Skip to main content
காமத்தின் கடைசி எல்லை



அந்த வருடத்தை ,

அந்த மாதத்தை ,

அந்த நாளை ,

அந்த நிமிடத்தை ,

அந்த வினாடியை ,

அந்த கணநேரத்தை ,

மறக்கவா முடியும் ?


கல்லூரி வாழ்வின்

கடைசி நாள் .

நம்

மூன்று வருடக் காதலுக்கு

முடிசூட்டு விழா

அன்று தான் நடந்தது !


விளக்கில்லாத

வகுப்பறையில்

வசமிழந்த வசதியில்

நாம் மட்டும்

தனித்திருந்தோம் !


வெளியே பெய்த மழை

நமக்குள்ளும் !


நம் கண்களைத்

தழுவ விட்டதில்

தவழ்ந்து வந்தது

காமக் குழந்தை !


மழை பெய்தாலும்

அறையினுள்

அதிசய நிசப்தம் .

நமக்குள்ளே

விரகத்தின் சத்த !


நாம்

கைகளால்

முடிச்சுப் போட்டதில்

கற்பு கட்டவிழ்ந்தது !


உன் பெருமூச்சை

என் கழுத்தில்

பாய்ச்சினாய் !

ஓராயிரம் எரிமலையை

ஒரு சேர உணர்ந்தேன் !


உன் கண்களுள்

நுழைந்து

உனதுள்ளம் தொட்டேன்

நீயும் பதிலுக்குத் தொட்டாய் !


அது ,

ஒருவழிப்பாதை போலும் ,

வெளியேற வழியின்றி

தவித்துக்கிடந்தோம்

இருவரும் !


நாம்

ஒன்றிக்கலந்ததில்

நம்மிடையே

காற்றுக்கும் கட்டுப்பாடு !


நாம்

இணைந்து இழைந்ததில்

நம்முடைய

நாணங்களின் தட்டுப்பாடு !


நீ

போதும் என்றாய்

நான்

போதாது என்றேன்


நான்

வேண்டும் என்றேன்

நீ

வேண்டாம் என்றாய் !


விலகி விலகியே

விட்டுக்கொடுத்தாய் !


உயிர் மாற்று

அறுவை சிகிச்சையை

நாம் உதடுகளால்

நிகழ்த்தினோம் !


மன்மதப்பாதையில்

முத்தங்களால் பயணித்தோம் !


காமத்தின்

கடைசி எல்லையில்

காதலைக் கண்டோம்

மீண்டு வந்தோம் !


மழை

முடிந்த பொது

எல்லாம்

வடிந்தது !


விலகி அமர்ந்தோம் !


ஒருவரின்

உயிரை

ஒருவர்

உணர்ந்தபடி

பார்த்துக்கொண்டே இருந்தோம்

நாம்

பார்த்துக்கொண்டே இருந்தோம் !










Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...