நாயும் நானும் அதுவொரு மதிய வேளை ! உருவாகிக்கொண்டிருந்த புதிய வேளை ! யாருமில்லை தெருவில் ! நான் நடந்து கொண்டிருந்தேன் வியர்வையில் குளித்த உருவில் ! சூழலில் நெருப்பு ! தவித்தது செருப்பு ! நீரூற்றி வெளியில் வைத்தால் வெந்துவிடும் பருப்பு ! இப்போதைக்கு யாருமில்லை அறையில் ! கொஞ்சநேரம் விடுதலை எனக்கந்த சிறையில் ! நாடலாம் தனிமையை ! பாடலாம் இனிமையை ! என்ன இனிமை என்கிறீர்களா ? ஆபாசப்படம் மற்றும் சுயமைதுனம் ! பின்னே பாழும் பிரம்மச்சாரியான நான் தனிமை கிடைத்தால் பகவத் கீதையா படிக்க முடியும் ! இதைச்சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை ! போலிப்புனிதங்களில் எனக்கு மயக்கமில்லை ! மேலும் இம்மாதிரி எழுதி வைத்தால்தான் இக்கவிதையை நவீனத்தில் சேர்ப்பார்கள் ! இல்லையெனில், மரபு என்று கூறி பரணில் போடுவார்கள் ! எதில் விட்டேன் ? ஆங் ,,,,,,,,,, தனிமையைக் கொண்டாடலாம் ! இன்பத்தில் திண்டாடலாம் ! இன்ன பிற ,,,, இன்ன பிற ,,,,,,,,,, அப்போதுதான் அதைப்பார்த்தேன் ! அதுவொரு நாய் ! பயமுறுத்தியது அதன் வாய் ! அது, பல்லைக்காட்டிக் குரைத்தது ! அதன் பாஷையில் கோபமாய் எதையோ உரைத்தது ! ஐயகோ ! இதென்ன வம்பு ? தேவையில்லாத துன்பத்தின் அம்ப