உனது சிறப்புகள்
உந்தன் ,
பாதச் சுவடுகளை
கண்களில் பிரதியெடுத்து,
இதயத்தில் இருத்துகிறேன் !
உன்
கையசைப்புகளை
காற்றில் பிடித்து ,
கவனமாய் வைக்கிறேன் !
உன்
ஒற்றை முடியைக்கொண்டு ,
நிலவில் ஏறி ,
நட்சத்திரம் பறிக்கிறேன் !
நீ
சிந்திய வெட்கத்தையெல்லாம்
அள்ளிச் சேர்த்ததில் ,
அவனியில் சிவப்பு மட்டுமே
செங்கோல் செலுத்தியது !
உன்
உள்ளங்கைச் சூட்டை
ஒருநாள் கடன் கொடேன் !
விடுமுறையின்றி பாவம்
சோர்ந்து கிடக்கிறான் சூரியன் !
அய்யையோ ,
கடைக்கண் பார்வையை
காட்டிவிடாதே ! அப்புறம்
உலகப்பந்து உதைபட்டுப்போகும் !
ஒருமுறை ,
நீ பாதி குடித்து மீதி வைத்த
குளிர்பானத்தைக் குடித்துவிட்டேன் !
அன்றிரவே இறைவன் வந்தான்
என்னிடமிருந்து இறப்பை மட்டும்
பிடுங்கிச் சென்றான் !!!
Comments
Post a Comment