Skip to main content
விளையாடிப் பார்க்கலாம் வா




வாலிபா கேள் !


நீ குருடனல்ல

ருட்டில் இருக்கிறாய்

அவ்வளவு தான் !




நீ முடவனல்ல

காயம் பட்டவன் - அதை

காலம் ஆற்றி விடும்

கவலைப்படாதே !




கதவு சாத்தியிருக்கிறது என

கைகட்டி நிற்காதே !

ஒரு முறை தட்டிப் பார் !

அது பூட்டப்படாமல்

கூட இருக்கலாம் !




இரண்டு அடிகளை மட்டும்

நீயாக எடுத்து வை !

மூன்றாவது அடிக்கு

முயற்சி இல்லாமல்

முன்னேறி இருப்பாய் !




வெற்றிக்கான படிகட்டுகள்

மொத்தமே நூறு !

ஒரே ஒரு எட்டு வை !

நீ நின்றிருப்பது

தொண்ணூற்றி ஒன்பதாவது

படிகட்டாகக் கூட இருக்கலாம் !




உனது

ோகத்தின் ஈரங்கள்

ாமரைத் தண்ணீர் போல

தொலையட்டும் !

அவை தந்த

பாடத்தின் சுவடுகள்

பசுமரத்து ஆணிபோல

பதியட்டும் !




மரத்தடிகள்

இளைப்பாற மட்டுமே !

தங்குவதற்கு அல்ல .

முன்னேறி நடந்து பார்

மாளிகைக்கே மன்னனாவாய் !




காதல் என்பது

இளமையின் போதை மாத்திரை !

அதன் விலையும் அதிகம் !

விளைவுகளும் அதிகம் !

எச்சரிக்கையாய் இரு !




வெளிச்சத்தில் இருக்கும்போதே

விளக்கையும் தேடிக்கொள் !

இனிமேலும் இரவே இல்லையென்று

இயம்ப இயலாது அல்லவா !




விதி என்பது வீணர்களின் வார்த்தை !

சதி என்பது சோம்பேறியின் சாக்கு !




அறிவுரைகளை

அவ்வப்போது ஏற்றுக்கொள்

அவை அனுபவித்தவனின்

ஆசிர்வாதங்களாக இருக்கலாம் !




முயற்சியிடம் தோற்றுப்போகும்

முதல் எதிரி யார் தெரியுமா ?

விதிதான் !

வருந்தாதே !




தோள்களின் தினவில்

தரணியையே ஆளும்

தகுதி பெற்றவன் நீ !

தயங்காதே !




நீ

நெட்டி முறித்தால்

சோம்பலின் சாரம்

வெளிறிப்போகும் !




நீ

எட்டி உதைத்தால்

ஏழு உலகமும்

எகிறிப்போகும் !




உலகம் ஒரு

விளையாட்டு மைதானம் !

சோம்பேறிகள்

விதியின் பக்கம் !

சாதனையாளர்கள்

முயற்சியின் பக்கம் !

அதிர்ஷ்டமும் , அவநம்பிக்கையும்

அவர்களின் அணி !

நேர்மையும் , நம்பிக்கையும்

நமது அணி !

விளையாடிப் பார்க்கலாம் வா !!!








Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...