காமத்தின் கடைசி எல்லை
அந்த வருடத்தை ,
அந்த மாதத்தை ,
அந்த நாளை ,
அந்த நிமிடத்தை ,
அந்த வினாடியை ,
அந்த கணநேரத்தை ,
மறக்கவா முடியும் ?
கல்லூரி வாழ்வின்
கடைசி நாள் .
நம்
மூன்று வருடக் காதலுக்கு
முடிசூட்டு விழா
அன்று தான் நடந்தது !
விளக்கில்லாத
வகுப்பறையில்
வசமிழந்த வசதியில்
நாம் மட்டும்
தனித்திருந்தோம் !
வெளியே பெய்த மழை
நமக்குள்ளும் !
நம் கண்களைத்
தழுவ விட்டதில்
தவழ்ந்து வந்தது
காமக் குழந்தை !
மழை பெய்தாலும்
அறையினுள்
அதிசய நிசப்தம் .
நமக்குள்ளே
விரகத்தின் சத்தம !
நாம்
கைகளால்
முடிச்சுப் போட்டதில்
கற்பு கட்டவிழ்ந்தது !
உன் பெருமூச்சை
என் கழுத்தில்
பாய்ச்சினாய் !
ஓராயிரம் எரிமலையை
ஒரு சேர உணர்ந்தேன் !
உன் கண்களுள்
நுழைந்து
உனதுள்ளம் தொட்டேன்
நீயும் பதிலுக்குத் தொட்டாய் !
அது ,
ஒருவழிப்பாதை போலும் ,
வெளியேற வழியின்றி
தவித்துக்கிடந்தோம்
இருவரும் !
நாம்
ஒன்றிக்கலந்ததில்
நம்மிடையே
காற்றுக்கும் கட்டுப்பாடு !
நாம்
இணைந்து இழைந்ததில்
நம்முடைய
நாணங்களின் தட்டுப்பாடு !
நீ
போதும் என்றாய்
நான்
போதாது என்றேன்
நான்
வேண்டும் என்றேன்
நீ
வேண்டாம் என்றாய் !
விலகி விலகியே
விட்டுக்கொடுத்தாய் !
உயிர் மாற்று
அறுவை சிகிச்சையை
நாம் உதடுகளால்
நிகழ்த்தினோம் !
மன்மதப்பாதையில்
முத்தங்களால் பயணித்தோம் !
காமத்தின்
கடைசி எல்லையில்
காதலைக் கண்டோம்
மீண்டு வந்தோம் !
மழை
முடிந்த பொது
எல்லாம்
வடிந்தது !
விலகி அமர்ந்தோம் !
ஒருவரின்
உயிரை
ஒருவர்
உணர்ந்தபடி
பார்த்துக்கொண்டே இருந்தோம்
நாம்
பார்த்துக்கொண்டே இருந்தோம் !
Comments
Post a Comment