Skip to main content
குறிப்பு : சிவப்பு வரிகள் ஆணினுடையவை !

நீல வரிகள் பெண்ணினுடையவை !


காதல் பேச்சு





அப்புறம் .....


ம்ம்ம் ................


என்ன ம்ம்ம்ம் .......... ?


ம்ம் என்றால் ம்ம்ம் !


ஏதாவது பேசேன் !


நீதான் பேசேன் !


என்ன பேச ?


ஏதாவது !


என்ன ஏதாவது ?


ஏதாவது என்றால் ஏதாவது !


சரி ... சரி .... மதியம் என்ன சாப்பிட்டாய் ?


தயிர் சாதம் !


புளித்த தயிர் ! புளித்த பதில் !

மதிய உணவை மாற்றவே மாட்டாயா நீ ?


ம்ம்ஹூம் ..... மாட்டேன் . மாற்றினால்

தொப்பை வந்துவிடும் உன்னைப்போல !


ஒ.... குத்திக்காட்டுகிறாயா ?

ஆறுவாரத்தில் ஆறு கட்டமைப்புகளோடு ( six pack )

வந்து அசத்தப் போகிறேன் பார் !


ம்ம்ம் பார்க்கத்தானே போகிறேன் !


வீட்டில் யாருமில்லையா ?


...................................................


என்னவாயிற்று ? என்னவாயிற்று ?


அப்பா வந்து பார்த்துவிட்டுப் போகிறார் !


போய்விட்டாரா ?


போய்விட்டார் .


அவருக்கு நான் வைத்த

பெயர் என்ன தெரியுமா ?


என்னவாம் ?


பஞ்சு மிட்டாய்த் தலையன் !


ஏய் படவா............


உன் அம்மாவின் பெயர் தெரியுமா ?


சொல்லித்தொலை !


உருளைக்கிழங்கு மூட்டை !


உதைக்கப் போகிறேன் உன்னை !


உனக்கும் கூடப் பெயர் இருக்கிறது .


கஷ்டகாலம் ........ சொல்லாதே


குள்ளக்கத்திரிக்காய் .......


உன்னை..... உன்னை..........


சரி ... சரி ..... சமாதானம் ! சமாதானம் !


என் மாமியாக்காரி என்ன செய்கிறாள் ?


சமைக்கிறாள் .


என்ன சமையல் ?


பூரிக் கிழங்கு !


ஏய் ....... வேடிக்கையைப் பார்த்தாயா ?

உருளைக்கிழங்கே உருளைக்கிழகைச் சமைக்கிறது !

ஐயோ ......... ஐயோ ...........


சகிக்கவில்லை ! நிறுத்து உன் பேச்சை !


வெள்ளைப் புறா ! வெள்ளைப் புறா !


என்னது ?


மண்டு ........ சமாதானம்டி ........


....................................


என்னது , இங்கு சூழ்நிலை சிவப்பாகி விட்டது !

அங்கு வெட்கப்படுகிறாயா என்ன ?


தெரியாத மாதிரி கேட்காதே !

" டி " சொன்னால் எனக்கு வெட்கம் வரும்

எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் !


இன்னும் என்னவெல்லாம் சொன்னால்

உனக்கு வெட்கம் வரும் ?


ஆசை ...... தோசை ..... அப்பளம் ......... வடை .........


சரி ஆசையே !

சரி தோசையே !

சரி அப்பளமே !

சரி வடையே !


...................................


ஏய் சில்லறைக் காசுகளை

கீழே சிந்தி என்ன விளையாட்டு ?


லூசு .......... நான் சிரித்தேன் !


பேருந்தில் போகும்போது சிரித்து வைக்காதே

தொலைந்தான் நடத்துனன் !


விட்டு விடேன் ...... என்னால் முடியவில்லை ................


சரி ..... நாம் எப்போது சந்திக்கலாம் ?


இப்போது முடியாது


மூன்று வாரங்களாகி விட்டதடி செல்லச் சிறுக்கி ................


அடுத்த வாரம் பரீட்சை இருக்கிறது !


பரீட்சையைக் கண்டுபிடித்தவன் பேதியில் போக !


அப்போ.... கல்லூரியைக் கண்டுபிடித்தவன் ........?


எனக்கு வாயில் நன்றாக வருகிறது !

எதையாவது சொல்லிவிடப் போகிறேன் !


சரி ..... அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் நாம் பார்க்கலாம் ..........போதுமா ?


போதாது ! இப்போது ஒரு முத்தம் கொடு !


ச்சீய்


ஏய் .... ஏய் .... கொடேன் .........


மாட்டேன் முண்டமே ..........


நானும் வாங்காமல் வைக்கமாட்டேன் முண்டமே ................


சரி ..... ஒரு நிமிடம் இரு .........


காத்திருக்கிறேன் காதலியே ........


.........................................


...........................................


ஏய் ..... என்ன சத்தத்தையே காணோம் ?


ஒன்றுமில்லை .........

ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதால் ,

அலைவரிசை சரியாகக் கிடைக்கவில்லை !


கொல்லாதே கிறுக்கா .................


அப்புறம் .....

ம்ம்ம் ................

என்ன ம்ம்ம்ம் .......... ?

ம்ம் என்றால் ம்ம்ம் !

ஏதாவது பேசேன் !

நீதான் பேசேன் !

என்ன பேச ?

ஏதாவது !

என்ன ஏதாவது ?

ஏதாவது என்றால் ஏதாவது !........................................






















Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...