Skip to main content

Posts

Showing posts from March, 2011
தடயம் தொடர்ச்சி .................... ஞாயிற்றுக் கிழமை , காலையில் எழும்போதே அடிவயிற்றில்சுகமான அவஸ்த்தையை உணர்ந்தேன் . சுமலதா மேடத்தால் ஏற்பட்ட அவஸ்த்தை அது .அடிப்படையில் நான் அந்த மாதிரி ஆள் இல்லை . நல்ல பாரம்பரியத்தில்விளைந்தவன் . என் தாத்தாவுக்குத் தாத்தா பெரிய ஜாமீன்தாரராம் . ஒரு ஊரையேகட்டி ஆண்டவராம் . அவரின் , ஜீன் என் உதிரத்திலும் இருப்பதாய் என் ஆயாஅடிக்கடி சொல்லும் . அவரைப் போலவே எனக்கும் வலது கண்ணுக்க்குக் கீழ் ஒருமச்சம் . அவரைப் போலவே வலது தோள்பட்டையில் ஒரு மச்சம் . அவரைப்போலவேமுகசாடை , நடை , பேச்சு , எல்லாம் . நான் வியாழக்கிழமைகளில் அசைவம்சாப்பிட மாட்டேன் . பிற்பாடு என் ஆயா அதை உணர்ந்து கொண்டு , அந்த ஜமீன்தாத்தாவும் வியாழக்கிழமைகளில் அசைவம் சாப்பிட மாட்டாரென்று சொல்லி அழுதது. வாழ்ந்து கெட்ட பரம்பரை எங்களுடையது . மாளிகை போன்ற அரண்மனையில்வாழ்ந்த எங்களின் முன்னோர்கள் , என்ன பாவம் செய்து தொலைத்தார்களோ , இன்றுஅவர்களின் வழி வந்தவர்கள் சாதாரண ஒட்டு வீடுகளில் வாழ்ந்து கொண்டு ,வாரக் கூலி வேலை செய்து கொண்டு , ரேசன் கடைகளிலும் , குழாயடிகளிலும்சண்டை போட்டுக்கொண்டு மிகவும் பாவமான
கவிதையைப் பற்றிய கவிதை என்ன பார்வை இது ? தோட்டா கூடத் தோற்றுப்போகும் ! உண்மையைச் சொல்கிறேன் வெள்ளையான உன் சிரிப்பில் - உள்ளம் கொள்ளை போய் விட்டது ! உள்ளபடி சொல்கிறேன் உன்னைப் பார்க்கும் வரை நான் கவிஞனில்லை ! கண்ணுக்குள்ளே என்ன கருவட்டக் கருப்பு ? காந்தமா ? அங்கத்தில் தங்கமா ? தங்கத்தில் அங்கமா ? குழப்பத்தை நிவர்த்தி செய் ! உன்னைப் பார்த்த பிறகு என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன் ! ஏனெனில் எனக்கு எப்போதும் கனவில்தான் தேவதைகள் தெரிவார்கள் ! என்னைக் கொல்ல வேண்டுமென்று நீ நினைத்தால் இன்னும் கொஞ்சம் சிரி ! உன்னைப் பார்த்த பிறகு நான் முதலில் காதலைத்தான் காதலித்தேன் ! உனது புகைப்படத்தைத் தான் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன் ஒருமணிநேரம் போனது தெரியவில்லை ! உன்னை உள்ளபடியே புகழ தமிழில் தற்போது வார்த்தைகள் இல்லை தமிழிலிலேயே இல்லையென்றால் இனி தேவபாஷையைத் தான் தேடிக் கற்க வேண்டும் ! இந்த கிரகத்தின் இன்னொரு நிலவா நீ ? இ
குறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் . தடயம் எனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா ? சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் ? எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் ? வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் . என் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை " மதன சுந்தரி " டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ? எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் " ஆயாக்கள் " தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே " கடுப்பு முடியாக " இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதல
தமிழ் அன்னையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதி அன்னை நீ ! விவரம் தெரிந்த பிறகு தாய் பாலினும் மூத்த பால் , முப்பால் என அறிந்தோம் ! அற ப்பசியையும் , அறிவுப்பசியையும் , அதனை அருந்தித்தான் ஆற்றிக்கொண்டோம் ! வீரம் , உன்னிலிருந்து விளைந்ததுதான் ! காதல் கூட - நீ கற்றுத் தந்தது தான ! உன்னைக் காதாறக் கேட்டவர்கள் , செவியாலும் சுவை உணர முடியும் ! செவியாலும் மணம் நுகர முடியும் ! என பேதையைப் போல போதையில் புலம்பிச் செல்கிறார்கள் ! உன்னைப் படித்துக்கொண்டே உண்ணும் உணவுதான் நிலா இல்லாத சமயங்களில் எங்களுக்கான நிலாச்சோறு ! அது , அன்னையால் ஊட்டப்படும் அன்புச்சோறு ! அறிவுச்சோறு ! கற்பனைக் கருவாகி மொழிவழியே உருவாகி உன்னை நீயே படைத்துக் கொள்வதில் இங்கே எண்ணற்ற படைப்பாளிகள் உருவாகி விடுகிறார்கள் ! எங்களின் பிழைப்பே உன்னால் தான நடக்கிறது ! உன்னை விண்டெடுத்து விற்பவர்கள் வாழ்வாங்கு வாழ்கிறார்கள் ! எங்களின் தாகத்தைத் தணிக்கிற
எல்லாம் முடிந்து விட்டது எல்லாம் முடிந்து விட்டது . அப்படித்தான் தோன்றுகிறது ! அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறோம் ! அகதிகளாக வாழ்வதென்பது அனாதைத்தனத்தின் உச்சம் ! அதுதான் எங்களின் ஆண்டாண்டுகால அவலத்திற்குக் கிடைத்த மிச்சம் ! தலைவன் இல்லாவிடினும் தலைமை உயிர்ப்போடு தான் இருக்கிறது! மறுபடியும் ஒரு தலைவன் வரலாம் ! பழையபடியே புரட்சி நடக்கலாம் ! ஆனால் எதற்கு ? எங்களைப் பொறுத்தவரை , தன்மானம் என்பது , தோண்டிப் புதைக்கப்படவேண்டிய ஒன்று ! ஆணவம் , அழிவுக்கு அடிகோலுவது ! சுயமரியாதை , வன்முறையின் தந்தை ! அது , களையப்படவேண்டிய மூட நம்பிக்கையும் கூட ! இப்போது எங்களை எல்லோரும் மறந்து விட்டார்கள் ! எங்களில் சிலர் எங்கேயாவது எப்போதாவது மீண்டும் கொல்லப்ப்டும் வரை நாங்கள் அவர்களுக்கு புளித்துப் போன பழைய செய்திதான் ! இந்த வாழ்க்கை கூட நன்றாகத்தான் இருக்கிறது ! காலையில் சூடான இட்லி , சட்னி , இத்யாதிகள் ............ அதன் பிறகு , வெள்ளை அரிசியில் மணக்கும் மதிய உணவு ! சூரியன் சாய்ந்த இரவில் சப்பாத்தியும் குருமாவும் ! முன்பு , எங்களின் கதைகளை ஊர் படித்தது ! இப்போது , ஊர்கதைகளை நாங்கள் படிக்கிறோம் ! அதைவிட ,
பெண்கள் தெருவில் நடந்து போகையில் - கன்னிகள் கடந்து போக வேண்டும் ! திரையரங்கில் திரும்பிய பக்கமெல்லாம் தேவதைகள் தெரிய வேண்டும் ! பழரசக் கடைகளில் பருகுவதற்கு , பைங்கிளிகள் பக்கத்தில் வேண்டும் ! கோவில்களில் கையெடுத்துக் கும்பிட கடவுள் இருந்தாலும் கண்ணெடுத்துப் பார்க்க குமரிகளும் கூட வேண்டும் ! "வலைக்குள் " நுழைந்தால் வகையான வஞ்சிக்கொடிகள் வசமாகச் சிக்க வேண்டும் ! பக்கத்து வீட்டில் பருவச்சிட்டுக்கள் வலம்வந்தால் போகாத பொழுதும் போகாமல் போகும் ! அவனி முழுக்க அம்சமான திம்சுக்கட்டைகள் பவனி வந்தால் அறுபதிலும் ஆசை நரைக்காது ! முப்பது கடக்காத "மேடம் " ஒருத்தி மேலதிகாரியாக வந்து வாய்த்தால் கடினப் பணியையும் கடிதே முடிக்கலாம் ! பேருந்தில் போகும்போது பக்கத்து இருக்கையில் பதுமை ஒருத்தி பாங்காய் வந்தமர்ந்தால் பழகிய பயணமும் புதுமையாகத் தோன்றும் ! மருத்துவ மனைகளில் மலர்கொடிகள் உலாவந்தால் நோய்க்கட்டிலில் சேயைப்போல துள்ளிக் குதிக்கலாம் ! உற்ற தோழிகள் உடனிருந்தால் வாலிபத்தின் பாலையில் சோலைகள் தென்படும் ! கண்ணீர்த்துளிகளை ஏந்திக்கொள்ள காதலியின்
சொல்லி விடு அன்பே ஒரே ஒரு முறை சொல்லி விடு ! என் மீதான உனது காதலை ஒரே ஒரு முறை சொல்லிவிடு ! நானாக எனது காதலை உன்னிடம் சொன்னபோது கூட - நீ மௌனமாகத்தான் கேட்டுக்கொண்டாய் அதை நான் சம்மதமாக எடுத்துக்கொண்டேன் ! உனக்கான காலை வணக்கத்தை குறுஞ்செய்தியில் வருவிக்கிறேன் ! மதிய வணக்கத்தை மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் ! இரவு வணக்கத்தை அலை பேசியில் அறிவிக்கிறேன் ! ஆனால் , சில நேரங்களில் நீ சிரிப்பதே இல்லை ! அலை பேசியில் கூட அளந்து தான் பேசுகிறாய் ! பெரும்பாலும் நானே பேசுகிறேன் நீ கேட்டுக்கொண்டு இருக்கிறாய் ! எனது பிறந்த நாளன்று தான் உனது புன்னகையே பார்க்கக் கிடைத்தது ! நாணம் மறந்திருப்பாயென நானாகத் தொட்டாலும் தீயாக சுட்டதென நீயாக விலகிக் கொள்கிறாய் - காதல் நோயாகக் கசக்கிறது ! கோவிலில் கூட கடவுளோடுதான் பேசுகிறேன் ! கடற்கரைகளில் காற்று தான் வாங்க முடிகிறது ! திரையரங்குகளில் திரையைத்தான் பார்க்கிறோம் ! வண்டியில் அமர்ந்தால
வந்தாலும் வரலாம் வெளியே வெயிலின் தலைவன் உச்சியில் இருந்தான் ! வெக்கையில் வெந்த தேகம் சடுதியில் சக்கையானது ! எவனைப்பார்த்தாலும் எரிச்சலாய் இருந்தது ! சென்றவிடமெல்லாம் சாக்கடை மணத்தது ! யாவருக்கும் முன்மண்டையில் உற்பத்தியாகிப் பொழிந்தது வியர்வையின் அருவி ! ஆசைகள் ஆயுளை நீட்டின ! மருந்துகள் மரணத்தை ஒத்திப்போட்டன ! விளைவாய் , கும்பல் கும்பலாய் கூட்டம் கூடிக் கும்மியடித்தது ! விலகாமலேயே விலக்கப்பட்டார்கள் ! நெருங்காமலேயே நெருக்கப்பட்டார்கள் ! நடக்காமலேயே நகர்த்தப்பட்டார்கள் ! சிந்தையில்லா மனிதர்கள் மந்தையைப்போல மிரண்டு ஓடினர் ! பேருந்தில் பெருங்கூட்டம் ! உணவகத்தில் உலகக்கூட்டம் ! கடைகளில் கணக்கில்லாத கூட்டம் ! திரையரங்குகளில் திருவிழாக்கூட்டம் ! வண்டிக்காரன் ஒருவன் முண்டியடித்து சண்டித்தனம் செய்தான் சீருடைக் காவலன் ஒருவன் - அவனை தண்டிப்பேன் என கண்டித்தான் ! போக்குவரத்தின் நெரிசலில் வரிசை