Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை கட்டை பிரம்மச்சாரிகளுக்கு ............. காதலிப்பவர்கள் படிக்கவேண்டாம்


விதியே முடிந்து விட்டது



எதிரே வருகிற எவளும்

ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !


திருமதிகளைக் கண்டால்

தலை தானாய்க் குனிந்து கொள்கிறது !


வலைகளில்

வலைவீசத் தெரியவில்லை !


மின்னஞ்சல்களில்

முயன்று பார்க்கத் தோன்றவில்லை !


குறுஞ்செய்திகளில்

குசலம் விசாரிக்க யாருமில்லை !


வருடக்கணக்காய்

வீட்டில் வரன் பார்க்கிறார்கள் !


நடுமீசையில் எட்டிப்பார்க்கிறது

நரைத்த முடி ஒன்று !


பித்தம் என்று

பித்தலாட்டம் செய்தாலும்

கயமையைக் கண்கள்

காட்டிக்கொடுக்கின்றன !


பாதி வருடம் போனால்

பாதிக் கிழடு என்பார்கள் !


கல்லூரிகளில்

காதல் கோட்டை

கட்டாமல் விட்டது

கடைசியில் ஓட்டையாகி விட்டது !


பணியிலாவது

பார்த்துக்கொள்ளலாம் என்றால் ,

ஆண்கள் மட்டுமே

அணியில் உள்ளனர் !


தொலைகாட்சி மட்டுமே

தற்போதைய தோழி !


பல்போன கிழவிதான்

பக்கத்து வீட்டின் பேச்சுத் துணை !


நோயில் படுத்தால்

நாதியில்லை கேட்பதற்கு !


சுயசமையலைச் சாப்பிட்டே

சுரணை செத்துவிட்டது !


அழுக்குத் துணிகளை அலசியே

ஆயுள் ரேகை தேய்ந்து விட்டது !


தவிப்பைத் தாங்காமல்

தலையணை தவிக்கிறது !


பெருமூச்சில்

போர்வையே பொசுங்குகிறது !


பாயில் பக்கத்தில் படுக்க

பேய் கூட பயக்கிறது !


பேருந்தில்

பெண்களே இருப்பதில்லை !


திரையரங்குகளில்

தேடினாலும் கிடைப்பதில்லை !


கோவில்களில் குடியே இருந்தாலும்

கடைக்கண் பார்வையைக்

கன்னிகள் காட்டுவதே இல்லை !


வீதி வீதியாய் அலைந்தாலும்

விரக்திதான் விஞ்சுகிறது !


அழகு இல்லாததால் அலைவரிசை

அந்தரத்தில் அலைகிறது !


கற்பனையைக் காதலித்தாலும் ,

கற்பனையில் காதலித்தாலும்

பருகக் கிடைப்பது கானல்நீர்தான் !


இளமையின் எழுச்சி

இற்றுப்போய் விட்டது !


மன்மதப் பாடம்

மறந்து போய் விட்டது !


தனியாகவே காலந்தள்ள

தைரியம் பிறந்தாலும் ,


விடியும் விடியும் என்று காத்திருந்து ,

விதியில் பாதி முடிந்து விட்டது !!!












Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர