Skip to main content
கல்லூரிக் கன்னியும்

வாகனக் கணவனும் !



அன்று ,

அதிகாலையில் எழும்போதே

அவளை நினைத்து

ஆவலாய் எழுந்தேன் !


அவள் ?


காலை வேளையில்

கடந்து போகும்

கல்லூரிக் கன்னி !


குனிந்தே வருபவள்

அருகே வந்ததும்

நிமிர்ந்து பார்த்து

நகர்ந்து போவாள் !


எனக்கு மட்டும்

மழை பொழியும் !


இன்று எப்படியும்

இனிதாய் சிரித்து ,

இளங்கிளியை இன்பமாய்

இம்சித்து விடவேண்டும் !

என்ற தீர்மானத்தில்

இருந்த போதும் ,

இந்தக் கவிதை

அதைப் பற்றி மட்டுமல்ல !


வண்டி சாவியை

வைத்த இடம் தெரியவில்லை !


தொலைந்த சாவியால்

தேகத்தின் தினவும்

தொலைந்து போனது

அன்றைய தினத்தின்

கனவும் கலைந்துபோனது !


வண்டி ,

தேடி வாங்கிய

தவணை வண்டி !

அதனால் தான்

சாவியும்

தவணை முறையில்

தினமும் தொலைகிறது !


ஒருமுறை ,

தொலைந்ததைத் தேடி

தவித்த போது

தொலைக்காட்சிப் பெட்டியின்

தலையில் இருந்ததென

தங்கை வந்து தலையில் குட்டி

திட்டிக் கொடுத்தாள் !


இன்னொரு முறை

படுக்கை விரிப்பில்

பார்த்த அன்னை ,

பொறுப்பே இல்லையென்று

பொருமிப் போனாள் !


மற்றொருமுறை ,

குளியலறையில்

கண்டெடுத்த தந்தை

கண்டித்து விட்டே

கொடுத்துச் சென்றார் !


இப்போது

வியூகம் அமைத்துத்

தேடினாலும் ,

வாகனக் கணவன்

ஒளிந்து கொண்டு

வித்தை காட்டினான் !


வாகனக் கணவன் ?

வாகனத்தின் பூட்டைப் புனர்பவன் !


வலைவீசித் தேடினாலும்

வகையாய் மாட்ட - அது என்ன

விலாங்கு மீனா ?


சல்லடை கொண்டு

சலித்தாலும்

சடுதியில் சிக்க - அது என்ன

சில்லறைக் காசா ?


இன்றைக்குப் பார்த்து

அலுவலகத்தில்

அவசியப் பணியொன்றை

அவசரமாய் முடிக்க வேண்டும் !


நேற்று

பாதியில் விட்ட

புள்ளிவிபரத்தை - இன்று

பத்து மணிக்குள்

பதிந்து கொடுக்க வேண்டும் !


தவறினால் ,

மேலதிகாரியின்

நாராசப் பேச்சிற்கு

நாய் கூட நாணிச் சாகும் !


இன்று

என்ன தவறு செய்தேன் ?

அல்லது

செய்ய இருந்தேன் ?


இது

சாவு தண்டனை அல்ல

சாவி தண்டனை !


யோசித்துப் பார்த்ததில் ,

இளங்கிளி தான்

இடறி வந்தாள் !

இன்று

கல்லூரிக் கன்னியை

கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என

கடவுளிடம்

கற்பூரம் அடித்தேன் !


மறுநொடியே ,

" வண்டில பார்த்தியா "

என்றொரு அசீரிரி !

அம்மாதான் சொன்னாள் .

ஆண்டவனே சொன்னது போல

விரைந்து ஓடி

வெளியே வந்தேன் !


சொருகிய சாவியைக்

கண்டவுடன்

உறைந்த உயிர்

உருகி வந்தது !


வேகமாய் ஏறி

விரட்டி ஓட்டினேன் !


என் காலை நேர தேவதை

எதிரே வந்தாள் !

என்னையே பார்த்தாள் !

எதோ சொல்லவும் வந்தாள் !


நான் ,

சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு ,

சாலையை மட்டும் பார்த்தபடி

சென்று விட்டேன் !


அடுத்த நாள்

அவள் வரவில்லை !

அதற்கும் அடுத்த நாளும்

அவள் வரவில்லை !

வழியை அவள் மாற்றினாளா ?

அல்லது

விதி மாற்றியதா ?

தெரியவில்லை !


இரண்டு மாதங்களாகி விட்டன

இளங்கிளி கண்ணில் பட்டு !


இப்போதெல்லாம் நான்

எவளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!






Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர