Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பர்களுக்கு மட்டும் .............



காதல் மன்னர்கள்



ஆண்களால் ஆன

எனது தொழிற்ச்சாலை

காதலால் இயங்குகிறது !


அங்கே

ஒவ்வொரு ஊழியனும்

ஒரு காதலன் !

ஒவ்வொரு காதலனும்

ஒரு ஊழியன் !


என் அலுவலகத்தில்

இருக்கிறார்கள்

காதலின் கர்த்தாக்கள் !


இதயத்தை

சின்னமாகக் கொண்ட

காதல் மன்னர்கள்

சிலரைப் பற்றி இதோ.............


வினோபா ,

காதலில்

சோதனைகளை

அதிகம் பார்த்ததில்

அவன் ஒரு சாதனையாளன் !


கௌரி ஷங்கர் ,

காதல் சாம்பலில்

மீண்டும் உயிர்த்த

பீனிக்ஸ் பறவை !


அருள் முருகன் ,

காதலைப் போராடி வென்ற

கர்ம வீரன் !


ஜெகன் ,

விடலைப் பெண்களின்

உள்ளம் கவர்ந்த

வெள்ளை வித்தகன் !


மாணிக்கராஜ் ,

பேசிப் பேசியே

காதலைக் கனிவித்த

இன்சொல் அரசன் !


பீட்டர் ,

பைங்கிளிகளின்

பக்குவம் தெரிந்த

பண்பாளன் !


மனோஜ் ,

மலர்க்கொடிகளின்

மனம் கவர்ந்த

மன்மதன் !


ஹரி ,

கன்னிப் பெண்களின்

கனவு நாயகன் !


ராமதாஸ் ,

ஊடல் இருந்தாலும்

காதல் குறையாத

உத்தம புருஷன் !


பிரதீசும்

கருணாகரனும்

காதலியைக் கைப்பிடித்த

கண்ணியவான்கள் !


இந்தக் காதல் யுத்தத்தில்

களம் கிடைக்காத

நானும் தினேஷும் ,

துணைவிக்காக தவமிருக்கும்

விதியின்

விளையாட்டு பொம்மைகள் !!!








Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர