Skip to main content
குறிப்பு : கண்டிப்பாக இந்தக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்


கூடல்



முதன் முதலில்

நாம் பார்வைகளால் தான்

தழுவிக்கொண்டோம் !


என்னை உன்னோடு

முடிந்து கொள்ள உனது

சில முடிச்சுக்களை

அவிழ்க்க வேண்டி இருந்தது

உன் வெட்கத்தையும் சேர்த்துத்தான் !


முத்தங்களை மட்டும்

உடுத்திக்கொண்டு

நாம் ஆயத்தமானோம் !


உன்னில் நுழைந்து

என்னில் வெளிவருவதுதான்

குறிக்கோள் !


ஓரிடத்தில் மீட்டினால்

வேறிடத்தில் நாதம் தரும்

வித்தியாச வீணை நீ !


சிகரத்தை அடையும்

போட்டியில் தோற்றுப் போவதற்காக

இருவருமே வேகமாகப்

பயணிக்கின்றோம் !


தாக்கப்படுவது நீயாக

இருந்தாலும்

காயம் அடைவது நான் !


உன் சிறைச்சாலையின்

கைதி நான் !

நீ மரணித்த பிறகே

எனக்கு வெளியேற அனுமதி !


ஒற்றைத் துடுப்பை

நதியில் போட்டபடி

நான் வானத்தில் பறக்கிறேன் !


நாக்கு , விரல் போன்றவை

உன்னைக்கொல்ல நான்

பிரயோகிக்கும்

குறுக்குவழி ஆயுதங்கள் !


செந்தாமரை மலர் நீ

சீறிப்பாயும் அம்பு நான்

உனக்கும் எனக்கும்தான் யுத்தம்

சிறிது அசந்தாலும் நான்

தோற்றுப்போவது உறுதி !


நெற்றி சுருக்கி ,

கண்கள் மூடி ,

உதடு திறந்து ,

நீ செய்யும் இன்பக்கதறல்

என் இயங்கு சக்தியின்

இரகசிய எரிபொருள் !


சொர்க்கத்திற்கான தூரம்

ஒன்றும் பெரிதல்ல

வெறும் ஐந்து நிமிடங்கள் போதும் !


படம் எடுத்த பாம்பு நான்

உன்னை ஓயாமல் கொத்துகிறேன்

நஞ்சு வெளியே வந்தால்

சாவு எனக்குத்தான் !


இருவரும் ஒன்றாக

ஒரே வேகத்தில் பயணித்தாலும்

முன் பின்னாகத் தான்

இலக்கை அடைகிறோம் !


உன்னை உச்சியில்

நிறுத்தி தள்ளி விடுகிறேன்

சந்தோஷமாக விழுந்து

சாகிறாய் !!!







Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...