Skip to main content
அபார்ட்மெண்ட் சிறுவனே ...................




அடே ! சிறுவா !

உன்னைத்தான் !

இங்கே பார் !

கணினி விளையாட்டை
கணநேரம் ஒத்திவை !

கேள் !

விரிந்திருகிறது
வீதி ! 
அதில்,
விளையாடுவது தானே
நீதி ?

கட்டம் கட்டு,
குறுக்கே கோடிடு !
ஆடலாம் சடுகுடு !

கைக்குட்டை எடு ,
கண்ணைக் கட்டு !
ஆடு கண்ணாமூச்சி !

ஓடித்தொடுதல்
ஆடியதுண்டா ?

ஒற்றைக் காலிலும்
ஓடித் தொடலாம் !
அதற்குப் பெயர்தான்
நொண்டி !
ஆரோக்கியக் காசுகள்
சேர்ப்பதில்,
அதுவொரு
அற்புத
உண்டி !

அப்புறம்
இன்னோர் விளையாட்டு !

ஒருகால் மடக்கிக்
குந்து !
தேவையில்லை
பந்து !
குச்சியால் குச்சியை
உந்து !
எம்பியெழுவதை,
' கில்லித்தட்டு '   -  என்றே நீ
சொல்லித்தட்டு !

 நிறம் கூறித்
துரத்தும் ஆட்டம்
பரிச்சையமுண்டா ?

திருடன் போலீஸ்
தெரியுமா ?

நூல் பிடித்தோடி
பட்டம் விட்டதில்லையா ?

உத்திரத்தில்
கயிறு கட்டி
தூரி.............?

என்னடா உனக்கு
எதுவுமே தெரியவில்லை !

மேற்கண்ட
விளையாட்டில்
வலிமையாகும் உன்
தசை !
வெறும்
கணினியைத் தட்டுவதில்
விரலுக்கு மட்டுமே
விசை !

யாருமில்லையா
வீட்டில் ?

ஓ !

இரவுப்பணி முடித்து
இன்னும் உறங்கும்
தந்தை !

அழகுநிலையம்
சென்று விட்ட
அம்மா !

அலைபேசியில்
மூழ்கிவிட்ட
அக்கா !

சிறப்பு !

கிடக்கிறது
கழுதை !
நான் நீக்குகிறேன்
உன் தனிமையெனும்
பழுதை !

வா வெளியே !
பிரபஞ்சம் பார் !
வெளியை உணர் !

இது,
இறைவனின்
தானம் !
இயற்கையின்
கானம் !
முடிவில்லாது .........
விரிந்திருக்கும்
வானம் !

வா ! வா !

அடடே !

என்ன  இது ?

படியிறங்கியதும்
வந்து விட்டதே
சாலை ?
இல்லையா
உன் வீட்டின் முன்
ஒரு
சோலை ?

விளையாட
இல்லை
திடல் !
தொலைவிலுள்ளது
கடல் !
என்னாவது உன்
உடல் ?

நெடியேறிச்
சிவக்கிறது
நாசி !
நுரையீரல்
துளைக்கிறது
தூசி !
உனக்கில்லை,
வீதியில்
விளையாடும்
ஆசி !

அடுக்கு மாடி,
அபார்ட்மெண்ட் சிறுவனே !

விரைந்தோடு
வீட்டுக்குள் !

விட்டதிலிருந்து
விளையாட்டைத் தொடர் !

கணினி காத்திருக்கிறது !!!


Comments

  1. மிகவும் அருமையான ஆக்கம். இன்றைய கணனி கையாளும் சிறுவர்கள் வாழ்க்கையில் இழந்தவை ஏராளம். நன்றாக நயம்பட எடுத்துச்சொல்லி உள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி ஐயா

      Delete
  2. அடுக்கு மாடி குடியிருப்பின் இன்றைய சிறுவர்களின் நிலையை அழகாக படம்பிடித்த கவிதை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வாசிப்புக்கும், கருத்திற்கும் நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...