Skip to main content
விளையாடிப் பார்க்கலாம் வா




வாலிபா கேள் !


நீ குருடனல்ல

ருட்டில் இருக்கிறாய்

அவ்வளவு தான் !




நீ முடவனல்ல

காயம் பட்டவன் - அதை

காலம் ஆற்றி விடும்

கவலைப்படாதே !




கதவு சாத்தியிருக்கிறது என

கைகட்டி நிற்காதே !

ஒரு முறை தட்டிப் பார் !

அது பூட்டப்படாமல்

கூட இருக்கலாம் !




இரண்டு அடிகளை மட்டும்

நீயாக எடுத்து வை !

மூன்றாவது அடிக்கு

முயற்சி இல்லாமல்

முன்னேறி இருப்பாய் !




வெற்றிக்கான படிகட்டுகள்

மொத்தமே நூறு !

ஒரே ஒரு எட்டு வை !

நீ நின்றிருப்பது

தொண்ணூற்றி ஒன்பதாவது

படிகட்டாகக் கூட இருக்கலாம் !




உனது

ோகத்தின் ஈரங்கள்

ாமரைத் தண்ணீர் போல

தொலையட்டும் !

அவை தந்த

பாடத்தின் சுவடுகள்

பசுமரத்து ஆணிபோல

பதியட்டும் !




மரத்தடிகள்

இளைப்பாற மட்டுமே !

தங்குவதற்கு அல்ல .

முன்னேறி நடந்து பார்

மாளிகைக்கே மன்னனாவாய் !




காதல் என்பது

இளமையின் போதை மாத்திரை !

அதன் விலையும் அதிகம் !

விளைவுகளும் அதிகம் !

எச்சரிக்கையாய் இரு !




வெளிச்சத்தில் இருக்கும்போதே

விளக்கையும் தேடிக்கொள் !

இனிமேலும் இரவே இல்லையென்று

இயம்ப இயலாது அல்லவா !




விதி என்பது வீணர்களின் வார்த்தை !

சதி என்பது சோம்பேறியின் சாக்கு !




அறிவுரைகளை

அவ்வப்போது ஏற்றுக்கொள்

அவை அனுபவித்தவனின்

ஆசிர்வாதங்களாக இருக்கலாம் !




முயற்சியிடம் தோற்றுப்போகும்

முதல் எதிரி யார் தெரியுமா ?

விதிதான் !

வருந்தாதே !




தோள்களின் தினவில்

தரணியையே ஆளும்

தகுதி பெற்றவன் நீ !

தயங்காதே !




நீ

நெட்டி முறித்தால்

சோம்பலின் சாரம்

வெளிறிப்போகும் !




நீ

எட்டி உதைத்தால்

ஏழு உலகமும்

எகிறிப்போகும் !




உலகம் ஒரு

விளையாட்டு மைதானம் !

சோம்பேறிகள்

விதியின் பக்கம் !

சாதனையாளர்கள்

முயற்சியின் பக்கம் !

அதிர்ஷ்டமும் , அவநம்பிக்கையும்

அவர்களின் அணி !

நேர்மையும் , நம்பிக்கையும்

நமது அணி !

விளையாடிப் பார்க்கலாம் வா !!!








Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர