Skip to main content

Posts

Showing posts from April, 2011
இறைவனாலும் இயலாது மின்சாரமில்லா மதியப் பொழுது !' தொலைக் காட்சியும் துணையில்லை ! தொலை பேசவும் இணையில்லை ! உறக்கமும் உபசரிக்கவில்லை தினசரியும் அனுசரிக்கவில்லை ! கழுவ வேண்டிய பாத்திரங்கள் ! கொடிகளில் தொங்கும் துவைக்காத துணிகள் ! மூலையில் குவிந்த பாலித்தீன் குப்பைகள் ! காலியான மது புட்டிகள் ! அறை எனும் சிறை ! பணியிடம் எனும் பலியிடம் ! பெண்கள் இல்லாத பயணங்கள் ! துணையில்லாமல் பார்க்கும் திரைப்படங்கள் ! காதல் இல்லாத கனவுகள் ! காதலி இல்லாத கடற்கரை ! குறைக்கத் தேவையில்லாத தொப்பை ! சிரைக்கத் தேவையில்லாத தாடி ! தலையெழுத்து எனும் பிழைஎழுத்து ! விதி எனும் சதி ! ஜாதகம் எனும் பாதகம் ! வரம் இல்லாத தவம் ! பிரமச்சர்ய சூனியம் நரகத்தை விடக் கொடியது ! அறையை விட்டு வெளியே வந்தேன் ! பக்கத்து வீட்டுப் பாட்டிதான் பல்லிளித்துப் பார்த்துப் போனாள் ! நண்பனோடு போகையில் எதிரே வருபவள் அவனை மட
அதன் பிறகு ........... அதன் பிறகு , பெண்களோடு பேசும்போது அவர்களின் கண்களை மட்டும் பார்க்கும் கண்ணியம் வந்துவிடும் ! அதன் பிறகு , கடந்து சென்றவள் தேவதையாய் இருந்தாலும் திரும்பிப் பார்க்கத் தோன்றாது ! அதன் பிறகு , பணியின் சுமை பெரிதாகத் தெரியாது ! அதன் பிறகு , கனவுகள் கவனிக்கப்படும் ! அதன் பிறகு , உணவின் மீதான விருப்பம் குறையும் ! அதன் பிறகு , இதயத் துடிப்பு இதமாகும் ! அதன் பிறகு , தன் தாடியைத் தானே கண்ணாடியில் பார்த்து நாளாகியிருக்கும் ! அதன் பிறகு , பேச்சு மென்மையாகும் நடை நளினமாகும் ! அதன் பிறகு , மதுவின் கசப்பு பிடிக்காமல் போகும் ! அதன் பிறகு , மொட்டை மாடியில் " மாலைகள் " கழியும் ! அதன் பிறகு , சத்தமில்லாமல் பேசும் கலை கைவரும் ! அதன் பிறகு , பறவைகளின் சத்தங்கள் உணரப்படும் ! அதன் பிறகு , நிலவின் மீது நேசம் பிறக்கும் ! அதன் பிறகு , பேசாத இரவுகளில் உறக்கமே வராது ! அதன
கவிதை செய்தல் உயிரை உருக்கித் தயாரிக்கும் உணர்வின் இரசம் ! மூளையைப் பிழிதெடுக்கும் மொழிச்சாறு ! உணவுண்ணும் போதும் கனவுண்ணும் கைங்கர்யம் ! கற்பனையின் , கையில் அகப்பட்டது கைவிட்டுப் போகாதிருக்க கையோடு இருக்கும் கைக்குறிப்பு ! குளியலறையிலும் குதித்தாடும் சிந்தனைகள் ! பணி நடுவிலும் அணிவகுக்கும் அழகுணர்ச்சி ! சக மனிதனின் சூழல் திருடும் சாமார்த்தியம் ! உலகப் படைப்புகளில் ஊழல் செய்யும் சாணக்கியம் ! ரகசியங்களை ரசனைப் படுத்தும் ரசாயனம் ! பழமையைப் புறந்தள்ளும் பௌதிகம் ! பிறப்பெடுத்த மலர்ச்சியிலும் பிரசவித்த அயர்ச்சி ! புத்தி சொல்லும் கேனத்தனம் புத்தி இழக்கும் ஞானத்தனம் ! உணர்ச்சிக்கு வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான புணர்ச்சிக்கு படுக்கை விரிக்கும் மெத்தை ! எண்ணங்களின் வானவில்லுக்குப் பேனாவால் மழை பொழிதல் ! உண்மையின் அந்தரங்கம் மறைக்க பொய்யால் ஆடை நெய்தல் ! ஒரே ஒரு வார்த்தைக்கும் வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !
தேடிக்கொண்டே இருக்கிறேன் நான் ................... அது ஒரு திருமண நிகழ்ச்சி ! தோழிகளுடன் துள்ளிக் கொண்டிருந்தாள் அவள் ! நண்பர்களுடன் நகைத்துக் கொண்டிருந்தேன் நான் ! அவள் , மின்மினி போல மின்னிக் கொண்டிருந்தாள் ! சிரித்தபடி ஜொலித்துக் கொண்டிருந்தாள் ! அதற்குக் காரணம் , அவளது அங்கமா ? அல்லது , அவளணிந்த தங்கமா ? பங்கப்பட்ட சிந்தையோடு புறவுலகம் மறந்து பரிதவித்தேன் நான் ! எங்கேயோ பார்ப்பது போல எனைப் பார்த்தாள் ! வேண்டுமென்றே நான் அவளைப் பார்த்தேன் ! அவள் , யாருக்கோ வீசிய புன்னகை , எனக்காக மட்டும் என்பது எனக்கு மட்டும் புரிந்தது ! என் காது மடல் வெப்பமானது ! உணர்ச்சி பொங்கித் தெப்பமானது ! அழகான அவஸ்தைப் பந்து ஒன்று அடிவயிற்றில் புகுந்து கொண்டது ! பெருவிரலால் கோலமிட்டு அவள் நின்றிருந்த கோலம் , அங்கு அவளுக்கும் அதே நிலை என்பதைக் கோடிட்டுக் காட்டியது ! அவள் , என் பார்வையின் தூண்டிலில் சிக்கி நின்றாள் ! வெ