Skip to main content
வீரம்


குதிரைகள் கனைத்தன !

"அனைத்தும் ஆயத்தம் அரசே ! "

தலை வணங்கித்

தகவல் சொன்னான் தளபதி !


"யானைப்படை

எப்போதோ தயார் !"

பணிந்து சொன்னான் படைத்தலைவன் !


"மன்னர் வாழ்க "

உவந்து சொன்னான்

உப தளபதி !


வீரத்தாய்

நெற்றியில் திலகமிட்டாள் !

உத்தம பத்தினி ,

உச்சியில் முத்தமிட்டாள் !

தங்கத்தனையன்

தழுவிக்கொண்டான் !


பத்துவயதுச் சிறுவனொருவன்

புழுதியில் புரண்டழுதான் .

போருக்கு அவனும் வருகிறானாம் !


நிறைந்த குடிமக்கள்

நிறைவாய்ப் பார்த்தனர் .


வீரவாழ்த்துக்கூறி ,

வழியனுப்பினர் !


நாங்கள் ,

அறப்பால் குடித்துவிட்டு

மறப்பால் வார்க்கப் புறப்பட்டோம் !


பத்து சிங்கங்கள்

பூட்டிய ரதத்தில்

பயணம் தொடங்கியது !


களத்தில்

குவிந்திருந்தான்

போரின் பங்காளன் !


தருமத்தை திவிட்டு ,

யுத்தத்தை ஆரம்பித்தோம் !


வாளோடு வாள் !

தோளோடு தோள் !

கண்ணுக்கு கண் !

பல்லுக்குப் பல் !

குருதிக்கு குருதி !


மரணத்தின் ஓலத்தைவிட ,

வீரத்தின் முழக்கமே ,

விஞ்சி நின்றது !


எதிர் நாட்டவனொருவன்

எனை நோக்கி வேல் எறிந்தான்

எங்கிருந்தோ வந்த

என் நாட்டு வீரன் - அதை

நெஞ்சில் வாங்கி நிமிர்ந்து நின்றான் !


தலைவனைக் காப்பாற்றிய

தன்மானச் சிரிப்போடு

இறுமாப்பாய் இறந்து போனான் !


அவனுக்காய்

கண்களில் வழிந்தது உதிரம் !

கதறி அழுதது இதயம் !


ஒரே ஒரு அம்பை விட்டு

எதிரி நெற்றியில் வைத்தேன்

இரத்தப்பொட்டு !


முதுகின் பின்னேயிருந்த

மற்றோர் எதிரி

முன்னே வந்து

முறைத்து நின்றான் !


அந்தோ ...........

அவனிடம் ஆயுதம் ஏதுமில்லை !


வாளை வானில் விட்டெறிந்து ,

அம்புகளை அந்தரத்தில்

தூக்கிப்போட்டு ,

தோளைத்தட்டி ,

"வாடா " என்றேன் !


அடுத்து நடந்தது ,

வில் யுத்தமல்ல

மல் யுத்தம் !


எட்டாவது குத்தில் ,

எதிரி வீழ்ந்தான் !


வீரத்தில் மீசை

மேலும் மேல்நோக்கி வளைந்தது !


அடுத்தாற்போல ,

எதிர் நாட்டு மன்னனே

எதிரே வந்தான் !


வாட்சண்டைக்கு அழைத்தான்

விரும்பி ஏற்றேன் !


சண்டை ஆரம்பமானது !

வாளோடு வாள்

உரசியதில் உண்டான

வெளிச்சத்தைப் பார்த்து

பயந்த சூரியன்

மேகத்தின் பின்னே பதுங்கினான் !


இருபடைகளும்

திரண்டு நின்று பார்த்தன .


எதிர்நாட்டு அரசன்

தன தாயிடம் இருந்து

வீரப்பாலைச் சற்று

அதிகமாய்க் குடித்திருப்பான் போல !


அவன் வீசிய வாள் ,

என் நடுநெஞ்சைப் பிளந்து நின்றது !

வீசியவனே விக்கித்து நின்றான் !


படைகள் பதறின ,

எட்டுத்திக்கும் கதறின ,

எதிரிகளும் பகைமையை உதறி ,

கண்ணீர் உகுத்தனர் !


எனது முகம் ,

வீரத்தில் நிறைந்து இருந்தது !


எனக்கு கவலை இல்லை !

புழுதியில் புரண்டழுதானே ,

பத்துவயது சிறுவன் ,

அவன் போதும் !

என் நாட்டை எப்படியும்

காப்பாற்றி விடுவான் !


இறுதியாக ,

கைகட்டிக் காத்து நின்ற காலனை

கைதட்டி அழைத்தேன் !









Comments

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர