சிறுவயதில் நூல்கட்டி விளையாடியதற்காய் மன்னிப்புக்கேட்க வேண்டும் ! ஊசித்தட்டானே நீ எங்கிருக்கிறாய் ? ============================= ஊரில் பல்லாங்குழிச் சிறுமிகளையும் கில்லித்தட்டு சிறுவர்களையும் காணவில்லை ! திரும்பிப்பார்க்கிறேன் ....... என்னுடனே வந்துகொண்டிருந்த என் பால்யத்தையும் காணவில்லை ! ============================= எங்களூரின் தாவணிக்கனவுகள் எல்லாம் இப்போது சுடிதார்க் கனவுகளாக ! அந்தக்கனவில் வண்ணம் இருந்தது ! இந்தக் கனவில் சாயம் மட்டுமே இருக்கிறது ! ============================= கட்டிப்பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது ! பாலித்தீன் பைகளை மேய்ந்து கொண்டிருந்த எங்களூர் பசுமாட்டை ! ============================= ஒரு நோயுற்ற முதியவளைப் போல குற்றுயிராக சுருண்டு கிடந்தாள் காவிரி ! முடிந்தமட்டும் கண்ணீர் வார்த்துத் திரும்பிவந்தேன் ! ============================= இரட்டை மாட்டுவண்டியில் கோவணங்கட்டிய ஒரேயொரு விவசாயி தென்பட்டான் ! கடவுளையே பார்த்தது போலிருந்தது ! ============================= வீட்டில் இரவு உணவுக்கு இட்டிலி ! ம்ம்ம்.......... அரிசீம்பருப்புச் சோறை அம்மாவே மற