Skip to main content
போலிக் கவிஞன்


முப்பது கவிதைகளை ,

முடித்து விட்டு

உலகக் கவியாய்

உலா வருகிறேன் !


ஏழு எதுகைகள் ,

மூன்று மோனைகள் போதும்

பத்து கவிதைகள் பக்கம் பக்கமாய் ,

பூர்த்தி ஆகும் !


கற்பனையின் கருவறை

காய்ந்து கிடப்பதால் ,

குறிப்புத்தாளை கழிவறைக்கே

எடுத்துப்போகிறேன் !


எவனோ என்னை

"வாலி " என்றான் .

"போலி " என்பதே

பொருத்தமாயிருக்கும் !


நான் அடுத்த

வைரமுத்துவாம் !

கண்ணாடி முத்து என்பதே

கச்சிதமாய் இருக்கும் !


நல்லவேளை ,

கண்ணதாசனை விட்டுவிட்டார்கள் !

இல்லையெனில் ,

"கடுகுதாசன் " என்கிற

உப்பில்லாத உவமையை

தமிழுக்குத் தந்திருப்பேன் !


ஒருவேளைச் சோற்றை

உண்ணும்போதே ,

அடுத்த வேளையை

எண்ணிப்பார்க்கும்

சராசரி மனிதமனம்

படைத்தவன் நான் !


அதனால் தான் ,

பாராட்டப்படும் போதெல்லாம் ,

அடிவயிற்றிலிருந்து புறப்படும்

பயப்பந்து தொண்டையை அடைபபதால் ,

எனக்கு வார்த்தைகளே வருவதில்லை !


நான் ,

கலைமகளின் காலை

கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறேன் !

அவளோ உயரப் பறக்கிறாள் - நான்

அந்தரத்தில் அலைகிறேன் !


முன்னூறு பிரதிகள் கண்ட - என்

முதல் தொகுப்பை ,

முழுதாய்ப் படித்தவன்

நான் மட்டும்தான் !


ஒவ்வொரு கண்காட்சியிலும் ,

தலையில் துண்டு போட்டு

நிற்கும் ஒருவனை

நீங்கள் பார்த்திருக்கலாம் !

அவன் வேறு யாருமில்லை

என் முதல் தொகுப்பை

பதிப்பித்தவன் !


ஒருமுறை ,

ஆறாம் வகுப்புச்சிறுவன்

அடுக்கடுக்காய் எழுதியதை

ஆசை ஆசையாய் ,

என்னிடம் காட்டினான் !

அப்பாடா ......

அடுத்த தொகுப்பிற்கான

ஆறு கவிதைகள்

அடுத்தடுத்துத் தயார் !

இன்னும் ஏழு கவிதைகள் தேவை !

இருக்கவே இருக்கிறான்

ஏழாம் வகுப்புச் சிறுவன் !

அடுத்த கண்காட்சியில் நீங்கள் ,

தலையில் துண்டு போட்ட ,

இரண்டு பேரைப் பார்க்கலாம் !


என்னைப்போய்

கவிஞன் என்று வெளியில் சொல்லாதீர்கள் !

எவனும் வாய்வழியாய்ச் சிரிக்கமாட்டான் !





Comments

Popular posts from this blog

மீனவ வேதனை இதுவரையிலான எமது கண்ணீரால் கரிக்கின்ற கடல் - இனி செந்நீரால் சிவப்பாகும் ! கோடி முறை பொங்கினாலும் எமது கவலைகள் அலையைப்போல கடலுக்குள்ளேயே முடங்கி விடுகின்றன ! கடல் எங்களின் தாய் ! தாயன்பில் , தாயின் மீதான உரிமையில் எல்லைகளை ஏற்கத் தெரியவில்லை எங்களுக்கு ! கண்முன்னே பிள்ளைகள் சாவதை எந்தத் தாயும் தாங்க மாட்டாள் . ஆகவே , எங்களை வதைத்துக்கொல்லும் வழக்கத்தை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள் ! தயவு செய்து கடலில் வேண்டாம் ! கண்டனங்கள் , இரங்கல்கள் , அறிக்கைகள் , சந்திப்புகள் , தீர்மானங்கள் , நிவாரணங்கள் , இவைகளின் மீதான நம்பிக்கையும் எங்களைப்போலவே எங்களிடம் செத்து விட்டது ! ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் அன்னை மடியை விட்டு விடாத குழந்தைகள் நாங்கள் ! எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை !
  அதென்ன பிரமாதம் ! இதோ எழுதுகிறேன் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கவிதையை ! " கொடியில் தொங்கியபடி சொட்டிக்கொண்டிருக்கிறது என் சுயமைதுன லுங்கி ஐய்யர் வீட்டு மேல்தளத்தில் ! " சுயமைதுனக் கழிப்பறை என்றொரு கருத்தை கலாப்ரியா எழுதிவிட்டபடியால் சுயமைதுன லுங்கி ! பின் குறிப்பு : சுயமைதுனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்  சிவராஜ் சித்த வைத்திய சாலையை அணுகவும்  ! அல்லது இரவு பதினோரு மணிக்கு மேற்பட்டு தொலைகாட்சி பார்க்கவும் !
நேற்றுப்பெய்த மழையில் ............. நேற்றுப்பெய்த மழையில் , பூமி புதிதாய்த் தெரிந்தது ! மேகங்களின் தன்மை , வெண்மையாய் இருக்க , வானத்தின் நிறம் நீலமாய்த் தெரிந்தது ! பறவைகள் , சந்தோஷமாய் சிறகடித்தன ! அலாரம் வைக்காமலேயே ஆறு மணிக்கு விழிப்பு வந்தது ! கதிரவனைக் கண்டதும் க ைகள் தானாய்க் கும்பிட்டன ! அம்மா தந்த தேநீர் திகட்டாமல் தித்தித்தது ! குளிர்ந்த நீரும் சுகமாய்ச் சுட்டது ! அதிசயமாய் அப்பா கூட திட்டவில்லை ! தங்கை அன்போடு " அண்ணா " என்றழைத்தாள் தெருவில் நடந்தேன் அன்றைக் கென்று அனைவரின் வாசல்களிலும் அழகான கோலங்கள் ! அழித்து விடக்கூடாதென்ற அச்சத்தோடு அடி மேல் அடி வைத்தேன் ! தாயோடு வந்த சிறுமி ஒருத்தி , தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் ! எப்போதும் அழுகிற குழந்தை , இப்போது சிரித்தது ! மாமரம் ஒன்று மழை நீரால் ஆசீர்வதித்தது ! குறுக்கே வந்த வாகனக்காரன் சீறாமல் சிரித்துச்சென்றான் ! பெருமுயற்சிகள் ஏதுமின்றி பேர