Skip to main content

நான் அருகதை அற்றவன்




நான் கனவுகள் விற்பவன்


கவிதையின் காதலன்


காதலின் கவிஞன்


சிலர் என்னை


கலைக்கிறுக்கன் என்கின்றனர் !



மோனைகளை முடுக்கி விட்டு


எதுகைகளை எடுத்தெறிந்து


வார்த்தைகளோடு விளையாடுவது


என் வியாபார வாடிக்கை !



நாயகனுக்கும் நாயகிக்கும்


ஊடல் என்றால்


நான்


கவலையோடு கூடல் கொள்கிறேன் !



அவர்கள் தழுவலுக்கு


நான் நெகிழ்கிறேன்


அவர்களின் கண்ணீருக்கு


நான் அழுகிறேன் !



சில நேரங்களில் நான் ,


மெட்டுக்குள்


முடங்கி விடுவதால் - என்னை


மொழியின் கொலைஞன்


என்போரும் உண்டு !



எனக்கும் ஒரு கூட்டம்


இருப்பதை நம்பவே முடியவில்லை


என்னை ரசிக்கும்


அவர்களின் ரசனைக்கு


நானும் ரசிகன் !



நான் கலைச் சேவகன் அல்ல .


மது குடித்த


மாலைப் பொழுதுகளில்


மல்லாந்து படுத்து


மதியைப் பார்த்தால் தான்


வரிகள் விளைந்து


கவிகள் கனிகின்றன !



சில நேரங்களில்


நான் திருட்டுக் கயவன் .


காவியங்களின்


காதல் ரசங்களைக்


களவாடிக் கவி செய்வதால்


" கற்பனையின் உச்சன் " என்று


போற்றப்படுபவன் !



என்னை


தமிழன்னையின்


தவப் புதல்வன் என்கின்றனர் .


அவளின் பாதங்களைத்


தொடக்கூட நான்


அருகதை அற்றவன் எனும்


அவலத்தை வெளியே தெரியாமல்


மறைத்துக்கொள்வதில் உள்ளது


என் வெற்றியின் ரகசியம் !!!

Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர