குறிப்பு : கண்டிப்பாக இந்தக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்
கூடல்
முதன் முதலில்
நாம் பார்வைகளால் தான்
தழுவிக்கொண்டோம் !
என்னை உன்னோடு
முடிந்து கொள்ள உனது
சில முடிச்சுக்களை
அவிழ்க்க வேண்டி இருந்தது
உன் வெட்கத்தையும் சேர்த்துத்தான் !
முத்தங்களை மட்டும்
உடுத்திக்கொண்டு
நாம் ஆயத்தமானோம் !
உன்னில் நுழைந்து
என்னில் வெளிவருவதுதான்
குறிக்கோள் !
ஓரிடத்தில் மீட்டினால்
வேறிடத்தில் நாதம் தரும்
வித்தியாச வீணை நீ !
சிகரத்தை அடையும்
போட்டியில் தோற்றுப் போவதற்காக
இருவருமே வேகமாகப்
பயணிக்கின்றோம் !
தாக்கப்படுவது நீயாக
இருந்தாலும்
காயம் அடைவது நான் !
உன் சிறைச்சாலையின்
கைதி நான் !
நீ மரணித்த பிறகே
எனக்கு வெளியேற அனுமதி !
ஒற்றைத் துடுப்பை
நதியில் போட்டபடி
நான் வானத்தில் பறக்கிறேன் !
நாக்கு , விரல் போன்றவை
உன்னைக்கொல்ல நான்
பிரயோகிக்கும்
குறுக்குவழி ஆயுதங்கள் !
செந்தாமரை மலர் நீ
சீறிப்பாயும் அம்பு நான்
உனக்கும் எனக்கும்தான் யுத்தம்
சிறிது அசந்தாலும் நான்
தோற்றுப்போவது உறுதி !
நெற்றி சுருக்கி ,
கண்கள் மூடி ,
உதடு திறந்து ,
நீ செய்யும் இன்பக்கதறல்
என் இயங்கு சக்தியின்
இரகசிய எரிபொருள் !
சொர்க்கத்திற்கான தூரம்
ஒன்றும் பெரிதல்ல
வெறும் ஐந்து நிமிடங்கள் போதும் !
படம் எடுத்த பாம்பு நான்
உன்னை ஓயாமல் கொத்துகிறேன்
நஞ்சு வெளியே வந்தால்
சாவு எனக்குத்தான் !
இருவரும் ஒன்றாக
ஒரே வேகத்தில் பயணித்தாலும்
முன் பின்னாகத் தான்
இலக்கை அடைகிறோம் !
உன்னை உச்சியில்
நிறுத்தி தள்ளி விடுகிறேன்
சந்தோஷமாக விழுந்து
சாகிறாய் !!!
Comments
Post a Comment