Skip to main content
குறிப்பு : படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்கிற அளவுக்கு இந்தக்கவிதை அப்படி ஒன்றும் பிரமாதமானது அல்ல .



படைப்பாளிகள்


நாம்

கலையின் படைப்பாளிகள் !

மொழியின் பாட்டாளிகள் !


படித்தல் ஒரு தவம் !

படைத்தல் ஒரு வரம் !


வரம் பெற

தவம் செய்ய வேண்டும் !


"சூழலை ",

சூழ்நிலை கொடுக்கும் !


சிறிது நடந்தாலே ,

சிந்தனைகள் சேர்ந்துவிடும் !


காற்றில் அலையும்

கற்பனைகளைக் கைப்பற்றவில்லை எனில் ,

கைமாறிப் போகும் அபாயம் இருக்கிறது !


இதுவும் பிரசவம் போன்றதுதான் !

இங்கே , பிரசவிப்பவனும்

புதிதாய்ப் பிறக்கிறான் !


ஒன்றிலிருந்து மற்றொன்றாய் ,

மற்றொன்றிலிருந்து வேறொன்றாய் ,

வேறொன்றிலிருந்து இன்னொன்றாய் ,

கலை எப்போதும் ,

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் !

கவலை வேண்டாம் !


மனிதராய் இருந்து ,

கடவுளின் வேலையைச் செய்வதில் ,

அன்னைக்கு அடுத்தநிலையில்

இருப்பவர்கள் நாம் !


சிலசமயங்களில் ,

நமக்குள்ளேயே பொறாமை கொள்கிறோம் !

தாயின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும்

சகோதரனின் மீதான ,

பாசப் பொறாமை அது !


முடிச்சைப் போட்டு

முடிச்சை அவிழ்க்கையில் ,

மொழியின் கடலில்

அறிவைக் கடைகையில் ,

உணரப்படும் உயிர் வேதனை ,

நமக்கு மட்டுமே பரிச்சயமானது !


அகத்தே நிகழும் போதை இது !

இதை அனுபவிக்க ,

புறபோதைகளையும் நாடுகிறோம் !

தவறொன்றுமில்லை !


இது ,

காய்ச்சலில் காணும் குளிர்ச்சி !

அவஸ்தையில் அடையும் ஆனந்தம் !

நரகத்தில் நுகரப்படும் பேரின்பம் !




Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர