காதல் .........
வாலிபத்தின் பூஞ்சோலை - இது
வசந்தத்தின் தொழிற்ச்சாலை !
இளமையின் பூமாலை - இது
இதயத்தின் பாமாலை !
நினைவுகளின் நெடுஞ்சாலை - இது
உள்ளங்களின் உருக்காலை !
கவிதையின் கடலலை - இது
புதுமையின் பண்பலை !
கற்பனையின் கரும்பாலை - இது
காமத்தின் காமாலை !
புத்துணர்வின் தேயிலை - இது
புனிதத்தின் மாவிலை !
உணர்வுகளின் மாமலை - இது
உறங்காத எரிமலை !
பொழுதுகளின் பொன்மாலை - இது
தனிமைகளின் தார்பாலை !
நெகிழ்ச்சியின் நீரலை - இது
மகிழ்ச்சியின் காற்றலை !
சுகந்தத்தின் சூழ்நிலை - இது
வெளிச்சத்தின் விடிகாலை !!!
Comments
Post a Comment