பெண்கள்
எதிரே வந்தவள் எவளோ ?
புன்னகைத்துப் பார்த்துச் சென்றாள் !
பிறவியின் பயனில் பாதியை அடைந்தேன் !
"அண்ணா " என்றபடி ,
கையேந்தி நின்றாள்
ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி !
காசுகளைக் கொடுக்கும் போது ,
கண்ணீர்த்துளிகளையும்
சேர்த்தே கொடுத்தேன் !
நரைகிழவி ஒருத்தி ,
சாலையைக் கடக்க
நின்றிருந்தாள்
கைப்பிடித்து அழைத்துப் போனேன்
குழந்தையைப் போல
குழைந்து வந்தாள் !
பெண்மழலை ஒன்று
பார்த்துப் பார்த்து சிரித்தது !
பரம்பொருளே சிரித்தது போலிருந்தது !
கவலைகள் ,
கடலளவு இருப்பினும் ,
"அம்மா ...அம்மா .." என்று
அரற்றினாலே போதும் !
அணு அணுவாக அற்றுப்போகும் !
சின்னச் சின்னதாய்
சண்டைகள் போட்டாலும் ,
சமாதானமாகி ,
சாப்பிட அழைப்பாள் சகோதரி !
நோய்நொடி என்றால்
இருக்கவே இருக்கிறது
அன்னை மடி !
தலைசாய்த்துப் படுத்தால் ,
தடவித் தடவியே
தன்னுயிரை ஊட்டி
நோயை ஓட்டுவாள் !
வருங்காலத்தில் ,
வாடிய முகம் கண்ட போதெல்லாம் ,
உயிரில் பாதியை ,
உருக்கி வார்க்காமலா போய்விடுவாள்
உத்தம பத்தினி !
பூவுலகில் ,
பெண்களும் ,
அவர்கள் தரக்கூடிய
நம்பிக்கைகளும் இல்லையெனில்
நான் எப்போதோ இறந்திருப்பேன் !!!
Ji.. engayo poreenga... Heart melting
ReplyDelete