ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு மாமன் மகள் எனக்கு மொத்தம் ஐந்து தாய் மாமாக்கள். அவர்களில் அநேகமாக அனைவருக்குமே பெண் பிள்ளைகள் இருந்தாலும் அதில் துரைராஜ் மாமாவின் மகளான பிரியாவின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு. பிரியாவிடம் இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. ஏனெனில் துரைராஜ் மாமாவின் மனைவி விஜயா அத்தைக்கு சுற்றத்தாரோடு ஒட்டி வாழ்வது என்பது பிடிக்காமல் இருந்தது. மற்ற நான்கு மாமாக்கள் வீடுகளுக்கும் சகஜமாகப் போய்வரும் சொந்த பந்தங்கள் இந்த ஒரு மாமாவின் வீட்டில் கால் எடுத்து வைக்க மட்டும் சற்று அதிகப்படியாகவே தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக என் அம்மாவிற்கும், அத்தைக்கும் ஆகவே ஆகாது. இரண்டு மனிதர்களுக்கு இடையே இயல்பிலேயே இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் நான் இவர்கள் விஷயத்தில் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். நடந்த சம்பவங்களின் மூலம் நான் அதனை உணர்ந்து கொண்ட போது " அட ! இவங்க ரெண்டு பேத்துக்கும் ஆகாது போலவே " என்று ஒரு அற்ப திருப்தி மனதில் ஏற்பட்டது. திருப்தி ஏனென்றால் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு உண்மையை உணரும் போது இயல்பிலேயே அந்த உண்மையை நாம் உ