Skip to main content

Posts

Showing posts from July, 2014
சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற
கண்ணில் தட்டுப்பட்ட பட்டாம்பூச்சி   காற்றெனும் சமுத்திரத்தில் வாழும் மீன்களென மீன்கள் நம்மை நினைத்துக் கொண்டிருக்கலாம் ! ஆனால் எந்த மீனும் இங்கே வந்து மீன் பிடிப்பதில்லை ! =============================== உங்கள் முன்பு தென்படும் நம்பிக்கை என்ற கூட்டில் எந்தப் பறவையாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம் ! உண்மை என்ற கல்லெறிந்து விடாதீர்கள் ! =============================== அழகாயிருந்தது  என்றாலும் வந்து தொலைக்காமலேயே இருந்திருக்கலாம் , ஏற்கனவே யாரோ எழுதிவிட்டது போலத் தோன்றிய நானெழுதிய அந்தக் கவிதை ! =============================== சுவையாக இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன சூடாக இருக்கும் உணவுகள் ! =============================== மருத்துவனாவேன் என்றான் ஒருவன் ! பொறியாளனாவேன் என்றான் ஒருவன் ! விஞ்ஞானியாவேன் என்றான் ஒருவன் ! விவசாயியாவேன் என்றான் ஒருவன் ! நான் ஓடிச்சென்று அந்த வருகால விவசாயியைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினேன் ! நாளையவன் வளர்க்கப் போகும் நெற்கதிருக்கு என் கண்ணீர் உரமாகட்டும் ! ================================ ஒற்றை பிராமணனும் ஒரு விதவையும் எதிரெதிரே கடந்து போனார்கள் ! திகை
அது எதோவொரு நாளில் அது எனக்கு அறிமுகமானது ! அன்றிலிருந்து அது எனக்கு உற்ற நண்பன் ! யாராவது அதைச் சீண்டினால் எனக்கு பொல்லாத கோபம் வரும் ! திடீரென்று ஒருநாள் அது என்னைத் தாண்டி வளர்ந்து நின்றது ! அது சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்தேன் ! எனக்கே தெரியாமல் நானதன் அடிமையானேன் ! தனக்கான பெருந்தீனியை கொண்டா கொண்டா என நாலாப்புறமும் அது என்னை விரட்டியது ! அதைத் திருப்திப்படுத்துவதே என் வாழ்நாள் இலக்கானது ! சில தனிமைகளில் அது பூதாகரமாக என்னைப் பார்த்துச் சிரிக்கும் ! பயமாக இருக்கும் ! என் நண்பர்கள் அதைக் கொன்றுவிடும்படி சொன்னார்கள் ! ஆகவே, நானதைப் பட்டினி போட ஆரம்பித்தேன் ! பசியால் அது துடித்தது ! சிறுகச்சிறுக அதைக் கொன்று விட்டதாய் நண்பர்களிடம் சொன்னேன் ! ஒருநாள் என் மனதின் பாதாள அறைதிறந்து உள்ளே சென்றேன் ! அங்கே, சாதுவாய் அது அமர்ந்திருந்தது ! அதற்கான உணவை அளித்துவிட்டு " பயப்படாதே நானிருக்கிறேன் " என்றேன். ! அது புன்னகைக்க ......... நானும், அதுவாகிய நானும் கைகுலுக்கிக் கொண்டோம் !