Skip to main content
குறிப்பு : படைப்பாளிகளுக்கு அர்ப்பணம் செய்கிற அளவுக்கு இந்தக்கவிதை அப்படி ஒன்றும் பிரமாதமானது அல்ல .



படைப்பாளிகள்


நாம்

கலையின் படைப்பாளிகள் !

மொழியின் பாட்டாளிகள் !


படித்தல் ஒரு தவம் !

படைத்தல் ஒரு வரம் !


வரம் பெற

தவம் செய்ய வேண்டும் !


"சூழலை ",

சூழ்நிலை கொடுக்கும் !


சிறிது நடந்தாலே ,

சிந்தனைகள் சேர்ந்துவிடும் !


காற்றில் அலையும்

கற்பனைகளைக் கைப்பற்றவில்லை எனில் ,

கைமாறிப் போகும் அபாயம் இருக்கிறது !


இதுவும் பிரசவம் போன்றதுதான் !

இங்கே , பிரசவிப்பவனும்

புதிதாய்ப் பிறக்கிறான் !


ஒன்றிலிருந்து மற்றொன்றாய் ,

மற்றொன்றிலிருந்து வேறொன்றாய் ,

வேறொன்றிலிருந்து இன்னொன்றாய் ,

கலை எப்போதும் ,

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் !

கவலை வேண்டாம் !


மனிதராய் இருந்து ,

கடவுளின் வேலையைச் செய்வதில் ,

அன்னைக்கு அடுத்தநிலையில்

இருப்பவர்கள் நாம் !


சிலசமயங்களில் ,

நமக்குள்ளேயே பொறாமை கொள்கிறோம் !

தாயின் அன்பைப் பகிர்ந்து கொள்ளும்

சகோதரனின் மீதான ,

பாசப் பொறாமை அது !


முடிச்சைப் போட்டு

முடிச்சை அவிழ்க்கையில் ,

மொழியின் கடலில்

அறிவைக் கடைகையில் ,

உணரப்படும் உயிர் வேதனை ,

நமக்கு மட்டுமே பரிச்சயமானது !


அகத்தே நிகழும் போதை இது !

இதை அனுபவிக்க ,

புறபோதைகளையும் நாடுகிறோம் !

தவறொன்றுமில்லை !


இது ,

காய்ச்சலில் காணும் குளிர்ச்சி !

அவஸ்தையில் அடையும் ஆனந்தம் !

நரகத்தில் நுகரப்படும் பேரின்பம் !




Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
அபார்ட்மெண்ட் சிறுவனே ................... அடே ! சிறுவா ! உன்னைத்தான் ! இங்கே பார் ! கணினி விளையாட்டை கணநேரம் ஒத்திவை ! கேள் ! விரிந்திருகிறது வீதி !  அதில், விளையாடுவது தானே நீதி ? கட்டம் கட்டு, குறுக்கே கோடிடு ! ஆடலாம் சடுகுடு ! கைக்குட்டை எடு , கண்ணைக் கட்டு ! ஆடு கண்ணாமூச்சி ! ஓடித்தொடுதல் ஆடியதுண்டா ? ஒற்றைக் காலிலும் ஓடித் தொடலாம் ! அதற்குப் பெயர்தான் நொண்டி ! ஆரோக்கியக் காசுகள் சேர்ப்பதில், அதுவொரு அற்புத உண்டி ! அப்புறம் இன்னோர் விளையாட்டு ! ஒருகால் மடக்கிக் குந்து ! தேவையில்லை பந்து ! குச்சியால் குச்சியை உந்து ! எம்பியெழுவதை, ' கில்லித்தட்டு '   -  என்றே நீ சொல்லித்தட்டு !  நிறம் கூறித் துரத்தும் ஆட்டம் பரிச்சையமுண்டா ? திருடன் போலீஸ் தெரியுமா ? நூல் பிடித்தோடி பட்டம் விட்டதில்லையா ? உத்திரத்தில் கயிறு கட்டி தூரி.............? என்னடா உனக்கு எதுவுமே தெரியவில்லை ! மேற்கண்ட விளையாட்டில் வலிமையாகும் உன் தசை ! வெறும் கணினியைத் தட்டுவதில் விரலுக்கு மட்டுமே விசை ! யாருமில்லையா வீட்டில் ? ஓ ! இரவுப்பணி முடித்து இன்னும் உறங்கும் தந்தை ! அழகுநிலையம் சென்று...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...