தடயம் தொடர்ச்சி ....................
ஞாயிற்றுக் கிழமை , காலையில் எழும்போதே அடிவயிற்றில்சுகமான அவஸ்த்தையை உணர்ந்தேன் . சுமலதா மேடத்தால் ஏற்பட்ட அவஸ்த்தை அது .அடிப்படையில் நான் அந்த மாதிரி ஆள் இல்லை . நல்ல பாரம்பரியத்தில்விளைந்தவன் . என் தாத்தாவுக்குத் தாத்தா பெரிய ஜாமீன்தாரராம் . ஒரு ஊரையேகட்டி ஆண்டவராம் . அவரின் , ஜீன் என் உதிரத்திலும் இருப்பதாய் என் ஆயாஅடிக்கடி சொல்லும் . அவரைப் போலவே எனக்கும் வலது கண்ணுக்க்குக் கீழ் ஒருமச்சம் . அவரைப் போலவே வலது தோள்பட்டையில் ஒரு மச்சம் . அவரைப்போலவேமுகசாடை , நடை , பேச்சு , எல்லாம் . நான் வியாழக்கிழமைகளில் அசைவம்சாப்பிட மாட்டேன் . பிற்பாடு என் ஆயா அதை உணர்ந்து கொண்டு , அந்த ஜமீன்தாத்தாவும் வியாழக்கிழமைகளில் அசைவம் சாப்பிட மாட்டாரென்று சொல்லி அழுதது. வாழ்ந்து கெட்ட பரம்பரை எங்களுடையது . மாளிகை போன்ற அரண்மனையில்வாழ்ந்த எங்களின் முன்னோர்கள் , என்ன பாவம் செய்து தொலைத்தார்களோ , இன்றுஅவர்களின் வழி வந்தவர்கள் சாதாரண ஒட்டு வீடுகளில் வாழ்ந்து கொண்டு ,வாரக் கூலி வேலை செய்து கொண்டு , ரேசன் கடைகளிலும் , குழாயடிகளிலும்சண்டை போட்டுக்கொண்டு மிகவும் பாவமான