Skip to main content
மீனவ வேதனை


இதுவரையிலான எமது

கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி

செந்நீரால் சிவப்பாகும் !


கோடி முறை

பொங்கினாலும்

எமது கவலைகள்

அலையைப்போல

கடலுக்குள்ளேயே

முடங்கி விடுகின்றன !


கடல் எங்களின் தாய் !

தாயன்பில் ,

தாயின் மீதான உரிமையில்

எல்லைகளை

ஏற்கத் தெரியவில்லை

எங்களுக்கு !


கண்முன்னே

பிள்ளைகள் சாவதை

எந்தத் தாயும் தாங்க மாட்டாள் .

ஆகவே ,

எங்களை

வதைத்துக்கொல்லும்

வழக்கத்தை வேறெங்காவது

வைத்துக்கொள்ளுங்கள் !

தயவு செய்து கடலில் வேண்டாம் !


கண்டனங்கள் ,

இரங்கல்கள் ,

அறிக்கைகள் ,

சந்திப்புகள் ,

தீர்மானங்கள் ,

நிவாரணங்கள் ,

இவைகளின் மீதான

நம்பிக்கையும்

எங்களைப்போலவே

எங்களிடம் செத்து விட்டது !


ஆயிரம் இன்னல்கள்

வந்தாலும்

அன்னை மடியை

விட்டு விடாத

குழந்தைகள் நாங்கள் !


எங்களுக்கு வேறு

போக்கிடம் இல்லை !





Comments

Popular posts from this blog

  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர