Skip to main content

Posts

Showing posts from September, 2011
மாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு முன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது " பொறம்போக்கு நிலமாக " , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா ? வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன
மாந்தி - நாவல் சக்கரவர்த்தி கோபிநாத் , தனது தோட்டத்தில் . தனது ஆஸ்தான சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , அன்றைய தினசரியின் நாலாவது பக்கத்தை நாலாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தார் . வாழ்க்கை அவருக்கு , எதோ அவார்ட் வாங்கின ஒரு திரைப்படத்தைப் போல பிரேம் பை பிரேமாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது . அறுபது வயதாகிவிட்ட அவர் இனிமேல் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லை . மனைவி போய்ச்சேர்ந்து விட்டாள் . ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டாள் . இங்கு அவரும் , நாளுக்கு இரண்டு வேளை " வந்து போகும் " ஒரு வேலைக்காரியும் மட்டும் ! சக்கரவர்த்தி கோபிநாத் அந்த வேலைக்காரியை , " கரெக்ட் " செய்யலாமென்று கூட நினைத்தார் . அப்படி " கரெக்ட் " செய்யும் முயற்சியில் ஓரளவாவது பொழுது போகுமே என்பது அவர் எண்ணம் . ராணிக்கு வயது ஒரு நாற்பது நாற்பத்தி ஐந்து இருக்கும் . சும்மா சொல்லக்கூடாது , சும்மா கும்மென்று இருப்பாள் . ஒரு நாள் , அவ
உன் மீது சில புகார்கள் அடியே , காதலைக் கைது செய்த நான் - இப்போது காதலின் கைதியாகி நிற்கிறேன் ! தங்கத்தால் செய்யப்பட்டதைத் தவிர இந்த சிறைக்கம்பிகளுக்கு வேறு சிறப்புகள் எதுவுமில்லை ! சிறகடித்து சந்தோஷமாகப் பறந்து கொண்டிருந்தேனடி ! எனது இறக்கைகளை வெட்டிவிட்டு கால்களைக் கட்டிவிட்டாய் ! பறக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் நான் நொந்து நொந்து நூலாகிறேன் ! வெந்து வெந்து வீணாகிறேன் ! விடுதியில் இருக்கிறாய் நீ ! வீட்டில் இருக்கிறேன் நான் ! சாலையில் நடப்பதைப்போன்றது உன் நிலை ! கம்பி மீது நடப்பதைப் போன்றது என் நிலை ! உனக்காக நான் விழுந்து எழுந்து எழுந்து விழுந்து விழுப்புண்கள் பெற்றாலும் விருப்பத்தோடு உன் விருப்பம் நிறைவேற்ற விழைகிறேன் ! நீயோ உனக்கான சாலையில் எனக்காக நடப்பதற்கே சிரமாயிருக்கிறது என்கிறாய் ! எந்த ஊர் நியாயம் இது ? பக்கத்து வீட்டுக்காரனைப் பலநாட்களாகத் தெரியும் ! ஈன்றெடுத்த பச்சிளம் குழந்தையைப் பத்து நாட்களாகத்தான் தெரியும் ! அதனால் பக்கத்து வீட்டுக்காரனே பெரிதும் உயர்ந்தவன் என்று பைத்தியகாரன் கூடப் பிதற்ற மாட்டான் ! உனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக பச்சிளம் குழ