முன் குறிப்பு : இந்தக் கவிதை வயது வந்தவர்களுக்கு மட்டும்
நீயும் நானும்
பழுத்த மரம் நீ
பசித்த மரங்கொத்தி நான்
கொத்துகிறேன் !
மல்லாந்த உரல் நீ
செங்குத்து உலக்கை நான்
இடிக்கிறேன் !
பவளத் தோணி நீ
பக்குவத் துடுப்பு நான்
துழாவுகிறேன் !
குழைந்த நிலம் நீ
குத்திக்கிழிக்கும் ஏர் நான்
உழுகிறேன் !
திறந்த பூட்டு நீ
தினவெடுத்த சாவி நான்
நுழைகிறேன் !
தேன்ததும்பும் பூ நீ
தேள்கொடுக்குத் தேனீ நான்
கொட்டுகிறேன் !
பிளந்த பாதை நீ
புறப்பட்ட அம்பு நான்
பயணிக்கிறேன் !!!
பின் குறிப்பு : இந்தக் கவிதைக்கான களம் களவாடப்பட்டது
Comments
Post a Comment