Skip to main content

Posts

Showing posts from July, 2011
வாழ வைக்கும் காதல் பண்டிகை நாளொன்றில் பார்த்துச் சிரித்தவளோடு பேசுவதெப்படி என அனுபவப்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்டபடிதான் ஆரம்பித்தேன் நானும் ! ஒரு வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் அலைந்து திரிந்து அவள் இல்லம் கண்டுபிடித்த போது , கோலமிட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்து சிலிர்த்து சிவந்து சிரித்துவிட்டுச் சென்றாள் ! அவள் இட்டிருந்த வண்ணக்கோலத்தை விடவும் அழகாக இருந்தது பாதவிரலால் அவள் இட்ட வெட்கக் கோலம் ! இல்லாத கல்லூரிக்கு வராத பேருந்திற்காய் நிறுத்தத்தில் நானும் நின்றிருப்பேன் அவளுக்கான பேருந்து வரும்வரை ! அவள் , கலந்த கூந்தலை சரிசெய்யும் சாக்கில் கடைக்கண்ணால் எனைப் பார்த்து குற்றுயிரைக் குதறி எடுப்பாள் ! என் மனதை ஆனந்தத்தில் அலைய வைக்கவே காற்று அவள் கூந்தலை - அடிக்கடி கலைய வைக்கும் ! ஒரு நாள் , கண்களால் என்னைக் கவனித்துக் கொண்டே - யாரிடமோ எண்களால் பேசினாள் ! நான் , குறிப்பறிந்து குறித்துக்கொண்டதும் - காதல் பண்களால் நிரம்பியது மனம் அன்றைய தினம் ! அதன் பிறகு ஒவ்வொரு பொழுதிற்கும் ஒவ்வொரு வணக்கம் சொல்லி , வாழ்க்கை , வணக்கங்களுக்கு இணக்கமானது ! தினந்தோறும்
பேரின்பம் என்பது .......... அது ஒரு பிரம்மச்சர்யப் பகல் பொழுது ! சூழல் முழுக்க சூனியம் அப்பிக்கிடந்தது ! இளமைக்கு , தனிமைதரும் மானியம் இந்த சூனியம் என்று அல்லாடும் மனதை ஆறுதல்படுத்த முயன்றேன் ! அச்சமயத்தில் தொலைக்காட்சியில் ஓர் கொலைக்காட்சி கண்டேன் ! மண்டை பிளக்கும் சண்டைப்படம் அது ! தலையில் முக்காடு போட்டுக்கொள்ள வெள்ளைத்துண்டை வினியோகிஸ்தர்களுக்கு விநியோகித்த படமும் கூட ! அப்படத்தில் இடையழகி ஒருத்தியின் இடையாட்டும் பாட்டொன்று இடைவேளைக்குப் பிறகு இடையே சொருகப்பட்டிருக்கும் என்று நண்பனொருவன் பேச்சின் இடையே சொல்லியிருந்தானென்று உப்பிலாத காட்சிகளை அந்த ஒரு காட்சிக்காக சப்புக்கொட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன் ! இடைவேளைக்குப் பிறகு சட்டென்று அப்பாட்டு வருகையில் பட்டென்று போனது மின்சாரம் ! அய்யகோ ! எப்போதும் போவதுபோல இப்போது போன மின்சாரம் - இனி எப்போது வருமோ என ஏங்கிக் காத்திருந்தேன் ! இதுபோன்ற சமயங்களில் தான் ஒரு காதலி அல்லது ஒரு தோழியின் சேவை மிகவும் தேவை ! அவர்களோடு பேசப்பேச காமத்தின் சாரம் நீர்த்துப் போய்விடும் ! தாபத்தின் காய்ச்சல் வேர்த்துப் போய்வ
வாலிபா ........... வாலிபா , காலையில் எழும்போதே ஆலைக்குப் போய் வேலை செய்வதென்றாலே வெறுப்பாய்த்தானிருக்கும் ! எல் தோன்றும் முன்பே பல் துலக்க வேண்டியதிருக்கும் ! ( எல் - சூரியன் ) குளிப்பு நடக்கும்போது களிப்பு இருக்காது ! சீரணம் சீர்கேடும் என்கிற காரணம் சொல்லி , சிலநேரங்களில் நீ சிற்றுண்டியை சீண்டாமலே போகலாம் ! அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்தாலே இக்கட்டுகள் உன்னோடு சொக்கட்டான் ஆடலாம் ! அடுப்பு எரிவது போல் - உன்னுள் கடுப்பு எரியலாம் ! மேலதிகாரியின் முகம் பார்க்காத நாளையே மாபெரும் நாளாய் மனது கொண்டாடலாம் ! ஒருவாய் சோற்றிற்கும் ஒருபாய் உறக்கத்திற்கும் பகலெல்லாம் பேய்பாடு படுவதும் நித்தம் நித்தம் நாய்பாடு படுவதும் எதற்க்காக ? சிறிது சிறிதாய் சாவின் பக்கம் சாயத்தானே ? ஒருநாள் அனைத்தும் அடங்கி ஒயத்தானே ? என்று நீ தத்துவங்களின் தத்துப்பிள்ளை ஆகலாம் ! ஆனாலும் வாலிபா ......... சிகரங்களில் சிம்மாசனம் கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம் பாடுகள் பட்டு மேடுகள் ஏறியவர்கள்தான் என - வரலாற்றின் ஏடுகள் புரட்டிப்பார் புரியும் ! நெற்றியின் வியர்வை நிலத்தில் விழாவிட்டால் - உனது வெற்றியின் வேர் உலர்ந்து விடும் ! உழை
அன்பே , நம் மீது நமக்கு உள்ள காதல் , என்றும் அழியாத உள்ளக் காதல் ! நீயில்லாத போதும் உன்னையே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் ! உனக்காகக் காத்திருக்கையில் நேரம் போக , நொடிகளை ஒவ்வொன்றாக நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் ! உன்னோடு இருக்கும்போது இன்னும் அழகாகத் தெரிகிறது பார் ! வெட்கப்பட்டது போதும் கண்களைத் திறந்து அதன் அழகைக் கொஞ்சம் பார் ! ( பார் - உலகம் , பார் - பார்த்தல் ) அடடா ! பேசிக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் போய்விட்டதே ! உன் இதழ் திறந்து ஒரே ஒருமுறை நகையடி ! அந்த உன் புன்னகை மினுமினுத்தபடி வெளிச்சத்தை முணுமுணுக்கும் பொன் நகையடி ! ( நகை - சிரிப்பு , நகை - அணிகலன் ) அடியே , பொழுதுகளின் வீணையில் காதலின் நரம்பை சிறிது மீட்டு ! பிறகு , பெருமுயற்சி செய்தும் எடுக்க முடியாது உன்னிலிருந்து என்னை மீட்டு ! உன் அருகாமையில் சுத்தமாய் அடங்கி விடுகிறது என் நாடி ! அதனால் தானோ என்னவோ வேகமாய்ப் பயணிக்கின்றன என் ஐம்புலன்களும் உன்னையே நாடி ! எனக்குத் தெரிந்தவரை அந்தப் பூங்காதான் நாம் காதலின் பாடம் கற்ற பள்ளியறை ! கூட்டம் குறைந்த தருணங்களில் அதுவே , நான் உன்னை செல்லமாக சீண்டி விளையாடும் பள்ளியறை ! நீ உ
அரசியல்வாதிகளே .......... அரசியல்வாதிகளே , உங்கள் அறிக்கைகளில் இலவசங்களே இலக்காக இருப்பதால் தொலைநோக்கு என்பது - உங்களுக்கு தொலைந்த நோக்கு ஆகிவிட்டது போலும் ! அரசியல்வாதிகளே , சமச்சீர்கல்வி போன்று சமச்சீர்சமுதாயம் என்றொரு சீர்மிகு கருத்தை உங்கள் சிந்தையில் என்றாவது சீர்தூக்கிப்பார்த்திருக்கிறீர்களா ? அரசியல்வாதிகளே , உங்களுக்கிடையேயான ஏட்டிக்குப்போட்டியில் எட்டி உதைக்கப்படுவதெல்லாம் ஏதுமற்ற மக்கள்தான் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள் ? அரசியல்வாதிகளே , மதுபோதை போல மாதுபோதையும் அரசுடைமையாக்கப்படும் என்று ஆசைகாட்டியே நாளை ஆட்சியைப் பிடித்தாலும் பிடிப்பீர்கள் ! அப்போது , விபச்சாரதிற்கும் விபரமானதொரு பட்டயப் படிப்பு வந்து பட்டையைக் கிளப்பப்போகிறது ! அரசியல்வாதிகளே , " யார் செய்தார்கள் ? " என்பதைவிட " என்ன செய்தார்கள் ? " என்ற கருத்தே தராசின் முள் போல உங்கள் சிரசில் நிலை பெறட்டும் ! அரசியல்வாதிகளே , பேசுவதும் , கேட்பதும் எழுதுவதும் , எப்போதும் சுகமானவைகள் ! அனுபவத்தின் வலி அனுபவிப்பவனுக்குத் தான் தெரியும் ! களத்தில் இறங்கிக் காரியம் ஆற்றாதவரை களங்கம் என்
மேலதிகாரிகளே .............. மேலதிகாரிகளே , அணியில் நீங்கள் இல்லாவிடினும் பிணி ஏதும் இன்றிப் பணி நடந்துகொண்டுதானிருக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ? மேலதிகாரிகளே , அறிவுரைகளை நீங்கள் அடுக்கிக்கொண்டே போனால் மதிப்பிழந்து போகும் உங்கள் " முகவுரை " என்பதை மனதில் பதித்துக்கொள்ளுங்கள் ! மேலதிகாரிகளே , சுட்டுவதாலும் குட்டுவதாலும் உங்கள்மீது வராத மரியாதை , ஆறுதலாய்த் தோளைத் தட்டுவதால் வருமென்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் ! மேலதிகாரிகளே , உங்கள் புத்தியில் அமிழ்ந்திருக்கும் பள்ளமும் , கண்கள் உமிழ்ந்திருக்கும் கள்ளமும் , ஆகிய இவையிரண்டும் உங்கள்காலடியில் நீங்கள் பறிக்கும் பள்ளமென்பதை உள்ளத்தால் உணர்ந்திடுங்கள் ! மேலதிகாரிகளே , பொறுப்பாய் இருக்கிறேனென்று எந்நாளும் , வெறுப்பாய் நீங்களிருந்தால் , நற்பெயரென்பது உங்களுக்கான மறுப்பாகிவிடும் மறந்துவிடாதீர்கள் ! மேலதிகாரிகளே , உங்கள் கர்வமுடிச்சு அவிழ்ந்தாலே சர்வசிக்கல்களும் சரியாகுமென்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருக்கிறதா ? மேலதிகாரிகளே , அனுபவம் தரும் " மன - பாடத்தை " விடவா புத்தகத்தின் மன
ஊடல் இருந்தாலும் காதல் குறைவதில்லை ......... இப்போதெல்லாம் காதலோடு தொடங்குகிற நம் உரையாடல் , முடியும் போது மோதலோடுதான் முடிகிறது ! முன்பெல்லாம் காதலின் பசிக்கு ஊடலை , ஊறுகாய் போலத்தான் தொட்டுக்கொண்டிருந்தோம் ! இப்போது அதையே உணவாக மாற்றி உணர்வுகளை ஓயாமல் சுட்டுக்கொண்டிருக்கிறோம் ! நான்கு நாள் தாடியோடு நானிருந்தது நாகரிகமாயில்லை என நறுக்கென்று நீ எடுத்துரைத்ததும் , மாலை நெருங்கும் போது மதிய உணவு கொண்டால் உடலானது உபாதைகளின் புதிய உணவு ஆகிவிடும் என்று நான் திட்டியபடியே உன் தலையில் குட்டியதும் என அழகாய்த்தான் ஆரம்பித்தது நம் முதல் ஊடல் ! அழைத்த போது அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது எங்குதான் தொலைந்தாய் என எதோ ஒரு மதியத்தில் எக்குத்தப்பாய் நான் உன்னிடம் எகிறியதும் , " அது என் தனிப்பட்ட அந்தரங்கம் . " என தந்திரமாய் நீ என்னைத் திருப்பிதாக்கியதும் என நம் இரண்டாவது ஊடலே இதயங்களில் இடியை இறக்கியது ! வலையில் தான் உலவிக்கொண்டிருக்கிறாயே சிறிது அரட்டையடிக்கலாம் என ஆசையைத் திரட்டி நான் அன்பு அழைப்பு விடுத்தால் , வேலையிருக்கிறது வேண்டாம் என என்னை விரட்டி விடுகிறாய் ! கோபத்தில
காதல் வந்த பிறகு ........ எப்போதும் இருக்கும் உலகம் தான் ! இப்போது மட்டும் நிறம் மாறித் தெரிகிறது ! எப்போதும் பார்க்கிற மனிதர்கள்தான் ! ஆனால் அவர்களின் மகிழ்வான தருணங்களில் அவர்களுக்கு நான் எதிர்படுகிறேன் ! எப்போதும் இருக்கும் அதே அலுவலகம் தான் ! இப்போதுமட்டும் கணிப்பொறியின் முன்பு அமர்ந்தாலே கவிதை கவிதையாக கற்பனை விரிகிறது ! எப்போதும் கேட்கிற பாடல்தான் ! இப்போதுமட்டும் அதன் அர்த்தங்களை உணர்ந்துகொண்டு ஆனந்தப்படுகிறது மனது ! இப்போதெல்லாம் மழை வந்தால் கண்கள் முதலில் வானவில்லைத்தான் தேடுகின்றன ! இப்போதெல்லாம் சக ஊழியனோடு சண்டையே வருவதில்லை ! மொட்டைமாடியை விட உன்னதமான ஒரு இடம் உலகத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன ? இப்போதெல்லாம் நானிருக்கும் இடத்தில் அழகான பெண்களும் இருக்கிறார்கள் ! ஆனால் , அவர்களைப் பார்க்கத்தான் ஏனோ தோன்றுவதில்லை ! இப்போதெல்லாம் குறைவான உணவை நீண்ட நேரம் உண்கிறேன் என்று அம்மா அடிக்கடி குறைபட்டுக் கொள்கிறாள் ! இப்போதெல்லாம் தன்னுடைய அழகுசாதனப் பொருட்களை நானெடுத்துப் பூசிக்கொள்கிறேன் என்று தங்கை தினமும் என்னை ஏசி