Skip to main content

Posts

Showing posts from May, 2011
காதல் தருணங்கள் அந்தப் பெயரை அதற்கு முன்பு பிடிக்காமலிருந்து , அவள் பெயர் அதுதான் என்றதும் அதுமட்டுமே இப்போது அதிகமாய்ப் பிடிக்கிறது ! அவளால் இடறப்பட்டதில் , இப்போதெல்லாம் இதயம் இடதுபக்கம் இருப்பதே சிறிது சந்தேகமாய்த் தான் இருக்கிறது ! அது என்னமோ தெரியவில்லை அவள் பெயர் வைக்கப்பட்ட எந்தக்கடைக்குமே எளிதில் நான் வாடிக்கையாகி விடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது ! சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் ! அவளும் பார்க்கிறாள் என்பதால் இப்போதெல்லாம் தொலைக்காட்சித் தொடர்கள் அத்தனையும் எனக்கு அப்படியே அத்துபடி ! இப்போதெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு மறுக்க மனமே வருவதில்லை ! அவள் சொன்னபடியே அந்த ஆரஞ்சு நிற சட்டையில் நான் அழகாய்த்தான் இருக்கிறேன் ! பக்கத்துவீட்டுச் சிறுமி பரிட்சையில் தேறவேண்டுமென்று பக்கம் பக்கமாய் ஸ்ரீ ராமஜயம் எழுத அவளால் எப்படித்தான் முடிகிறதோ ? அவளுடன் அமர்ந்து பயணித்ததில் , நடத்துனர் தரவேண்டிய நான்கு ரூபாய் சில்லறையை நானெப்படி மற
பழகிப் புளித்த தயிர் உருட்டிப் பார்த்தேன் விழவில்லையடி தாயம் ! மருந்தில்லாமல் ஆறவில்லை மனக் காயம் ! முடவன் , கொம்புத்தேனுக்குப் பட்ட ஆசை ! வேதனையில் , நரைத்தே போய் விட்ட மீசை ! நெஞ்சுக்கு பாரமடி இந்த மூச்சு ! மனதில் விழுந்ததோ வெட்டரிவாள் வீச்சு ! இனி நான் படிக்க நினைப்பது ராமாயணம் ! முடிக்க நினைப்பது , உன் பெயரின் பாராயணம் ! இதயத்தைக் கொடுத்தேனே உனக்கு யாசகம் ! அதன் துடிப்பை நிறுத்தியது உனது ஒரு வாசகம் ! மறந்து விடு என்றதற்கு , இறந்து விடு என்றிருக்கலாமே - என் இறந்த காலக் காதலியே ! நீ , தூரத்தில் தெரிந்த கோணல் நீர் ! கிட்டே வந்ததும் , காணாமல் போன கானல் நீர் ! நான் , வடையைத் தொலைத்த காக்கை ! உடையில் நடமாடும் யாக்கை ! " ஊற்றிப்பார்த்தேன் " அடங்கவில்லையடி புகைச்சல் ! இது , கையில்லாதவனுக்கு , முதுகில் வந்த நமைச்சல் ! மறந்து போனது குயிலோசை கேட்கும் நம் பூங்கா ! உன் குரலோசை இன்றி என்
மனிதம் ஏதாவது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காலையில் நீங்களாக எழுந்து தேநீர் தயாரித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் துணைவியைத் தட்டி எழுப்பி இருக்கிறீர்களா ? ஏதாவது ஒரு விடுமுறை நாளில் தொலைக்காட்சியைத் துறந்து விட்டு , தாயின் மடியில் தலைசாய்த்துப் பேசியபடியே தூங்கிப் போயிருக்கிறீர்களா ? காதலியோடு நடக்கும்போது அழகான எவளாவது எதிரே வந்தால் , கண்ணியமாகத் தலைகுனித்து கடந்து சென்றிருக்கிறீர்களா ? அது போலவே , காதலியோடு நடக்கும்போது அழகான எவனாவது எதிரே வந்தால் , பெருந்தன்மையோடு உங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பியிருக்கிறீர்களா ? உங்களுக்குக் கீழ் பணிபுரியும் உங்கள் ஊழியனோடு மதிய உணவு உண்டபடியே மனம் விட்டுப் பேசியிருக்கிறீர்களா ? பக்கத்து வீட்டுத் தோட்டத்தின் வாடிய ரோஜாச்செடிக்காக மாலையில் , மழை வரவேண்டுமென்று வருண பகவானிடம் விண்ணப்பம் செய்திருக்கிறீர்களா ? பேருந்து நிறுத்தத்தில் அம்மாவோடு வந்த சிறுவனைக் கண்டு பிடித்துக் கொண
யாருமே இல்லாத கடையில் .............. யாருமே இல்லாத கடையில் யாருக்காக நான் தேநீர் ஆற்றுகிறேன் ? வார்த்தைகளில் , நான் நிகழ்த்திய சித்து விளையாட்டை , எண்ணங்களில் ஊறித்திளைத்த பித்து விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து மூடுவிழா நடத்த முஹூர்த்த நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ! எனக்கும் ஒரு ரசிகன் இருக்கிறான் . யார் என்கிறீர்களா ? நான் எழுதியதை நானே படிக்கும் நான் தான் அவன் ! காதலிக்காமலே காதலை எழுதி , கானல் நீரில் மீன் பிடிக்கக் கற்றேன் ! சக மனிதனின் சூழல் திருடி ஊழல் செய்யும் வித்தையில் முதுகலைப் பட்டம் பெற்றேன் ! அமிலத்தைத் தரம் பார்க்கையிலும் அழகுணர்ச்சியின் கரம் தானே ஓங்கியிருந்தது ! ரசாயனங்களின் நடுவே ரசனைகள் , ரகசியக் கூட்டம் போட்டது தான் குற்றமோ ? பணிநேரப் புள்ளிவிவரங்களுக்கு நடுவே கவியின் மஞ்சத்தில் பள்ளி கொள்வதென்பது கட்டாந்தரையில் கர்ணமடிப்பதை விடக் கடூரமானது ! கண்ணாடிக் குடுவைகளை நிரப்பும் இடத்தில்
குறிப்பு : எனது கல்லூரித்தோழி சங்கீதாவின் திருமணத்திற்கு என்னால் இயன்ற அன்புப்பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன் வாழ்த்த வயது இருந்தாலும் வணங்குகிறேன் உங்களுக்காக இறைவனை ! மலரின் மணம் நிலவின் குளிர்ச்சி தேனின் இனிப்பு வானின் நீலம் இந்த வரிசையில் இனி கார்த்தியின் சங்கீதா , சங்கீதாவின் கார்த்தி ! நோபல் பரிசு போல உலகின் உன்னத தம்பதிகளுக்கான பரிசு உங்களைப் பார்த்து உருவாக வேண்டும் ! சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உங்கள் திருமணம் , இனி உங்களுக்கான சொர்க்கத்தையும் நிச்சயம் செய்யட்டும் ! இனி வரும் உங்கள் வாழ்நாட்களில் ஒளிவீசும் விளக்காக நீங்கள் விளங்குவதற்காகத்தான் உங்களுக்கு வெள்ளிக்கிழமையில் திருமணம் வைத்துள்ளார்கள் ! ஏனெனில் , வெள்ளிக்கிழமை , விளக்கேற்ற உகந்த நாள் ! தித்திப்பான உங்கள் தாம்பத்தியத்தால் , உங்களுக்குள் மூன்றாவதாய் ஒரு சொந்தம் விரைவில் உருவாகட்டும் என்று தான் மூன்றாம் தேதி பார்த்து உங்கள் திருமணம் தானாய