச் சென்றாள் ! அவள் இட்டிருந்த வண்ணக்கோலத்தை விடவும் அழகாக இருந்தது பாதவிரலால் அவள் இட்ட வெட்கக் கோலம் ! இல்லாத கல்லூரிக்கு வராத பேருந்திற்காய் நிறுத்தத்தில் நானும் நின்றிருப்பேன் அவளுக்கான பேருந்து வரும்வரை ! அவள் , கலந்த கூந்தலை சரிசெய்யும் சாக்கில் கடைக்கண்ணால் எனைப் பார்த்து குற்றுயிரைக் குதறி எடுப்பாள் ! என் மனதை ஆனந்தத்தில் அலைய வைக்கவே காற்று அவள் கூந்தலை - அடிக்கடி கலைய வைக்கும் ! ஒரு நாள் , கண்களால் என்னைக் கவனித்துக் கொண்டே - யாரிடமோ எண்களால் பேசினாள் ! நான் , குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல் பண்களால் நிரம்பியது மனம் அன்றைய தினம் ! அதன் பிறகு ஒவ்வொரு பொழுதிற்கும் ஒவ்வொரு வணக்கம் சொல்லி , வாழ்க்கை , வணக்கங்களுக்கு இணக்கமானது ! தினந்தோறும்