Skip to main content

Posts

Showing posts from February, 2011
கல்லூரிக் கன்னியும் வாகனக் கணவனும் ! அன்று , அதிகாலையில் எழும்போதே அவளை நினைத்து ஆவலாய் எழுந்தேன் ! அவள் ? காலை வேளையில் கடந்து போகும் கல்லூரிக் கன்னி ! குனிந்தே வருபவள் அருகே வந்ததும் நிமிர்ந்து பார்த்து நகர்ந்து போவாள் ! எனக்கு மட்டும் மழை பொழியும் ! இன்று எப்படியும் இனிதாய் சிரித்து , இளங்கிளியை இன்பமாய் இம்சித்து விடவேண்டும் ! என்ற தீர்மானத்தில் இருந்த போதும் , இந்தக் கவிதை அதைப் பற்றி மட்டுமல்ல ! வண்டி சாவியை வைத்த இடம் தெரியவில்லை ! தொலைந்த சாவியால் தேகத்தின் தினவும் தொலைந்து போனது அன்றைய தினத்தின் கனவும் கலைந்துபோனது ! வண்டி , தேடி வாங்கிய தவணை வண்டி ! அதனால் தான் சாவியும் தவணை முறையில் தினமும் தொலைகிறது ! ஒருமுறை , தொலைந்ததைத் தேடி தவித்த போது தொலைக்காட்சிப் பெட்டியின் தலையில் இருந்ததென தங்கை வந்து தலையில் குட்டி திட்டிக் கொடுத்தாள் ! இன்னொரு முறை படுக்கை விரிப்ப
குறிப்பு : இக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆதலால் காதல் செய்வீர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தேன் ! என்னைத் தவிர அங்கே , இரண்டு சிட்டுக்குருவிகள் இருந்தன ! ஒன்று ஆண் ! இன்னொனொன்று பெண் ! இரண்டும் என்னைப் பார்த்து எதோ பேசிக்கொண்டன ! அநேகமாகத் திட்டியிருக்கலாம் ! " கூடிப்பேசிக் கூடல் செய்வதைக் கெடுக்க வந்த கயவன் ! " - என்றிருக்கலாம் ! நான் சுரணையற்று நின்றிருந்தேன் ! அப்போதுதான் எங்கிருந்தோ அவள் வந்தாள் ! சுற்றுப்புறத்தில் சுகந்தம் வீசியது ! கடைந்தெடுத்த சந்தனத்தின் அம்சம் அவள் ! வடிவான அரபுக்குதிரை வம்சம் அவள் ! செதுக்கிய தேகத்தில் பாகங்கள் பதுக்கப்பட்டிருந்தன ! கச்சிதமான கண் மை ! உறுத்தாத உதட்டுச்சாயம் ! நெகிழ்ந்தாலும் சேலை நேர்த்தியாய் இருந்தது ! இடுப்பு உடுக்கை போலிருந்தாலும் பாங்கான மடிப்பு படுக்கைக்கு அழைத்தது ! கண்ணின் விழி கள் காமத்தின் மொழி பேசின ! உதட்டு