Skip to main content

Posts

Showing posts from June, 2012

அழைப்பு வருமா ?

அழைப்பு வருமா ? இரண்டு நாட்களாகி விட்டன ! இன்றாவது அழைப்பு வருமா ? இனிமையை அழைத்து வருமா ? எங்கிருந்து என்கிறீர்களா ? வேறு எங்கிருந்து ? வீட்டில் இருந்துதான் ! என்றாவது ஓர்நாள் வீடு அழைக்கும், வரன் பார்த்திருப்பார்கள், வரச் சொல்வார்கள் விதி மாறப் போகிறது வேதனை தீரப் போகிறது !  -  என்று நான் காத்திருக்கிறேன் ! காத்துக் கொண்டேயிருக்கிறேன் ! அப்பா, வேலையைப் பற்றியே கேட்கிறார் ! அம்மாவோ உணவு உண்ட வேளையைப் பற்றியே கேட்கிறாள் ! " வேறு சங்கதி உண்டா ? " என்று நானும் பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் ! நாடகமாகவாவது நல்லது சொல்வார்கள் என்று ! ம்ஹூம்... ஒரு ஆணியும் பெயரவில்லை ! ஒரு அணுவும் அசையவில்லை ! இந்தக் காலப் பெண்கள் இருக்கிறாள்களே ! அம்மம்ம்மா ! அப்பப்ப்ப்பா ! அய்யய்யோ ! ஆர்யா போல வேண்டுமாம் ! சூர்யா போல வேண்டுமாம் ! அவனைப் போல வேண்டுமாம் ! இவனைப் போல வேண்டுமாம் ! ஜவுளிக் கடையில் குவிந்து கிடக்கும் ஆடையைத் தேடுவது போலத்தான்  - தனக்கான ஆடவனையும் தேடத் தலைப்படுகிறாள் இங்கு ஒவ்வொரு பெண்ணும் ! பகட்டானது மட்டுமே பக்குவமாய் வி