Skip to main content
மன்னிக்காதே தாயே



இந்த நூற்றாண்டின்

இறுதி விவசாயி நான் !


மகன் மென்பொருள் மேதை !

மகள் அமெரிக்கப் பேதை !


அடுத்த தை வந்தால் ,

அகவை அறுபது !

பத்தினி போய்ச்சேர்ந்து

ஆகிவிட்டன ஆண்டுகள் இருபது !


இப்போதெல்லாம் நான் ,

பேச முடிந்த ஊமை !

கேட்க முடிந்த செவிடன் !

பார்வையைப்பற்றிக் கேட்கிறீர்களா ?

கண்களைத் தான்

தொலைக்காட்சிப்பெட்டிக்குத்

தாரை வார்த்துத் தந்துவிட்டேனே !


"ஒரு காலத்தில் ,

யானை கட்டிப் போரடித்தோம் !

கழனி கழனியாய்

உழவு செய்தோம் !

களம் களமாய்

நெல் குவித்தோம் !

இப்போதைய சாகுபடி என்ன ? "

முந்தாநாள் கனவில்

முப்பாட்டன் வந்து கேட்டான் !


விதை விதைத்தவன்

வீழ்ந்து விட்ட ,

நாற்று நட்டவன்

நாணிச் செத்த ,

நேற்றைய நிலவரத்தை

கடைசி வரை மறைத்துவிட்டேன் !


இப்போதெல்லாம்

அரிசிக்கு பதில் அசைவம் !

அதிகாலையில் ஆட்டிறைச்சி !

மதியத்தில் மாட்டிறைச்சி !

இராப்பொழுதில் இறால் , மீன் , நண்டு இத்யாதிகள் .....


மாட்டிறைச்சிக்கு மாற்றாய் ,

மனித இறைச்சி வருவதற்குள் ,

மாண்டு விட வேண்டும் !


வெளியே என் அன்னை

குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறாள் !

அவளைக்கூறு போட்டுக் கூவி ,

விற்கின்றன வியாபார நாய்கள் !


ஒரு காலத்தில் ,

பச்சை பச்சையாய்ப் பூத்தவள் !

வண்ண வண்ணமாய் விளைந்தவள் !

கார்மேகப் போர்வைக்குள்

மழைத்தந்தையுடன்

உறவாடிக்களித்தவள் !


தன் உதிரத்தை உணவாக்கி

உலகுக்கெல்லாம் ஊட்டி விட்டவள் !

தென்றலாய்த் தாலாட்டி

தரணியையே தூங்கச் செய்தவள் !


தங்கம் தங்கமாய்த் தந்தவள் - இப்போது

அங்கம் அங்கமாய் அறுபட்டுக்கிடகிறாள் !


அவள் பாகங்களைப்

பங்கு போட்டு பணம் பண்ணும்

பிசினஸ் புண்ணியவான்கள்

பயங்கரமாய்ச் சிரிக்கிறார்கள் !


என் அன்னை என்ன செய்வாளோ ?

பாவம் ! புழம்பித் தள்ள அவளிடம்

புழுதியும் மீதி இல்லை !

கதறியழ கண்ணீரில் ஈரம் இல்லை !

வெளியே சென்றால் ,

காப்பாற்றச் சொல்லி

தறுவாளே என நான்

வீட்டுக்குள்ளேயே சிறை இருக்கிறேன் !


அன்னையே ,

தாயே ,

அம்மா ,

என்போன்ற

மானங்கெட்ட மகன்களை

முடிந்தவரை மன்னிக்காதே !!!











Comments

  1. Ji... wonderfull...
    vegetation of Green soon will perish...
    Something has to be done

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...