Skip to main content

Posts

Showing posts from August, 2014
ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க  வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்னிரவு
மழைக் கலைஞன் பரபரப்புக்கு மட்டுமே  பஞ்சமே வராத  அந்தப் பெருநகரத்துச்  சாலையில்  வான் பூக்களென  பெய்து கொண்டிருந்தது  மழை !  சாலையோரத்தில்  அவன்  சுருண்டு கிடந்தான்  தன்  ஒற்றைக் கையை  மழையில்  ஏந்தியபடி !  ஒரு  நவீன மழை ஓவியம்  போன்றுதான்  அந்தக்காட்சி  முதலில்  மண்டைக்குள் பதிந்தது !  கொஞ்சமிருந்த  சில்லறைகளில்  துன்பச்சங்கீதம்  இசைத்துக் கொண்டிருந்த  அந்த  ஒற்றைக் கையும்  மழைக்குளிரில்  நடுங்கிக்கொண்டிருந்த  ' என்புதோல் போர்த்த '  அந்த உடம்பும்  அவனொரு  ரத்தமும் சதையுமான  இல்லையில்லை ............  ரத்தமும் எலும்புமான  ஒரு உயிர் என்பதை  புத்தியில் அறைந்தன !  பரிதாபப்பார்வையும்  மிரட்சி நடையுமாகப்  பெண்கள் அவனைக்  கடந்து போயினர் !  குடைபிடித்து  வந்த ஒருவன்  அந்த  ஒற்றைக் கைக்கு  காசு போட்டுப்போனான்  ஏற்கனவே  அந்தக் கை  இசைத்துக் கொண்டிருந்த  துன்ப சங்கீதத்திற்கு  மேலும்  சுருதி சேர்ப்பது போல !  மழைக் கலைஞன்  போலக் கிடந்த  அவனை  திகைப்போடு பார்த்து  குரைத்துவிட்டு ஓடியது  தெருநாய் !  மனசாட்சியை  சமாதானப்படுத்துவதற்காகவே  அவனைத்  திரும்பித் தி