மாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு முன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது " பொறம்போக்கு நிலமாக " , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா ? வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன