விழித்து விடு வாலிபா
தங்கத்தலைவன் நீ !
தவப்புதல்வன் நீ !
தவப்புதல்வன் நீ !
வீழுகின்ற
வறியோர்க்கு எல்லாம்
ஒட்டுமொத்த விடியல் நீ !
உனக்கென ஓர்
உலகம் உள்ளது !
அங்கே
வரலாறுகள் உன் வரவை
வணக்கம் சொல்லி
வாழத்துக்கூறும் !
காவியங்கள் உன்
கட்டளைக்கு
கைகட்டிக் காத்து நிற்கும் !
உன்
சுண்டு விரலை
சிறிதேனும் உயர்த்து
வானம் வந்து
வளைந்து கொடுக்கும் !
கோபமாய்
ஒரு பார்வை பார் !
இமயமும் இல்லாது போகும் !
நீ
பாவைகளின் காதலன் அல்ல
ஏழைகளின் காவலன் !
நீ
போதையின் கூட்டாளி அல்ல
புதியதொரு பாதையின் படைப்பாளி !
விழித்து ஏழு
வெளியே வா
தொடர்ந்து நட !
தலைமையை ஏற்க
தொண்டர் படை
தயாராய் உள்ளது !
ஒரு
உன்னத உதயம்
உன்னால் உருவாகட்டும் !
Comments
Post a Comment