Skip to main content
காதலியே கேள் .....



காதலியே கேள் !

இனிமேல் நாம்

மழையில் நனைய வேண்டாம் !

அமுத மழை இப்போதெல்லாம் ,

அமிலத்தை அணிந்துதான்

தரையையே தொடுகிறது !


வடுகப்பட்டிக் கவிஞன் சொன்னானென்று ,

வானின் நிறத்தை மையாக்கி ,

காதல் கடிதம் தீட்டச் சொன்னாய் !


நானிலத்தின் கழிவுகளால் ,

நீலம் எல்லாம் நீர்த்துப்போக ,

வார்த்தையை வடிக்க

வழியின்றி விழிக்கிறேன் !


தண்ணீரை உன்னுடன்

ஒப்பிடச் சொல்கிறாய் !

குளோரின் குரூரமாகச் சிரிப்பது

கேட்கவில்லையா உனக்கு ?


மொட்டை மாடியில் ,

காற்று வாங்குவதைக் குறைத்துக்கொள்வோம் !

ஏனென்று கேட்கிறாயா?

ஹைக்கூத் தென்றலை ,

ஹைட்ரோ கார்பன் கவர்ந்து விட்டதாம் !

செய்தியை , செவிமடுக்க வில்லையா நீ ?


கணநேரமாவது ,

குளிர்ச்சியைக் குறைத்துக்கொள்வோம் !

ஓசோன் ஒருநாளாவது

ஓய்வெடுக்கட்டும் !


உந்தன் ,

பார்வையின் மின்சாரமே போதுமே !

புறவுலக மின்சாரத்தை

பத்திரப்படுத்துவோம் !


பூச்சிக்கொல்லிகள்

ஆட்சி செய்வதால் ,

பருக்கைச்சோற்றைப் பகிர்ந்து கொள்வதை

பெருமளவில் குறைத்துக்கொள்வோம் !


புகையின் பகையை ,

பூமி இனிமேலும் பொறுக்காது !

ஆகையால் ,

காலாற நடந்தே ,

காதலை அனுபவிப்போம் !


இனிமேலான இரவுகளில் ,

காற்றைத் தூது விட்டே பேசிக்கொள்ளலாம் !

கதிர்வீச்சுக்களின் கோபமூச்சு ,

கடுகளவேனும் குறையட்டுமே !!!



Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...