கல்லூரிக் கன்னியும்
வாகனக் கணவனும் !
அன்று ,
அதிகாலையில் எழும்போதே
அவளை நினைத்து
ஆவலாய் எழுந்தேன் !
அவள் ?
காலை வேளையில்
கடந்து போகும்
கல்லூரிக் கன்னி !
குனிந்தே வருபவள்
அருகே வந்ததும்
நிமிர்ந்து பார்த்து
நகர்ந்து போவாள் !
எனக்கு மட்டும்
மழை பொழியும் !
இன்று எப்படியும்
இனிதாய் சிரித்து ,
இளங்கிளியை இன்பமாய்
இம்சித்து விடவேண்டும் !
என்ற தீர்மானத்தில்
இருந்த போதும் ,
இந்தக் கவிதை
அதைப் பற்றி மட்டுமல்ல !
வண்டி சாவியை
வைத்த இடம் தெரியவில்லை !
தொலைந்த சாவியால்
தேகத்தின் தினவும்
தொலைந்து போனது
அன்றைய தினத்தின்
கனவும் கலைந்துபோனது !
வண்டி ,
தேடி வாங்கிய
தவணை வண்டி !
அதனால் தான்
சாவியும்
தவணை முறையில்
தினமும் தொலைகிறது !
ஒருமுறை ,
தொலைந்ததைத் தேடி
தவித்த போது
தொலைக்காட்சிப் பெட்டியின்
தலையில் இருந்ததென
தங்கை வந்து தலையில் குட்டி
திட்டிக் கொடுத்தாள் !
இன்னொரு முறை
படுக்கை விரிப்ப