Skip to main content
ஒரு பிரிவும் சில இதயங்களும் ......



ஒரு மாலை நேர மந்தகாச தனிமையில்

நாம் மறுபடி சந்தித்தோம் .


நான் வழக்கமாக புன்னகைத்தேன்

நீ மாறாக மௌநித்தாய் .


என்னை அழுத்தமாய்ப் பார்த்துக்கொண்டே ,

அந்த அழைப்பிதழை நீட்டினாய் .


அதில் , உன் பெயருக்குப்பக்கத்தில்

எவன் பெயரோ இருந்தது .


நான் அவஸ்த்தையாய் " ஏன் " என்றேன் ,

நீ அமைதியாய் " யதார்த்தம் " என்றாய் .


என்னிடம் இருந்த உன் இதயத்தை

நீ பிடுங்கிகொண்டதில் ,


உன்னிடம் இருந்த என் இதயம்

துடிப்பை நிறுத்தி இருந்தது .


அவனது புகைப்படம் காட்டினாய்

மாதச்சம்பளம் ஐந்து இலக்கம் என்றாய் .


கடைசியில் , நம் நான்கு வருட காதலை

நாசூக்காய் விற்றிருந்தாய் .


சிப்பந்தி வந்தான் . உன் அனுமதியுடன்

உனக்கான பணத்தையும் சேர்த்தே கொடுத்தேன்

ுகமாய் இருந்தது .


பிரியும் போது சொன்னாய்

" திருமணத்திற்கு வந்து விடாதே " என்று .

நான் வறட்சியாய் புன்னகைத்தேன் .


ஒரு சில நிமிடங்கள்

நாம் மௌனமாய் அமர்ந்திருந்தோம்

அது தான் நாம் நம் காதலுக்கு செலுத்திய

இறுதி அஞ்சலி .


தெருவில் நடந்து கொண்டிருந்தேன்

தள்ளுவண்டியில் கம்பளி ஆடை விற்றுக்கொண்டிருந்தார்கள்

அப்பாவுக்கு குளிர் தாங்காது என வாங்கிக்கொண்டேன் .


சிறிது தொலைவு நடந்ததில்

அம்மாவின் ஞாபகம் வந்து

ஆப்பிள் பழங்களை வாங்கினேன் . விரும்பி சாப்பிடுவாள் .


அடுத்த மாத சம்பளத்தில்

பள்ளி செல்லும் தம்பிக்கு ஒரு

மிதிவண்டி வாங்க முடிவெடுத்தேன்

பாவம் நடந்தே செல்கிறான் .


என் பழைய காதலியே ,

ஒரு வகையில் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் .


உன் பிரிவால் , என்னைச்சுற்றியுள்ள

பிற இதயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டேன் .




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர