Skip to main content
காமத்தின் கடைசி எல்லை



அந்த வருடத்தை ,

அந்த மாதத்தை ,

அந்த நாளை ,

அந்த நிமிடத்தை ,

அந்த வினாடியை ,

அந்த கணநேரத்தை ,

மறக்கவா முடியும் ?


கல்லூரி வாழ்வின்

கடைசி நாள் .

நம்

மூன்று வருடக் காதலுக்கு

முடிசூட்டு விழா

அன்று தான் நடந்தது !


விளக்கில்லாத

வகுப்பறையில்

வசமிழந்த வசதியில்

நாம் மட்டும்

தனித்திருந்தோம் !


வெளியே பெய்த மழை

நமக்குள்ளும் !


நம் கண்களைத்

தழுவ விட்டதில்

தவழ்ந்து வந்தது

காமக் குழந்தை !


மழை பெய்தாலும்

அறையினுள்

அதிசய நிசப்தம் .

நமக்குள்ளே

விரகத்தின் சத்த !


நாம்

கைகளால்

முடிச்சுப் போட்டதில்

கற்பு கட்டவிழ்ந்தது !


உன் பெருமூச்சை

என் கழுத்தில்

பாய்ச்சினாய் !

ஓராயிரம் எரிமலையை

ஒரு சேர உணர்ந்தேன் !


உன் கண்களுள்

நுழைந்து

உனதுள்ளம் தொட்டேன்

நீயும் பதிலுக்குத் தொட்டாய் !


அது ,

ஒருவழிப்பாதை போலும் ,

வெளியேற வழியின்றி

தவித்துக்கிடந்தோம்

இருவரும் !


நாம்

ஒன்றிக்கலந்ததில்

நம்மிடையே

காற்றுக்கும் கட்டுப்பாடு !


நாம்

இணைந்து இழைந்ததில்

நம்முடைய

நாணங்களின் தட்டுப்பாடு !


நீ

போதும் என்றாய்

நான்

போதாது என்றேன்


நான்

வேண்டும் என்றேன்

நீ

வேண்டாம் என்றாய் !


விலகி விலகியே

விட்டுக்கொடுத்தாய் !


உயிர் மாற்று

அறுவை சிகிச்சையை

நாம் உதடுகளால்

நிகழ்த்தினோம் !


மன்மதப்பாதையில்

முத்தங்களால் பயணித்தோம் !


காமத்தின்

கடைசி எல்லையில்

காதலைக் கண்டோம்

மீண்டு வந்தோம் !


மழை

முடிந்த பொது

எல்லாம்

வடிந்தது !


விலகி அமர்ந்தோம் !


ஒருவரின்

உயிரை

ஒருவர்

உணர்ந்தபடி

பார்த்துக்கொண்டே இருந்தோம்

நாம்

பார்த்துக்கொண்டே இருந்தோம் !










Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர