Skip to main content
படைப்புலகப் பிச்சைக்காரன்


இப்போதெல்லாம்

பாடு பொருள்கள் கிடைப்பதில்லை !


கற்பனைகள்

வறண்டு விட்டன !


உவமைகள்

தீர்ந்து விட்டன !


மோனைகள்

முரண்டு பிடிக்க ,

எதுகைகள்

ஏளனம் செய்கின்றன !


வார்த்தைகளை

மாற்றிப் போட்டே

வண்டி ஓடுகிறது !


பக்கத்து மொழியிடம்

கடன் வாங்கித்தான்

பிழைப்பே நடக்கிறது !


மூளையைப் போலவே

மழுங்கிக் கிடக்கிறது

என் பேனாவின் முனையும் !


எனக்கும்

கசாப்புக்கடைக்காரனுக்கும்

வித்தியாசம் ஒன்றுமில்லை !

அவன் கூறுபோடுவது ஆட்டை !

நான் கூறு போடுவது பாட்டை !

அவன் கொல்வது கோழியை !

நான் கொல்வது மொழியை !


இதில் அவ்வப்போது

இலக்கியச் சேவை வேறு !


அறுபதுபக்கத்தொகுப்பில்

பொருளடக்கமே மூன்று பக்கம் !

அணிந்துரைகளும்

பொழிப்புரைகளும்

சேர்ந்தாற்போல இருபது பக்கம் !

இதில்

என்னுரை ஒரு

ஏழு பக்கம் !

கணக்கிடுங்கள்

கவிதைகள் எத்தனை பக்கம் ?

இதில் கொடுமை என்னவென்றால்

தலா ஒரு கவிதைக்கு

நான்கு பக்கம் என

நாசூக்காய் ஒத்துக்கியிருந்தேன் !


என்னை யாராவது கவிஞன்

என்றால் சிரிப்பு வருகிறது !


நான் சட்டைப்பையில்

குறிப்புத்தாளுடன் அலைகிறேன் !

எங்கேயாவது ,

எவனாவது ,

எதையாவது சொன்னால்

சடுதியில் குறித்துக்கொள்ள !


"படைப்புலகப் பிச்சைக்காரன் " என்பது

எனக்கு நானே வழங்கிய பட்டம் !


கொஞ்சம் இருங்கள் ..............


எனது அடுத்த கவிதை

இப்போது தயாராகி விட்டது .

வருகிறேன் !!!






Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர