பேரின்பம்
ஆசையில் அலுத்து ,
அனுபவம் பழுத்து ,
தாகத்தைத் தடுத்து ,
மோகத்தை விடுத்து ,
தேகத்தை ஒடுக்கி ,
காமத்தை அடக்கி ,
அறிவில் குறைந்து ,
உணர்வில் நிறைந்து ,
இல்லறம் விட்டு ,
துறவறம் தொட்டு ,
கானகம் ஏறி ,
ஆணவம் மீறி ,
காலம் கடந்து ,
உள்ளே நடந்து ,
உருவத்தை உழுது ,
அருவத்தைத் தொழுது ,
ஞாலம் மறந்து ,
ஞானம் பிறந்து ,
அறிவிலே கனிந்து ,
அண்டத்தைப் பணிந்து ,
உள்ளம் பகுத்து ,
உயிரை உகுத்து ,
சுவர்க்கம் புணர்ந்து ,
சூனியம் உணர்ந்து ,
இருத்தலில் இருந்து ,
தொலைதலில் தொலைந்து ,
இறவாமலும் ,
இறந்து பிறவாமலும் ......
பிறவாமலும் ,
பிறந்து இறவாமலும் ..........
குறிப்பு : இக்கவிதையின் இறுதிவரிகள் என் அலுவலக மேலதிகாரி திரு ராமதாஸ் அவர்களுடையது !
Comments
Post a Comment