Skip to main content

Posts

Showing posts from 2012
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது
பிரம்மச்சாரி 4 வாழ்க்கையில் ஒரு பெண்ணிடமும் பேசியதில்லை ! பிச்சைக்காரியைக் கூட கோபப்பட்டு ஏசியதில்லை ! எந்தப் பெண்ணுக்கும் மோகனப் புன்னகை வீசியதில்லை ! நாணிக் கோணி எவளும் எங்கள்முன் கூசியதில்லை ! கடைக் கண்ணால் கூட கன்னிகள் எங்களைப் பார்ப்பதில்லை ! காலைப் பிடித்துக் கெஞ்சினாலும் காதலை யாரும் ஏற்பதில்லை ! அனுதினமும் எதிர்பார்க்கிறோம்   வீட்டிலிருந்து ஓர் நறுஞ்செய்தியை ! அனாமதேய எண்ணுக்கெல்லாம் அனுப்பிப் பார்க்கிறோம் அர்த்த ராத்திரியில் குறுஞ்செய்தியை ! ஆனாலும் போராட்டம் முடியவில்லை ! ஒரு பொழுது எங்களுக்கு விடியவில்லை ! அந்தஸ்து எனும் சிவதனுஷை எங்களில் யாரும் உடைக்கவில்லை ! எங்களுக்கென்று ஒருத்திகளை பிரம்மன் இன்னும்  படைக்கவில்லை ! எதிர்படும் பெண்ணிடமெல்லாம் பிசியாகவே இருக்கிறது அலைபேசி ! திருமணச்சந்தையில் எகிறிவிட்டது மணமகள்களின் விலைவாசி ! பட்டம் விடக்கூட உதவுவதில்லை படித்து வாங்கிய பட்டம் ! பட்டம் படித்தவனுக்கு பெண் கிடைக்காதென்பது இங்கு எழுதப்படாத சட்டம் ! பாதகமாகத்தான் இருக்கிறது ஜாதகத்தின் கட்டம் ! பார்த்துப் பார்த்து போரடித்து விட்டது வீட்டிலிருக்கும் விட்டம் ! அந்தஸ்த
பிச்சைக்காரர்கள்  பலரிடமும் கெஞ்சிக் கேட்டு ஒரு பத்துரூபாய் தேற்றிவிட்டுப் போய் அமர்ந்த அந்தப் பிச்சைக்காரனிடம் தெரிகிறது ஒரு அரசனின் கம்பீரம் ! ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதைக் கண்ணில் ஒற்றி வாங்கிக் கொள்கிறவனே உண்மையான பிச்சைக்காரன் ! கால்கள் இழந்த அந்தப் பிச்சைக்காரனுக்கு தற்காலிகமாக சிறகுகள் தர நினைக்கிறீர்களா ? ஒரு ஐந்துரூபாய் கொடுங்களேன் ! அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அந்தச் சிறுமி தினமும் வருபவர்களிடம் பிச்சை கேட்பதில்லை ! பிச்சை தர்மம் ! அந்த திரையரங்கு வாசலில் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த பிச்சைக்காரக் கிழவியை வெகு நாட்களாகக் காணவில்லை ! ச்சே ! பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம் ! எவ்வளவு பாவமாகத் தெரிந்தாலும் சாப்பிடும் போது தந்திரமாக வந்து பிச்சை கேட்பவன்மீது கோபம் வரத்தான் வருகிறது ! பிச்சைக்காரன் வரும் போது சில்லறை இருப்பதில்லை ! சில்லறை இருக்கும்போது பிச்சைக்காரன் வருவதில்லை ! இங்கு பெரும்பாலான பிச்சை போடுதல்கள் இரக்கப்பட்டு நிகழ்வதில்லை ! தொல்லை விட்டால் போதும் என்றே நிகழ்கின்றன ! ஒருவகையி
  குறிப்பு : இந்தக் கவிதை இந்தக் கால இளைஞர்களுக்கானது அல்ல கல்லூரித்தோழி  திருமணம் அறிவித்த நண்பனிடம் எதேச்சையாகத்தான் அந்த அலைபேசி எண் கிடைத்தது ! திருமணம் ஆகிவிட்டதாம் அவளுக்கு ! அழைக்கக் கூட இல்லை ! அவளைச் சொல்லியும் குற்றமில்லை ! அலைபேசி அவ்வளவாக அறிமுகம் ஆகாத காலத்தில் கல்லூரி பயின்றவர்கள் நாங்கள் ! தேடித்தேடித்தான் தொடர்புகளை புதுப்பிக்க வேண்டியதிருக்கிறது ! கன்னமெல்லாம் சதைபோட்டு கண்ணாடி போட்ட குண்டான பெண்ணாக அவளை நினைத்துப் பார்த்தேன் ! சிரிப்பு வந்தது ! இழந்து விட்ட பிள்ளைப்பருவ மகிழ்ச்சிகளை  நாங்கள் மீட்டெடுத்த அந்தத் தருணங்கள் எவ்வளவு உன்னதமானவை ! ஆண் பெண் பேதமின்றி நாங்கள் அடித்து விளையாடிக் கொண்ட  அந்த நாட்கள் எவ்வளவு அழகானவை ! ஒவ்வொரு தோழியிலும் ஒரு சகோதரியைக் கண்ட புனிதமான காலமல்லவா அது ! இப்படி ஒருநாள் தொடர்பற்றுத் தொலைந்து போவோம் என்றுதான் அந்தக் கடைசிநாளில் அவள் அதிகம் அழுதாளோ ? அவள் மதிய உணவைப் பிடுங்கித் தின்னும் அந்த பாக்கியம் இனிமேலும் கிட்டுமா ? அழைத்து விட்டு எதிர்முன
வேலை அன்றொருநாள் காலங்காலையில் வெயில் கொஞ்சம் எடுப்பாயிருந்தது  ! எழுவதை நினைத்தாலே மண்டைக்குள் சற்று கடுப்பாயிருந்தது ! ஞாயிறு என்பதால் அன்று அலுவலுக்கு விடுப்பாயிருந்தது  ! மனமெல்லாம்  புதிய கதாநாயகியின் இடுப்பாயிருந்தது ! திடுப்பென்று ஏதோ பாடலை அலைபேசி உளறியது ! வஞ்சகமில்லாமல் வயிற்றெரிச்சலைக் கிளறியது ! இந்த நேரத்தில் எந்த மூதேவி கூப்பிடுகிறான் ?  விடுமுறைப் பொழுதை  - ஏன் இப்படி விவஸ்த்தையில்லாமல் சாப்பிடுகிறான் ? எடுத்தால் எதிர்முனையில் மேலதிகாரி ! இந்தாள் எதற்கு இப்போது அழைக்கிறான் ? விடுமுறை நாளிலும் இவன் ஏன் இப்படி உழைக்கிறான் ? " ஐயா "   என்றேன் வேண்டா வெறுப்பாய் அவனை வணங்கி ! " சொல்லுங்கள் " என்றேன் வேலையை நினைத்து மனதிற்குள் சுணங்கி ! பழுதாகி விட்டதாம் ஆலையில் ஒரு கருவி ! கேட்டதும் சிறகொடிந்தது என் உற்சாகம் எனும் குருவி ! இப்போதே போய்ப் பார்க்க வேண்டுமாம் அந்தப் பழுதை ! அலைபேசியில் ஆணையிட்டது அந்தக் கழுதை ! உடனடியாக ரத்து செய்தேன் அந்நாளின் நிகழ்ச்சிகளை ! புதைத்துக் கொண்டேன் வார
  பயணம் இந்த தீபாவளிக்கு ஊருக்குப் போகத்தான் வேண்டுமா ? மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டன புகைவண்டி முன் பதிவுகள் ! சென்ற வாரத்தின் ஒரு நாளில் ஒரே மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்தனவாம் பேருந்துகளின் அனைத்து இருக்கைகளும் ! ஒற்றைக் காலில் நின்று கொண்டே எட்டு  மணிநேரப் பயணம்தான் இனி சாத்தியம் ! அப்படிப் போய்த்தான் என்ன ஆகப் போகிறது ? மூன்று நாள் விடுமுறையில் பயணக்களைப்பிற்கு முதல் நாள் ! பயணத் தயாரிப்பிற்கு மூன்றாம் நாள் ! நடுவேயுள்ள இரண்டாம் நாளில்தான் தொலைக்காட்சி பார்த்தலும், பலகாரம் ருசித்தலும்  ! பலகாரம்தான் பண்டிகை என்றால் இருக்கவே இருக்கிறது இங்கே அர்ச்சனா பேக்கிரி ! கொஞ்சம் மளிகைப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்தால் உணவு விடுதிகளின் ஒருவார விடுமுறையை ஓரளவு சமாளிக்கலாம் ! கேஸ் தீராமல் இருக்க வேண்டும் ! அறை காலியாகத்தான் இருக்கும் ! பீட்டரிடம் கேட்டால் பலான சிடிக்கள் தருவான் ! ஏகபோகமாக ஏகாந்தத்தை அனுபவிக்கலாம் ! நான் ஒருவன்
படைப்பு ச்சை ! சத்தியமாய் அது ஒரு படமில்லை ! அந்த நடிகனுக்கு இனி என் மனதில் இடமில்லை ! வெடித்தே விட்டது தலை ! வெறுத்தே விட்டது கலை ! அந்த இயக்குநனுக்கு சுத்தமாய் இல்லை டேஸ்ட் ! மொத்தமாய் மூன்று மணிநேரம் வேஸ்ட் ! இடைவேளை வருவதற்குள் முடிந்து விட்டன இரண்டு மூன்று யுகங்கள் ! கடித்துத் துப்பியே காணாமல் போயின கைவிரலின் நகங்கள் ! ஆறுதல் தரவில்லை பாட்டு கூட ! அதை விட இனிமையாய் ஒலிக்கும் தீபாவளி வேட்டு கூட ! படம் பார்த்தே பலருக்கு வந்தது காய்ச்சல் ! படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு அனைவரும் ஒரே பாய்ச்சல் ! சத்தியமாய் அது இல்லை சினிமா ! சொல்லப்போனால் அது மூன்று மணிநேர எனிமா ! போய் விட்டது முன்னூறு ரூபாய் தண்டமாக ! அரங்கை விட்டு வெளியே வந்தோம் கழுத்தறுந்து முண்டமாக ! தன் பங்கை நண்பன் நிச்சயமாக தருவானா ? இனி நான் படத்திற்குக் கூப்பிட்டால் வருவானா ? இணையத்தில் கண்டபடி கிழித்திருந்தார்கள் ! மொத்த மதிப்பெண்ணில் எண்பது விழுக்காட்டைக் கழித்திருந்தார்கள் ! முன்னரே விமர்சனத்தை வாசித்திருக்கலாம் ! போவதற்கு முன் க
இரயில் பயணம் அந்தப் புகைவண்டியின் உள்ளே கூட்டமிருந்தது ! ஒவ்வொருவனிடத்தும் ஏதோவொரு வாட்டமிருந்தது ! ஓரமாய் ஓரிடத்தில் இளைஞர்களின் ஆட்டமிருந்தது ! பெண்களைத் தேடுவதிலேயே எனது நாட்டமிருந்தது ! எவளாவது சிக்குவாளா ? கண்வழியே காமத்தைக் கக்குவாளா ? முதலில் சீட்டு ! பிறகுதான் மன்மதனின் பாட்டு ! கழுவி வைத்த பாத்திரத்தில் பருக்கையைத் தேடுவது போல நான் எனக்கான இருக்கையைத் தேடினேன் ! அதிர்ந்தேன் ! அடுக்கி வைத்த ஆசைகளோடு அப்படியே உதிர்ந்தேன் ! உழைத்து உழைத்து ஓடாய்ப் போன உழவன் போல ஒரு கிழவன் ! நெறி பிறழாத சத்தியன் போல ஒரு மத்தியன் ! கணவனின் வசவுகளையெல்லாம் வெகுமதியாகக் கருதும் ஒரு திருமதி ! தலை நரைத்த சீமாட்டியாய் ஒரு மூதாட்டி ! சீருடையணிந்த ராணுவன் போல ஒரு மாணவன் ! சம்பாதிப்பிலேயே சிந்தை செலுத்தும் ஒரு தந்தை ! அப்புறம் ஒரு பாப்பா ! அடங்கொன்னியா ! இளசான ஒரு பெண்ணைப் பார்த்து அவளது எண்ணை வாங்கலாம் என்ற நினைப்பில் மண்ணைப் போட்டானே மகாதேவன் ! மூன்று மணிநேரமு
ரயில் சினேகிதி  சட்டென்று எனக்குள் சகலமும் வெளிச்சமாகி விடுகின்றன, எதற்கோ புன்னகைத்தபடி எதிரே வந்தமர்ந்த அவளைப் பார்த்ததும் ! கோழிக்குஞ்சை உள்ளங்கையில் பொத்திக் கொண்டால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது என் காதுகளுக்கு யாருடனோ பேசியபடி அவள் சிரிப்பது ! வேடிக்கை பார்த்தபடி பூ விரல்களால் அவள் கழுத்தை அவளே வருடிக் கொள்கிறாள் ! இங்கே எனக்கு சொக்குகிறது ! எப்படியும் நிமிர்ந்து என்னைப் பார்த்து விடுவாள் என்ற நம்பிக்கையில் தான் எழுந்து போய் காசு போடுகிறேன் அந்த குருட்டுப் பிச்சைக்காரனுக்கு ! இளஞ்சிவப்பு நெயில் பாசிஷ் தடவிய அவள் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கறேன், சட்டென்று கதை பேச ஆரம்பிக்கின்றன அந்தப் பாதங்கள் என்னோடு ! நீர் குடிப்பதற்காக அந்த வாட்டர் பாட்டிலின் மூடியை மென்மையாக மிக மென்மையாக அவள் திருகுகிறாள், தேவராகம் கேட்டது போல இன்பமாக அதிர்கிறது என் பின்னங்கழுத்து ! பற்ற வைத்த அணுகுண்டு எப்போது வெடிக்குமென பதைப்போடு பார்ப்பது போலப் பார்க்கிறேன் உறக்கத்தில் இமை மூடிய அவள் விழிகளை ! அவளை விட அழகான ஒருத்தி
பிரிந்த காதலி   அவளை அந்தப் பேருந்தில் பார்ப்பேனென்று நான் நினைக்கவில்லை ! அவள் அப்படியே தானிருந்தாள் ! காதோரத்தில் அதே சுருண்ட முடி ! தலைகுளித்த அதே ஒற்றைப் பின்னல் ! சூடப்பட்ட அதே ஒற்றை ரோஜா ! அந்த பச்சை நிற சுடிதாரை எனக்குப் பரிச்சையமிருக்கிறது ! மெட்டியில்லா அவள் பாதங்களைக் கண்டு நான் ஏன் ஆறுதல் அடைகிறேன் ? மனதுக்குள் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது ! வருஷங்கள் கடந்தும் என்னைச் சுற்றி மீண்டும் ஒரு வசந்தம் குட்டியாய் ! அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை ! திறந்திருந்த ஜன்னலில் வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள் ! இப்போதெல்லாம் அவள் இசை கேட்பதில்லை போலும் ! இறுதியாக நிகழ்ந்த அந்த கடைசிச்சந்திப்பு ஆயுளுக்கும் மறக்காது ! என்னருகே ஒட்டிநின்ற அந்த பருவப்பெண்ணை உரசாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகி நின்றேன் ! ஏதோ எங்கள் பழைய காதலுக்கு நான் செலுத்தும் என்னால் இயன்ற மரியாதை ! சுற்றிலுமிருந்த ஆண்களிடமிருந்து தன் காதலியை அடைகாத்துக் கொண்டிருந்தான் ஒரு காதலன் ! சட்டென்று அவனுக்காக என் கண்கள் ஈரமாயின
வேதாளம் அது ஒரு விரும்பத்தகாத விபத்து ! விளையாடிவிட்டது விதி வாழ்வில் உரத்து ! வற்றி விட்டது உடம்பில் சுரத்து ! குறைந்து விட்டது குருதியின் வரத்து ! உடைந்து விட்டது எலும்பு ! அடங்கி விட்டது அலும்பு ! ஒரு எட்டு கூட நடக்க முடியவில்லை ! துணையின்றி இம்மியளவும் கடக்க முடியவில்லை ! பாழும் உடம்பை மூலையில் போய் முடக்க முடியவில்லை ! அழுகை வந்தால் அணு அளவும் அடக்க முடியவில்லை ! உணவு பிடிக்கவில்லை ! காதலி கசந்து விட்டாள் ! தொலைகாட்சி திகட்டிப் போனது ! அலைபேசி அநாதையானது ! அன்று ......... நடந்து என்ன ? பலநாட்களாக பின் தொடரப்பட்டவள் புன்னகைத்து விட்டாளென்று பார்ட்டி வைத்திருந்தான் பாழாய்ப் போன நண்பன் ! விருந்தை மருந்து போல அருந்தலாமென்றுதான் போயிருந்தேன் ! போதையில் கண்ணும் தெரியவில்லை ! மயக்கத்தில்  ஒரு மண்ணும் தெரியவில்லை ! அளவுக்கு மீறி விட்டது ! ஒட்டு மொத்தமாய் ஏறி விட்டது ! வாகனத்தை அணுகிய போது குறைவாய்க் குடித்தவன் உதவ வந்தான் ! அவனிடம், " போடா பேமானி யாரையும் நான் அண்டியில்லை ! நான் ஒட்டாவிட்டால் இது என் வண்டியில்லை ! " என்று, நானே எடுத்தேன் ! எடுத்தவுடன் வேகத்தைத் தொடுத்தேன்
தோற்றுப் போனவன் அவன் அறியப்பட்டான் உரிமை இழந்த குடிமை என்று ! உற்றுப் பார்த்தால் தெரியும் உண்மையில் அவன் அடிமை என்று ! அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு அகதி ! அண்டை நாட்டு நட்புக் கொடியில் தெறித்து விட்ட சகதி ! ஆம், அவன் வேற்று நாட்டு மண்ணில் நேற்று நடந்த போரில் தோற்றுப் போனவன் ! அவன் தாய்மொழி கூட தமிழ் தான் ! அவன் வாழ்வு நிலையில்லா நீர்க்குமிழ் தான் ! அவன் தாய் தந்தையர் இறந்து விட்டனர் போரில் ! உறவென்று யாருமில்லை அவனுக்குப் பாரில் ! அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது சென்னை ! அந்த வகையில் அதுதான் அவனது அன்னை ! அது, நண்பனொருவனின் தூரத்து உறவு ! அதுவும் மறுக்கப் பட்டிருந்தால் அடுத்து அவன் இலக்கு துறவு ! அவனுக்கென மாடியில் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு அறை ! தனிமையை உணர்த்துவதில் அது கூட ஒரு சிறை ! அவனுக்கு மூன்று வேளையும் தவறாது உணவு வரும் ! உண்டுவிட்டுப் படுத்தால் உறக்கத்தை முந்திக்கொண்டு கனவு வரும் ! அந்தக் கனவுகளில் முழுக்க முழுக்க சத்தம் தான் ! ரத்தம் தான் ! யுத்தம் தான் ! ஆனால் அனைத்தும் நாளடைவில் குற
பிரம்மச்சாரி - 3 மனமெல்லாம் ஒரே குஷ்டமாயிருக்கிறது ! எவளைப் பார்த்தலும் மனதுக்கு இஷ்டமாயிருக்கிறது ! வாழ்வென்பதே பெரும் கஷ்டமாயிருக்கிறது ! நாங்கள், நொந்து நொந்தே எழுகிறோம் காலையில் ! கூலிக்கு மாரடிக்கிறோம் ஆலையில் ! தனியாகத்தான் நடக்கிறோம் வெறிச்சோடிய சாலையில் ! அரிதாக சில பெண்கள் எங்கள் பாதையில் நடக்கிறார்கள் ! ஒரு தெருவிளக்கைப் போலெண்ணி வெறுமனே எங்களைக் கடக்கிறார்கள் ! அவ்வளவுதான் ! இப்படியே எவ்வளவு நாள்தான் ஏங்குவது ? எத்தனை முறைதான் கனவிலேயே காதலை வாங்குவது ? அநாதையாய்க் கிடக்கிறது அலைபேசி ! விற்றுவிடத்தான் வேண்டும் அதனை விலை பேசி ! பொறியாளன் மருத்துவன் மென்பொருள் வல்லுனன் இவர்களுக்குத்தான் இப்போது வீசுகிறது அலை ! ஒவ்வொருவனும் சந்தையில் நல்ல விலை ! நட்டாற்றில் தவிக்கிறது எங்களைப் போன்ற நடுத்தரனின் நிலை ! பட்டம் படித்தவனுக்கு திருமணம் கூடாதென்று சட்டம் வந்தாலும் கட்டம் சரியில்லையென்று விட்டம் பார்த்தே வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியது தான் ! வேறு என்ன செய்ய ?
  சுஜி வந்திருக்கிறாள் ( சிறுகதை ) சுஜித்ரா , முன்னைக்கு இப்போது கொஞ்சம் பொலிவோடு இருந்தாள் . தோலில் மினுமினுப்பு ஏறியிருந்தது . ஆரம்பத்தில் அவள் மாநிறமாய் இருந்தவள் என்பதே மறந்து போய் , அவள் இயல்பான நிறமே சிவப்பு தான் என்பது போல இப்போது ஆகிவிட்டிருந்தாள் . எல்லாம் கர்ணாவைக் கைபிடித்த பிறகு வந்த தேஜஸ் . திக்குத் தெரியாத காட்டில் , கரடுமுரடு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவளை , சட்டென்று யாரோ கைப்பிடித்து இழுத்து வந்து சொர்க்கத்தில் போட்டது போல இருந்தது . கர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட போது , சுஜித்ராவுக்கு வயது இருபத்தி ஐந்து . சுஜி , தன் மூக்குக்கண்ணாடியை நன்றாகப் பொருத்திக் கொண்டாள் . இப்போதெல்லாம் இது இல்லாமல் நன்றாகக் கண் தெரிவதில்லை . வயது நாற்பதை நெருங்குகிறதல்லவா ! ஆனாலும் , அவளைக் கடக்கும் ஆண்கள் ஒருகணம் அவளை உற்றுப் பார்த்துவிட்டே கடப்பதில் அவளுக்கு உள்ளூரப் பெருமிதம் தான் . பெருமிதமில்லை என்று உண்மையைப் பூசி மெழுகுவானேன் ? கர்ணாவுக்கு இதுபோன்ற அபத்தங்கள் பிடிப்பதில்லை . அவன் அவளை மிக மி