Skip to main content

Posts

Showing posts from June, 2011
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற் காக ....................... சுரேஷ் , உனது பெயரைப் போலவே , சிங்கத்தின் பெயர் கூட ' சு ' வரிசையில் தான் ஆரம்பிக்கிறது ! சுரேஷ் , ' சு ' வரிசையில் உனது பெயர் ஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ சாகசங்களுக்கு சொந்தக்காரன் ! சரித்திரத்தில் இடம்பெறுபவன் ! சிந்தனைகளின் சீர்திருத்தவாதி ! சோதனையிலும் சாதனை செய்பவன் ! சுரேஷ் , நீ நடத்திடு வெற்றியைத் தேடி ஒரு வீர வேட்டை ! நீ எடுத்திடு எதிரிகளை விரட்ட ஒரு வேக சாட்டை ! நீ அமைத்திடு அன்பால் ஒரு உறவுக்கோட்டை ! தொடங்கப்போகிறது இனிதான் உன் ராஜபாட்டை ! சுரேஷ் , நீ , உழைப்புக்கு அஞ்சாத வீரத்தளபதி ! நீ , உரிமை முழக்கமிடும் புரட்சித்தளபதி ! நீ , வயதில் மூத்தோருக்கு செல்லத் தளபதி ! நீ , அழகைப் பொறுத்தவரை இன்னொரு இளையதளபதி ! என் போன்ற நண்பனுக்கு என்றென்றும் நீ அன்புத்தளபதி ! சுரேஷ் , நீ , சுருங்கச்சொல்லி விளங்க வைப்பவன் அல்ல ! எதையுமே விளங்கச்சொல்லி , அறிவை மேலும் துலங்க வைப்பவன் ! சுரேஷ் , ஆண்டுக்கணக்காய் அல்லும் பகல
முகநூல் அழகி முதன் முதலில் முகநூலில் அவள் முகம் பார்த்தேன் ! பால்நிலவொளி பளிங்குக்கல்லில் பட்டுத்தெறித்தது போல பைங்கிளியவள் பட்டொளிவீசிக் கொண்டிருந்தாள் ! " நான் நலம் நீ நலமா ? " என்று நாசுக்கானதொரு நேசவரியை அனுப்பிவைத்து நாட்கணக்காய் நகம்கடித்துக் காத்திருந்தேன் ! நான்கு நாட்கள் கழித்து நான் யார் என்பதை யூகிக்க முடியாமல் " யார் இது ? " என்று ஒரே ஒருவரியை மட்டும் ஒப்புக்கு அனுப்பியிருந்தாள் ! எதிர்பாராத அவள் எதிர்வினை கண்டு மேற்கொண்டு என்ன செய்வதென மேலும் மேலும் யோசிக்கலானேன் ! நான் அனுப்பியது போன்றதொரு அன்புத்தூதை அநேகமாக ஆயிரம் பேராவது அவளுக்கு அனுப்பியிருப்பார்கள் . அவளும் அவைகளை அழகாக மறுத்து மறுத்து வெறுத்துப் போயிருப்பாள் ! நான் அவளுக்கு அந்த ஆயிரத்தோடு ஒருவனாய் ஆவதா ? அல்லது ஆயிரத்தில் ஒருவனாய் ஆவதா ? என்பதை ஆண்டவனால் கூட அனுமானிக்க முடியாது என்று அடிமனதில் ஒரு அவலக்குரல் அடிக்கடி சொல்லித்
குறிப்பு : எனது வருங்கால மனைவியின் பாதங்களில் இந்த சிறுகதையை அர்ப்பணம் செய்கிறேன் பாலைவனச்சோலைகள் - சிறுகதை அங்கம்மாவிற்கு பத்து வயது இருந்த போது எனக்கு ஏழு வயது . அங்கம்மா , பார்க்க கருப்பாக இருந்தாலும் , லட்சணமாக இல்லாமல் இருந்தாலும் அவளுக்கும் எனக்கும் அடிப்படையிலேயே ஒரு ரசாயனம் ( கெமிஸ்ட்ரி ) இருக்கவே செய்தது . என் " அம்மாபாட்டி " ( அம்மாவைப் பெற்ற பாட்டி = அம்மாபாட்டி ) வீட்டில் நான் தங்கிப் படித்த காலங்களில் எனக்கிருந்த ஒரே பெண்தோழி அவள்தான் . நான் படித்த புளூ பேர்ட் கான்வென்டில் ஆயா வேலை பார்த்த குருவம்மாவின் மகள் தான் அங்கம்மா . நானும் அவளும் அதிகமாக விளையாடும் விளையாட்டு , " படத்தின் பேர் கண்டுபிடிக்கும் " விளையாட்டுதான் . அவள் , " முதல் எழுத்து ' பி ' , கடைசி எழுத்து ' லா ' . என்ன படம் கண்டுபிடி ! " என்பாள் . நான் மண்டையைப் பிய்த்துக்கொண்டு , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு , " தெரியல " என்பேன் . சாமானியத்தில் விடை சொல்ல மாட்டாள் . " நான் வேணா க்ளூ தர்றேன் " என்பாள் . நான் அப்பாவியாக " க்ளூ ன்னா என்ன ?
உத்தமக் காதலியே ........... நான் நானாகவும் , நீ நீயாகவும் இருந்து - பிறகு நான் நீயாகவும் நீ நானாகவும் மாறிப்போனதன் மர்மம் உணர்கிறாயா என் மனங்கவர்ந்தவளே ! மௌனத்தின் மொழிகற்றதும் விழிகளால் பேசும் கலை அறிந்ததும் காத்திருப்பின் சுகம் புரிந்ததும் நம் காதலால் தானென்று என்னைபோலவே நீயும் உணர்கிறாயா என் இதயத்திருடியே ! பேசிகொண்டிருந்த எத்தனையோ இரவுகளில் யார் முதலில் தூங்கிப்போனாலும் மறுநாளே மனமார மன்னிப்புக் கேட்பதும் , மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான் மன்னிப்பில்லை என்று பொய்யாகக் கோபிப்பதும் என விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில் வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று விளங்குகிறதா வசந்தம் தந்தவளே ! அலுவலுக்கு நடுவே , அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும் பிறகு , பேச்சிற்கு நடுவே அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் , அதன் பின் பேசிக்கொண்டிருப்பதே அலுவல் ஆனதும் என அன்றாட வழக்கங்கள் அனைத்தும் அப்படியே தலைகீழானதன் சூட்சமம் தெரிகிறதா என் இனிய சூனியக் காரியே !