Skip to main content

Posts

Showing posts from August, 2011
ஒரு காதலின் முளை நாம் வகுப்பினுள் இருக்கும்போதெல்லாம் நான் என்னை உன் மூலமாகவே உணர்ந்திருக்கிறேன் ! அதுபோல நீயும் உன்னை என் மூலமாக உணர்ந்திருப்பாய் ! தோழிகளுடன் எதிரே வருகையில் நீ தலைகுனிந்து சென்றாலும் உன் சிவந்த கன்னங்கள் காட்டிக் கொடுக்கின்றன ! தொலைவில் வரும்போதே என்னைப்பார்த்து ரகசியமாய்ப் புன்னகைத்திருக்கிறாய் என்பதை ! பேருந்தில் நான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ! நீயும் மௌனமாக அனுமதித்துக் கொண்டேஇருந்தாய் ! திடீரென்று ஒரே நொடியில் ஒட்டுமொத்தமாக என்னைப் பார்த்துவிட்டு உனக்கான நிறுத்தத்தில் இறங்கிச் சென்றாய் ! அதிர்ச்சியில் எனக்கான நிறுத்தத்தில் நான் இறங்காமல் இரண்டு நிறுத்தங்கள் தள்ளியே இறங்கினேன் ! நம் பார்வைகள் சங்கமிக்கும் போது உண்டாகும் மின்சாரத்தைச் சேமிக்க உடனடியாக ஒரு கருவி செய்யச்சொல்லி அரசாங்கத்திற்கு ஆலோசனை தரலாம் என்றிருக்கிறேன் நான் ! என்ன சொல்கிறாய் நீ ? உண்மையைச்சொல் ! ஒருநாள் வகுப்பிற்குத் தாமதமாய் வந்து திட்டு வாங்கினேன் என்று அடுத்த நாள் நீயும் தாமதமாய் வந்து திட்டு வாங்கியது எனக்காகத்தானே ? கலைந்த உன் கூந்தலை விரல்களால் நளினமாக நீ ஒதுக்கி
எதிரே வரும் அவள் தொலைவில் வரும்போதே தலையுயர்த்திப் பார்த்து , கடல் அலைபோல் மனதை அலைக்கழித்து , எண்ணத்தை சிதற வைத்து இதயத்தைப் பதற வைத்து , இரத்த ஓட்டம் உறையச்செய்து நாடித்துடிப்பு குறையச்செய்து , அருகே வந்ததும் பார்வையை உரச விட்டு , இளமைக்கு மழை பெய்து புன்னகைத்து உயிர் கொய்து , - என இவ்வளவும் நடத்தி விட்டு எதுவுமே நடக்காதது போல எப்படித்தான் கடந்து போக முடிகிறதோ தொடர்ந்து மூன்றாவது நாளாக எனக்கு எதிரே வரும் அவளால் ???
தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள் வாரத்தில் ஓர்நாள் ஏதேனும் ஒரு கிழமையில் தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள் ! மாலைபோட்டு மாலை உங்களை வரவேற்கும் ! அன்றைக்கென்று உங்கள் மனைவி உங்களுக்கு அழகாகத் தெரிவாள் ! கூடம் சொன்ன பாடம் படிக்கும் மகளின் சந்தேகம் தெளிவித்து சந்தோசம் கொள்வீர்கள் ! சும்மாவேனும் அம்மாவிடம் அன்போடு பேசுவீர்கள் ! சர்க்கரை நோய்பற்றி அக்கறையாய் அப்பாவிடம் விசாரிப்பீர்கள் ! இல்லம் தேடிவந்த நண்பரிடம் நல்லவிதமாய் நலம் விசாரித்து - நட்பை மேலும் பலம் பெறச்செய்வீர்கள் ! அண்டை அயலூரில் வாழும் தங்கை தமக்கையிடம் பாசம் ஊட்டி மாமன் மச்சானிடம் நேசம் காட்டி உறவுப்பாலத்தை உறுதிப்படுத்துவீர்கள் ! அந்த வாரத்தின் வாரஇதழை வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் வாசித்து முடிப்பீர்கள் ! மாத இறுதியில் குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தோடு போய்வரும் இனிய திட்டமொன்று உங்கள் இதயத்தில் உதயமாகும் ! அன்பு மனைவி ஆசையோடு வார்த்துத்தரும் தோசையில் அன்பானது முறுகலாய் வெளிப்பட்டு முறுவலிக்கும் ! இரவு உணவு முடித்து தெருக்கோடிக் கடைவரை நடை