Skip to main content
பெண்கள்


எதிரே வந்தவள் எவளோ ?

புன்னகைத்துப் பார்த்துச் சென்றாள் !

பிறவியின் பயனில் பாதியை அடைந்தேன் !


"அண்ணா " என்றபடி ,

கையேந்தி நின்றாள்

ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி !

காசுகளைக் கொடுக்கும் போது ,

கண்ணீர்த்துளிகளையும்

சேர்த்தே கொடுத்தேன் !


நரைகிழவி ஒருத்தி ,

சாலையைக் கடக்க

நின்றிருந்தாள்

கைப்பிடித்து அழைத்துப் போனேன்

குழந்தையைப் போல

குழைந்து வந்தாள் !


பெண்மழலை ஒன்று

பார்த்துப் பார்த்து சிரித்தது !

பரம்பொருளே சிரித்தது போலிருந்தது !


கவலைகள் ,

கடலளவு இருப்பினும் ,

"அம்மா ...அம்மா .." என்று

அரற்றினாலே போதும் !

அணு அணுவாக அற்றுப்போகும் !


சின்னச் சின்னதாய்

சண்டைகள் போட்டாலும் ,

சமாதானமாகி ,

சாப்பிட அழைப்பாள் சகோதரி !


நோய்நொடி என்றால்

இருக்கவே இருக்கிறது

அன்னை மடி !

தலைசாய்த்துப் படுத்தால் ,

தடவித் தடவியே

தன்னுயிரை ஊட்டி

நோயை ஓட்டுவாள் !


வருங்காலத்தில் ,

வாடிய முகம் கண்ட போதெல்லாம் ,

உயிரில் பாதியை ,

உருக்கி வார்க்காமலா போய்விடுவாள்

உத்தம பத்தினி !


பூவுலகில் ,

பெண்களும் ,

அவர்கள் தரக்கூடிய

நம்பிக்கைகளும் இல்லையெனில்

நான் எப்போதோ இறந்திருப்பேன் !!!


Comments

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர