தமிழ் எந்தன் தாயடி ..........
அன்பே ,
ஆருயிரே ,
இனிமையின் ஈர்ப்பே ,
ஈர்க்கின்ற இனிமையே ,
உன்னத உயிரே ,
ஊறுகின்ற உணர்வே ,
என்னில் பாதியே ,
ஏற்றமிகு எழிலே ,
ஐம்பொன் அழகே ,
ஒப்பிலா வனப்பே ,
ஓங்காரச் சிறப்பே ,
ஒளவையின் மொழியே ,
அக்கின் நிறைவே !
புகழுரை போதுமா ?
இன்னமும் வேண்டுமா ?
புன்னகைத்தது போதும்
மீதியையும் படி !
தமிழ் எந்தன் தாயடி !
நான் தமிழுக்கு மகனடி !
முதலில் அவளுக்கு நன்றி சொல் !
முடிந்தால் விழுந்து வணங்கு !
ஏனெனில் ,
இந்தப்பாட்டில்
உன்னைப்பாட ,
அவள் தன்னுயிரைத்
தந்துள்ளாள் !!!
Comments
Post a Comment