Skip to main content
குறிப்பு : கண்டிப்பாக இந்தக்கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்


கூடல்



முதன் முதலில்

நாம் பார்வைகளால் தான்

தழுவிக்கொண்டோம் !


என்னை உன்னோடு

முடிந்து கொள்ள உனது

சில முடிச்சுக்களை

அவிழ்க்க வேண்டி இருந்தது

உன் வெட்கத்தையும் சேர்த்துத்தான் !


முத்தங்களை மட்டும்

உடுத்திக்கொண்டு

நாம் ஆயத்தமானோம் !


உன்னில் நுழைந்து

என்னில் வெளிவருவதுதான்

குறிக்கோள் !


ஓரிடத்தில் மீட்டினால்

வேறிடத்தில் நாதம் தரும்

வித்தியாச வீணை நீ !


சிகரத்தை அடையும்

போட்டியில் தோற்றுப் போவதற்காக

இருவருமே வேகமாகப்

பயணிக்கின்றோம் !


தாக்கப்படுவது நீயாக

இருந்தாலும்

காயம் அடைவது நான் !


உன் சிறைச்சாலையின்

கைதி நான் !

நீ மரணித்த பிறகே

எனக்கு வெளியேற அனுமதி !


ஒற்றைத் துடுப்பை

நதியில் போட்டபடி

நான் வானத்தில் பறக்கிறேன் !


நாக்கு , விரல் போன்றவை

உன்னைக்கொல்ல நான்

பிரயோகிக்கும்

குறுக்குவழி ஆயுதங்கள் !


செந்தாமரை மலர் நீ

சீறிப்பாயும் அம்பு நான்

உனக்கும் எனக்கும்தான் யுத்தம்

சிறிது அசந்தாலும் நான்

தோற்றுப்போவது உறுதி !


நெற்றி சுருக்கி ,

கண்கள் மூடி ,

உதடு திறந்து ,

நீ செய்யும் இன்பக்கதறல்

என் இயங்கு சக்தியின்

இரகசிய எரிபொருள் !


சொர்க்கத்திற்கான தூரம்

ஒன்றும் பெரிதல்ல

வெறும் ஐந்து நிமிடங்கள் போதும் !


படம் எடுத்த பாம்பு நான்

உன்னை ஓயாமல் கொத்துகிறேன்

நஞ்சு வெளியே வந்தால்

சாவு எனக்குத்தான் !


இருவரும் ஒன்றாக

ஒரே வேகத்தில் பயணித்தாலும்

முன் பின்னாகத் தான்

இலக்கை அடைகிறோம் !


உன்னை உச்சியில்

நிறுத்தி தள்ளி விடுகிறேன்

சந்தோஷமாக விழுந்து

சாகிறாய் !!!







Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர