Skip to main content
எங்கே எனது பழைய விதி






எனக்கு என்னவாயிற்று ?

எல்லாம் மாறிவிட்டதோ ?


காலையில் யாரும்

என்னை எழுப்ப வில்லை .


கசங்கியிருந்த போர்வை

ஒரு குறையாய்த் தோன்றவில்லை !


கேட்காமலேயே அம்மா

காபி கொடுத்தாள் !


சேர்ந்து சாப்பிட

தங்கை அழைத்தாள்


அப்பாவின் பார்வையில்

அதிசயமாய்

அன்பு இருந்தது !


வெளியே வந்தேன் .

என்னை வரவேற்க

வானவில்லின்

வளையம் இருந்தது !


சிறிது நடந்தேன்

பூக்களின்

பாதை தெரிந்தது !


ஒரு சிறுமி வந்தாள்

இனிப்பு கொடுத்தாள்

அவளுக்குப் பிறந்தநாளாம் !

எனக்கும் தானோ ?


சாலையில் நடந்தேன்

குறும்பாய்ப் பார்த்தபடி

கன்னி ஒருத்தி

கடந்து சென்றாள் .


எவர் குழந்தையோ

என்னைப் பார்த்து

வெள்ளையாய்ச் சிரித்தது !


கேட்காமலேயே

காசு கொடுத்தேன்

பிச்சைக்காரன் புன்னகைத்தான் .


வேலைக்காக

விண்ணப்பித்தேன்

அஞ்சல்காரன் ஆசீர்வதித்தான் !


பாழாய்ப்போன

என் பழைய விதியைத்

தேடினேன் .

கடைசி வரை

கிடைக்க வில்லை !


என்ன மாயம் நடந்தது ?


அட ,


நேற்றுத்தான்

அவளிடம்

என் காதலைச் சொல்லி இருந்தேன் .

அவளும்

அழகாய்ச் சிவந்து

சம்மதம் என்றிருந்தாள்.


பாருங்களேன் ,

எனது

இந்தப் புலம்பலும்

ஒரு கவிதையாய் மாறிவிட்ட

அதிசயத்தை !!!









Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர