தம்பீ கேள் ..........
மேலே பார் வானம் உள்ளது !
தாங்கிக்கொள்ள தரணி இருக்கிறது !
சோகத்தில் குனிந்து கிடக்கிறாய் !
முயன்று பாரேன் !
முதுகு நேராகும் !
ஏளனங்கள் ,
ஏணிகள் !
அவமானங்கள் ,
ஆசீர்வாதங்கள் !
கேலிகள் ,
வெற்றியின் தோழிகள் !
இகழ்ச்சிகள் ,
இளைப்பாறக்கிடைத்த
தூண்கள் !
தூற்றுதல்கள் ,
தகுதியை எடை போடும்
தராசுகள் !
பொல்லாங்கு சொல்வோருக்கு ,
புன்னகையைப் பரிசளி !
பழித்துக் காட்டுவோருக்கு ,
பாசத்தை விருந்து வை !
பிறகு பார் !
வருங்காலம்
உன்னை தோளில் ஏற்றி
தூக்கி நிறுத்தும் !
வரலாறுகள் ,
வரிசையில் வந்து
மாலை சூட்டும் !
அவமதிப்புகள் இல்லையென்றால் ,
அண்ணல் காந்தியையும் ,
அபிரகாம் லிங்கனையும் ,
அவனி இழந்திருக்கும் !
காயங்களை ,
கட்டித்தழுவு !
காப்பியத்தின் தலைவனாவாய் !
வசைகளை ,
வணங்கித்தொழு !
வரலாற்றின் நாயகனாவாய் !
Comments
Post a Comment