Skip to main content
வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?



வாலிபா எங்கே செல்கிறாய் நீ ?

ஒரு நிமிடம் நில் !

நான் சொல்வதைக் கேள் !

நீ யார் என்கிறாயா ?

உனது நலம்விரும்பி

என்று வைத்துக்கொள்ளேன் .

என்ன விழிக்கிறாய் !

... நலம்விரும்பி என்பது

போன நூற்றாண்டோடு

வழக்கொழிந்த வார்த்தையாயிற்றே !

சரி ! இந்த நூற்றாண்டின் இறுதியோடு

அழியப்போகும் வார்த்தையைச் சொல்கிறேன் !

நண்பன் ! என்னை உனது நண்பன்

என்று வைத்துக்கொள்ளேன் !


எங்கே போகிறாய் ?

என்னது ! உறக்கத்தின் காதலியை

வாங்கப் போகிறாயா ?

.... மதுவா ?

மது - உறக்கத்தின் காதலி !

நல்ல உவமை !

நான் ஒன்று சொல்லவா ?

உறக்கத்திற்கு மனைவி

ஒருத்தி இருக்கிறாள் !

அவள் பெயர் உழைப்பு !

கைச்சிறையில் மனைவி

காத்திருக்கும்போது ,

காதலியை கடைகளில்

ஏன் தேடி அலைகிறாய் ?


இரவெல்லாம் பணி !

அயராத உழைப்பு !

முழுச் சூரியனை

முழுதாய்ப் பார்த்தே

மாதங்கள் மூன்று ஆகின்றன !

உனது புளித்த புத்திமதிகளை

போன நூற்றாண்டு பத்தாம் பசலிகளிடம்

வைத்துக்கொள் என்கிறாயா ?


உழைப்பு என்பது

மூளையின் மடிபையும் ,

பணத்தின் தடிப்பையும்

அதிகப்படுத்துவது மட்டுமல்ல !

அது ,

வியர்வையின் சொத்து !

உடல்நலத்தின் வித்து !


உன் உடம்பின்

கடைசி வியர்வையை

நீ எப்போது பார்த்தாய் ?

என்னது அப்படி ஒன்று

இருப்பதையே மறந்துவிட்டாயா ?

பரிணாம வளர்ச்சியில் ,

மனிதனிடமிருந்து காணாமல் போகக்கூடிய

உறுப்புக்களின் பட்டியலில்

வியர்வைச்சுரப்பிக்கே முதலிடம் !

இதயத்திற்குக் கூட இரண்டாமிடம் தான் !


உடல் வருந்திச் செய்யும்

எதுவுமே உழைப்புதான் !

நின்ற இடத்திலிருந்தே ஓடு !

குதி , குனி , நிமிர் !

கைகால்களை நீட்டி மடக்கு !

இருபது நிமிடங்கள் போதும் !

அன்றிரவு உறக்கம் வரவில்லைஎன்றால் ,

செருப்பால் என்னை அடி !


அடுத்ததாக ,

உனது அம்மாவை

கடைசியாக எப்போது நினைத்தாய் ?

கணக்கிடாதே ! அது ,

கடந்த வருடமாகக் கூட இருக்கலாம் !

காதலியிடம் நொடிக்கொருமுறை

சாப்பிட்டாயா ? சாப்பிட்டாயா ? என்று

உருகுகிறாயே !

அந்த வார்த்தையை

உன் தாயிடம் எப்போதாவது

கேட்டிருக்கிறாயா ?

இந்த உலகத்தில் எப்போதும்

உன் நலனை எண்ணியபடியே

வாழ அவள் ஒருத்தியால்

மட்டுமே முடியும் !

உறக்கம் வரவில்லைஎன்றால்

அவளிடம் ஐந்து நிமிடங்கள்

மனம் விட்டுப் பேசு !

மனங்குளிர்ந்த அவள் உள்ளத்தின் பூரிப்பு ,

உன்னைத்தாலாட்டித் தூங்கவைக்கும் !


உறக்கத்திற்கும் தாய்க்கும்

என்ன தொடர்பு என்கிறாயா ?

யுகம் யுகமாய் , தாய் தன் குழந்தையை

தாலாட்டித் தானே தூங்க வைத்தாள் !

அந்தத் தாலாட்டின் அதிர்வுகள் எல்லாம்

அண்ட வெளியில் உறைந்து போய்க் கிடக்கின்றன !

எங்கெல்லாம் தாயன்பு

என்கிற கதகதப்பு உண்டாகிறதோ ,

அங்கெல்லாம் அவை உருகி உருகி

பொழியத்தொடங்குகின்றன !

இது சொல்லப்படாத ஆனால்

நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை !


இதற்கு மேலும் நீ

மதுவைத் தேடித்தான் போவேன் என்றால் ,

உன் தாயிடம் ஒரு வார்த்தை

சொல்லி விட்டுப் போ !!!











Comments

  1. Uzhaippin unnathathai unarthum ithu nallathor kavithai... But it is age ji.. Antha antha vayasula manushan atha atha thedithan povan ( For Love)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்குபோட்டுப் பிரிப்பதுதான் ! ஏதோவொன்றை எண்ணைச்சட்டியில் பொரிப்பதுதான் ! நரகாசுரன் நமக்குள்ளே மரிப்பதுதான் ! ஒரு சங்கல்பத்தை நெஞ்சுக்குள் வரிப்பதுதான் ! வண்ண வேடிக்கையை வான் வெளியில் விர