ஒரு கரண்டி அன்பு எழுதி முடித்ததில் செத்துப் போனது ஒரு கவிதை ! ========================= பூட்டிய கதவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கும் கத்திக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும் கொண்டாடித் தீர்க்கின்றன ஒரு மறதியை ! =========================== எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் முடிவுகளையே நாம் எடுத்து விடுகிறோம் என்றாவது ! =========================== இந்திரியத்தின் கடைசித் துளி வெளியேறுகிறது ! ஞானத்தின் முதல் துளி உள் நுழைகிறது ! =========================== வேலை என்பது கடல் ! வாழ்க்கை என்பது தீவு ! இங்கேயும் தீவு, கடலில் தான் இருக்கிறது ! =========================== நம்முடைய இறுக்கமெல்லாம் ஒரு கண்ணாடியைப் போலத்தான் ! அன்பின் சிறுகல் பட்டாலும் அது உடைந்து விடும் ! =========================== அலைபேசிக்குள் ஆயிரம் ரகசியம் புதைத்திருக்கும் பெண்ணே ........ நீயல்ல பாரதி கண்ட புதுமைப் பெண் ! =========================== இறைச்சியை மட்டும் ஒதுக்கி விட்டு மேலாக்க எடுத்துப் போடும் குஸ்காவுக்கு அசைவ தோஷமில்லையாம் ! பின்னிரவு